என் மலர்
நீங்கள் தேடியது "sugar"
- மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மைச் செயலாளரும், சர்க்கரை துறை ஆணையருமான விஜயராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
- சர்க்கரை ஆலையின் மூலம் செயல்படுத்தப்படும் எரிசாராய ஆலை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இணை மின் உற்பத்தி திட்டம் மற்றும் சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவை செய்யும் இடம், சர்க்கரை உற்பத்தியாகும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மைச் செயலாளரும், சர்க்கரை துறை ஆணையருமான விஜயராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
மோகனூர் பகுதிகளில் கரும்பு பயிர் செய்துள்ள வயல்கள், கரணை வெட்டப்படும் இடம், சர்க்கரை ஆலையின் மூலம் செயல்படுத்தப்படும் எரிசாராய ஆலை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இணை மின் உற்பத்தி திட்டம் மற்றும் சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவை செய்யும் இடம், சர்க்கரை உற்பத்தியாகும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது எரிசார ஆலையின் செயல்பாடு குறித்தும், விரைவில் தொடங்கப்பட உள்ள இணை மின் உற்பத்தி திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டின் நிலை குறித்தும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மல்லிகா, சர்க்கரைத் துறை ஆணையரிடம் எடுத்துக் கூறினார்.
அதனை தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆணையர் விஜயராஜ்குமார் பதிலளித்தார். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
- இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளதால் அனேக இடங்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5 டன் வரை சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது : -
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு கள் வரத்து அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.25, ரூ.22, ரூ.20 என அளவைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சர்க்கரை வள்ளிக்கி ழங்குகள் வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்தவை ஆகும். மேலும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த கிழங்குகள் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். எனவே இவற்றை பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நாம் சர்க்கரையை சாப்பிடும் போது, நமது உடலில் கொழுப்புகள் அதிக அளவில் சேர தொடங்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பின் அளவும் அதிகரிக்க கூடும். இதனால் தான், சர்க்கரை நோயாளிகளை இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில், இவை சர்க்கரையின் அளவை அதிகரித்து இதய நோய்களையும் உருவாக்கி விடும்.
நாம் சர்க்கரை சாப்பிடும் போது, அவை வயிற்றுக்குள் சென்று செரிமான மண்டலாத்தை அடைந்து விடும். சிறுகுடலில் உள்ள நொதிகள் அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தின் வழியாக மற்ற உறுப்புகளுக்கு அனுப்பி, இறுதியில் அவை ஆற்றலாக மாறி விடும்.

சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் இன்சுலின் உற்பத்தி சீர்கேடு அடையும். அதாவது, இவை ஹார்மோன்களிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதையே இவை உணர்த்துகிறது. இதனால், பல வித நோய்களின் வருகை படிப்படியாக அதிகரிக்க தொடக்கி விடும்.
மிக விரைவிலே வயதானவரை போன்று மாற்ற கூடிய தனித்தன்மை இந்த சர்க்கரைக்கு உள்ளது. அத்துடன் சருமத்தின் அழகும் மெல்ல மெல்ல குறைய தொடங்கி விடுமாம்.
சர்க்கரை நோய் வந்துவிட்டால், கூடவே இந்த ஞாபக மறதி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கி கொண்டு வந்து விடுமாம்.
நீரிழிவு நோய் இருக்கும் பலருக்கு இதயம் சார்ந்த நோய்களும் இருக்க கூடும். சர்க்கரையை அதிக அளவில் எடுத்து கொண்டால், இதய பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை வெறும் சர்க்கரையை சாப்பிடாமல், குளிர்பானமாகவோ, இனிப்பு உணவாகவோ, சாப்பிட்டாலும் பாதிப்பு அதிகம்.
மனிதனின் மனிதனின் நாக்கு ஒரு முறை ஒரு பொருளை சுவை கண்டு, பிடித்து விட்டால் அதனை அவ்வளவு சீக்கீரம் விட தோணாது. ஏனெனில், நீங்கள் உங்களை கட்டுப்படுத்தி குறைந்த அளவில் சர்க்கரையை எடுத்து கொண்டால், எந்த வித பெரிய ஆபத்தும் வராது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல் நோய், சிறுநீரக கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், பரவலாக இருக்கும் நீரழிவு நோய் என இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.
குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களை நோயாளியாக்குகிறோம். சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும், வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும் நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும், கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துகள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய் மாரடைப்பு ஏற்படுகிறது.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டினுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் சூழலை உருவாக்குகிறது. காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்தினாலே போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சர்க்கரையின் தொந்தரவில் இருந்து முழுவதும் விடுபட்டவர்கள். ஆக, நாவிற்கு மட்டுமே இனிப்பைத்தந்து உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
புதுடெல்லியில்14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.