என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு- பழங்கள்"

    • பழங்களின் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
    • வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள் சாப்பிடுவார்கள். சிலர் பசிக்காக சாப்பிடுவார்கள். சிலர் பழத்தின் ருசி பிடிக்கும் என்பதற்காக விரும்பிய பழத்தை சாப்பிடுவார்கள். சிலர் சருமம் மிளிர வேண்டும் என்பதற்காக சாப்பிடுவார்கள். ஆனால் பழத்தை எப்போது சாப்பிடவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. பழத்தை எப்போது எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது? அதுகுறித்த பதிவுதான் இது. 

    காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?

    பலரும் காலைநேரத்தில் உணவுக்கு பதிலாக பழங்கள் எடுத்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். காலை உணவுக்குப் பதிலாக பழங்களை சாப்பிட முடிவு செய்தால் வெவ்வேறு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • தர்பூசணி
    • பப்பாளி
    • அன்னாசிப்பழம்
    • ஆப்பிள்
    • கிவி
    • வாழைப்பழம்
    • பேரிக்காய்

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும். பப்பாளி எடைகுறைவிற்கு உதவுவதோடு, செரிமானத்திற்கு உதவும். மேலும் மலச்சிக்கலை தடுக்கும். பசிக்கும் போது சாப்பிட அன்னாசிப்பழம் ஒரு சிறந்த பழம். நோயெதிர்ப்பு மண்டலத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்த அன்னாசி உதவும். ஆப்பிள் செரிமானத்திற்கு ஒரு சிறந்த உணவாகும். கிவி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு நல்லது. பேரிக்காய் பழம் நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது சிறுநீரகங்கள், குடல் மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். முழுமையாக பழத்தில் இருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்க வெறும் வயிற்றில் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

    தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும்

    எப்போது பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்?

    வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் நம்மில் பலருக்கும் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். ஏனெனில் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது. உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால், செரிமான பிரச்சனையை தரும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது. மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும், பலன்களும் முழுமையாகக் கிடைக்காது. பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்போ, அல்லது உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகோ பழத்தை எடுத்துக்கொள்ளலாம். 

    பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். சருமத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதனால் எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும், எந்தளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடுங்கள். 

    திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் உணவு- பழங்களை சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூட க்கோவில் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், கட்டிட தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மாடி அறையில் தூங்க சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டின் சமைய லறைக்குள் சென்ற அந்த கும்பல் அங்கிருந்த உணவு, குளிர்சாதன பெட்டியில் இருந்த பழங்களை சாப்பிட்டு விட்டு சாவகாச மாக பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடினர்.

    பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அந்த கும்பல்  அருகில் உள்ள மாயகிருஷ்ணன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருளாயி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த இருளாயி கூச்சலிடவே உஷாரான கொள்ளையர்கள் அங்கி ருந்து ஓட்டம்பிடித்தனர். அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றும் பலனில்லை.

    இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்திய போது 2  வீடுகளிலும் அந்த கும்பல் 8 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. கொள்ளை குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×