search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் நகை அடகு கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம் போல சிவசுப்பிரமணியன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர் தனது செல்போனில் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை பார்வையிட்டுள்ளார்.

    அதில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் எதுவும் காட்டப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த சிவசுப்பி ரமணியன், உடனடியாக கடைக்கு புறப்பட்டு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நேற்று இரவில் அவர் கடையை பூட்டி விட்டு சென்றபின் திட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர்கள் நகை கடையை உடைத்து கடையில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், என மொத்தம் 1½ கிலோ வெள்ளி பொருட்களும், 8 பவுன் தங்கம், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களையும் உடைத்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதி.

    கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளத்தை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதியாகியுள்ளறதாக தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி காட்டூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

    திருவெறும்பூர்,  

    திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலச்சந்தரின் மனைவி ஓசூரில் உள்ள புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு

    தனது இரு மகன்களுடன் ஓசூர் சென்றுவிட்டார்.பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 8.5 சவரன் தங்க நகை மற்றும் 1.5 கிலோ மதிப்புள்ள 2 வெள்ளி பாத்திரங்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்த கூடிய மோடம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்து பாலச்சந்தரின் மனைவி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர்.இது குறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் சுப்ரமணியம்.

    இவரது வீட்டின் அருகில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆனா கிருஷ்ணர் சிலையும், அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத வேளையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள், கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியவைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுப்ரமணியத்தின் பக்கத்து நிலத்துக்காரரான சேகர் என்கிற சொட்டை சேகர் என்பவர் கொள்ளை சம்பவம் நடந்த நாளில் இருந்து ஆள் தலைமறைவாக இருப்பதால், அவர் கோவிலில் கொள்ளையடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்தது.

    பின்னர் அவரை சந்தேகித்த கிராம மக்கள் அவரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சேகர் நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் இருந்ததைக் கண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் சுப்பிரமணியத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த சுப்பிரமணியம் மற்றும் கிராம மக்கள் வந்து சேகரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் என்பவரது வீட்டிலும், இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சேகரின் உறவினர்கள் வீட்டில் அந்த சாமி சிலைகள், பூஜை சாமான்கள் மற்றும் சிலைகளை அவர் கொடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த கிராம மக்கள் சரக்கு ஆட்டோவில் வந்து புளியான்டப்பட்டி கிராமத்தில் அவர் கூறிய வீடுகளுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது பூஜை சாமான்கள் மட்டுமே இருந்தது. சிலைகளை காணவில்லை.

    மேலும் சாமி சிலைகளை வேறு எங்கோ மறைத்து வைத்துள்ளதாகவும் சேகர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனால், சேகரை அழைத்து கொண்டு அவர் தெரிவித்த இடங்களில் சரக்கு ஆட்டோவில் கிராம மக்கள் சென்று சிலைகளை தேடி வருகின்றனர்.

    இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
    • மர்ம நபர்கள் கைவரிசை

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேசெட்டி அள்ளி அருகே உள்ள சின்ன கம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 59). தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். 23-ந் தேதி மதியம் தனது அண்ணன் மணி என்பவர் போன் மூலம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து வீட்டிற்கு வந்து தயாளன் பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தயாளன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அதே பகுதியில் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சிலம்பரசன் (37). இவர் பெங்களூரில் பழைய இரும்பு கடை தொழில் செய்து வருகிறார். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

    சிலம்பரசன் கடந்த 11-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பண்டிகை முடித்து கடந்த 17-ந் தேதி பெங்களூர் சென்றுள்ளார். சென்றவர் மீண்டும் 23-ந் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து நேற்று சிலம்பரசன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை குறித்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

    குறிப்பாக பாப்பாரப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வயதான பெண்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்பொழுது பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வருவது தொடர்ந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதற்கு அச்சப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பகல் நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூரில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் வசிப்பவர் சிவச்சரண் (வயது 42). இவர் விழுப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.நேற்று மாலை வீட்டிற்கு வந்த சிவச்சரண், வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது மர்மநபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக தப்பியோடினார். இவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பிவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதில் ஒரு பையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் சிவச்சரண் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபரை திருவெண்ணைநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர். ஆள்நடமாட்டம் உள்ள இடத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில், பகல் நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
    • சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கிஷோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கண்காணிப்பு காமிரா மூலம் கொள்ளையர் உருவம் தெரிந்தது
    • போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள செங்கத்துறையில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சுப்பாத்தாள் (வயது 65) என்பவரது வீடு உள்ளது.

    சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். சுப்பாத்தாளும் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று இருந்தார்.

    நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 2 பேர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தாலி செயின் மற்றும் அம்மனின் 5 கிலோ வெள்ளி கீரிடம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் மர்மநபர்கள் கோவிலின் அருகே உள்ள சுப்பாத்தாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டும், அருகே உள்ள வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அம்மனின் கீரிடம் மற்றும் தாலி செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்து செல்லும் காட்சிகள் பதி வாகி இருந்தது. காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.