search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது.

    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருடு போய் இருந்தது.
    • இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி பரக்கத் நகரில் வசித்து வருபவர் ஹாஜிமுஹம்மது (வயது 35). இவர் கத்தார் நாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று வெளிநாடு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் அவருடைய மனைவி தஸ்மிராநஸ்ரின் வடக்கு மாங்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவை உடைத்து, ரூ.25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை பவுன் தோடும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஹாஜி முஹம்மதுவின் சகோதரர் முகமதுமகாதீர் (18) என்பவர் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதில் திருடர்கள்பீரோ உடைக்கப்பட்டும், உடைக்கப்பட்ட பீரோ மற்றும் தரையின் மீது மிளகாய் பொடி தூவி, அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×