என் மலர்
நீங்கள் தேடியது "Foods"
- தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் ‘தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி’ என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது
- திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.
கூகுள் தனது பயனர்களால் அதிகம் தேடப்படும் பொருட்கள், பெயர்கள் என அனைத்துவிதமான தேடல்களின் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அதிகம் தேடப்பட்ட A டூ Z அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவான இட்லி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் கொழுக்கட்டை, திருவாதிரை களி இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களை பிடித்த உணவுகள் குறித்து காண்போம்.
இட்லி
இந்த தேடலில் தென்னிந்தியாவின் முக்கிய உணவான இட்லி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வட இந்தியர்கள் என சொல்லலாம். காரணம் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. அப்போது அதிகம் இட்லி குறித்து தேடப்பட்டிருக்கலாம்.
Porn star martini
இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.
உகாடிச்சே மோடக்
உகாடிச்சே மோடக் என்பது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டை எனக்கூறலாம். விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கும்.
தேக்குவா (இனிப்பு பிஸ்கட்)
4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது.
உகாதி பச்சடி
உகாதி பச்சடி என்பது உகாதி பண்டிகையின் போது தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் செய்யும் ஒரு சிறப்பு உணவாகும். இது அறுசுவைகளின் கலவையாகும்.
பீட்ரூட் கஞ்சி
6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.
திருவாதிரை
திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.
கொழுக்கட்டை
10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. கொழுக்கட்டையை நாம் அனைவரும் அறிவோம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்க செய்யப்படும் முக்கிய உணவாகும்.
- மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம் நிறைந்தது.
- ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் நாடுகளில் பின்பற்றப்படும் பாரம்பரிய உணவுமுறை!
இதய நோய்களை தடுக்க பெரும்பாலும் மெடிட்டரேனியன் டயட் முறையை பின்பற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு காரணம் மெடிட்டரேனியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதம், கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தும் உணவு முறையாகும். இது, ஃபிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நாடுகளில் பல காலங்களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய உணவு முறையாகும். நாளடைவில் இந்த டயட் பிற நாடுகளுக்கும் பரவி, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
மத்தியத் தரைக்கடல் உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் குறைவாக இருப்பதற்கான சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
தூக்கம்
மத்தியத் தரைக்கடல் உணவுமுறை ஆரோக்கியமான தூக்கமுறைக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுமுறை தூக்கத்தை மேம்படுத்தும் என்றும், தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறதும் என்று கூறப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு
மத்தியத் தரைக்கடல் உணவில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள் நிறைந்துள்ளன. இவை சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.
மன ஆரோக்கியம்
மத்தியத் தரைக்கடல் உணவுமுறை மன ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த உணவுகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன. மனச்சோர்வை குறைக்கின்றன.
நீரிழிவு நோய்
மத்தியத் தரைக்கடல் உணவைப் பின்பற்றுபவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எடை மேலாண்மை
உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.

சிவப்பு இறைச்சிக்கு பதில் உணவில் கடல் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள்...
மத்தியத் தரைக்கடல் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளுங்கள். முதலில் உணவுமுறையில் பழங்களை சேர்க்க தொடங்குங்கள். பின்னர் ப்ரோக்கோலி அல்லது கேரட் போன்ற காய்கறிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து தானிய வகைகளை உணவில் சேர்க்க தொடங்குங்கள். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு, பன்றி இறைச்சி) சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மீன் மற்றும் மற்ற கடல் உணவுகளை சாப்பிடுங்கள். இந்த சிறிய மாற்றங்கள் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
மெடிட்டரேனியன் டயட்டை ஃபாலோ செய்தால் தவிர்க்கவேண்டிய உணவுகள்
- அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
- வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் பிட்ஸா போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
- கொழுப்பு நிறைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்.
- அதிகம் சோடியம் உள்ள உணவுகள்.
- நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் (மாட்டிறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் போன்றவை).
- பேஸ்ட்ரிகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்.
- வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
- இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலருக்கும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள். நம் வீடுகளில் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுப்பதையும் தவிர்க்க இயலாது. தீபாவளி, கண்டிப்பாக இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. ஆனால் தீபாவளி திண்பண்டங்களால் எடைக்கூடாமல் இருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில்கொண்டு சாப்பிடுங்கள்.
இனிப்புக்கு முன் புரதம் அல்லது நார்ச்சத்து
இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். இதனால் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.
நீரேற்றம்
விழாக்காலங்களில் நமது கவனம் முழுவதும் கொண்டாட்டத்தில்தான் இருக்கும். வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அம்மா சுடும் வடை, வீட்டில் இருக்கும் இனிப்பை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்வோம். தண்ணீரும் போதுமான அளவு எடுத்துக்கொள்ளமாட்டோம். அதனால் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதுவும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் மற்ற திண்பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டோம்.
சாப்பிட வேண்டுமா?
தீபாவளி என்பதால் உறவினர்கள் வீட்டிற்கு அதிகம் செல்லவேண்டியிருக்கும். அவர்களும் பாசத்தில் நிறைய உணவுகளை எடுத்துவந்து சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதற்கு நம் வயிற்றில் இடமே இருக்காது. இருப்பினும் அவர்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொள்வோம். அதை செய்யவேண்டாம். உண்மையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடலாம் என தோன்றினால் மட்டும் சாப்பிடுங்கள். அவர்கள் கொடுத்த அன்பிற்காக துளி அளவு மட்டும் எடுத்து சாப்பிட்டால் போதுமானது. வயிறு நிரம்பியிருக்கும்போது அடுத்தடுத்து உணவை உள்ளே செலுத்தாதீர்கள்.

அதிகளவு இனிப்பு பலகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்
திரையை தவிர்க்கவும்
சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது ஃபோனில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் டிவி பார்க்கும்போதோ அல்லது ஃபோனில் பேசும்போதோ நமது கவனம் உணவில் இருக்காது. கவனச்சிதறல், உட்கொள்ளல் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.
உடற்பயிற்சியை தொடரவும்
விடுமுறை என்றாலே நமக்கு ஓய்வுதான். அதுவும் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உணவுகள் அதிகரிக்கும்போது உடற்பயிற்சி தவிர்க்கப்படுகிறது. இது எடை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கூடுதல் முயற்சிகள் இல்லாமல், அதே எடையை நிர்வகிக்க உதவும் ஒரு மிகப்பெரிய வழியாகும்.
ஆரோக்கியமாக இருப்பதும், குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் நினைவுகளை போற்றுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, இந்த தீபாவளியில் ஒரு சில எளிய முயற்சிகளை எடுப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது.
- அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' எனக் கூறுவார்கள். காரணம் உப்பு இல்லையேல் எந்தப் பொருளையும் சாப்பிட முடியாது. அறுசுவை உணவாக இருந்தாலும் அந்த சுவையை உணர வைப்பதே உப்புதான். ஆனால் அதுவே அதிகமானால்...? நாம் சந்திக்கக்கூடிய விளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
உயர் ரத்த அழுத்தம்
அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. உப்பு ரத்த ஓட்டத்தில் தண்ணீரைத் தக்கவைத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
திசுக்களில் நீர் தேக்கம்
உப்பு அதிகமாக சாப்பிடுவதால் திசுக்களில் நீர் தேக்கம் ஏற்படுகிறது. அதிக சோடியம் உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கச் செய்கிறது. இதனால் கணுக்கால், பாதங்கள் அல்லது கைகளில் வீக்கம் ஏற்படலாம். இது நீரிழப்பு, வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
சிறுநீரக பிரச்சனைகள்
அதிகமாக உப்பு உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை கடினமாக்குகிறது. உடலில் உப்பு அதிகமாகும்போது சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்ட வேண்டியிருக்கும். காலப்போக்கில், இது சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் உப்பு அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு, சிறுநீர் கருமையாகி, அடர்த்தியாக வெளியேறி, கடுமையான துர்நாற்றம் வீசும்.

ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் உப்பு போதுமானது
தாகம்
உப்பு உணவை எடுத்துக்கொண்ட பிறகு வாய் வறண்டுப்போனது போல தோன்றும். ஏனெனில், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க நீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்க உடனே தாகம் எடுக்கிறது.
தூக்கக் கலக்கம்
அதிக உப்பு பயன்பாடு தூங்குவதில் சிரமம், நள்ளிரவில் விழித்தெழுதல், சோர்வாக உணர்தல், எழுந்திருக்கும்போது தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
செரிமான கோளாறுகள்
அதிக உப்பு உட்கொள்ளல் காரணமாக வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வுகள் கூட அதிகரிக்கக்கூடும்.
அடிக்கடி தலைவலி
அதிக உப்பை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.
இதயநோய்
நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,500 மில்லிகிராம் உப்பு எடுத்துக்கொண்டாலே போதும். அதிகப்படியான உப்பு பக்கவாதம் , இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
- பழங்களின் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
- வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள் சாப்பிடுவார்கள். சிலர் பசிக்காக சாப்பிடுவார்கள். சிலர் பழத்தின் ருசி பிடிக்கும் என்பதற்காக விரும்பிய பழத்தை சாப்பிடுவார்கள். சிலர் சருமம் மிளிர வேண்டும் என்பதற்காக சாப்பிடுவார்கள். ஆனால் பழத்தை எப்போது சாப்பிடவேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. பழத்தை எப்போது எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது? அதுகுறித்த பதிவுதான் இது.
காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?
பலரும் காலைநேரத்தில் உணவுக்கு பதிலாக பழங்கள் எடுத்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். காலை உணவுக்குப் பதிலாக பழங்களை சாப்பிட முடிவு செய்தால் வெவ்வேறு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தர்பூசணி
- பப்பாளி
- அன்னாசிப்பழம்
- ஆப்பிள்
- கிவி
- வாழைப்பழம்
- பேரிக்காய்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும். பப்பாளி எடைகுறைவிற்கு உதவுவதோடு, செரிமானத்திற்கு உதவும். மேலும் மலச்சிக்கலை தடுக்கும். பசிக்கும் போது சாப்பிட அன்னாசிப்பழம் ஒரு சிறந்த பழம். நோயெதிர்ப்பு மண்டலத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்த அன்னாசி உதவும். ஆப்பிள் செரிமானத்திற்கு ஒரு சிறந்த உணவாகும். கிவி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு நல்லது. பேரிக்காய் பழம் நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நமது சிறுநீரகங்கள், குடல் மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். முழுமையாக பழத்தில் இருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்க வெறும் வயிற்றில் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

தர்பூசணி உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கும்
எப்போது பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்?
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் நம்மில் பலருக்கும் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். ஏனெனில் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது. உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால், செரிமான பிரச்சனையை தரும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது. மேலும் பழங்களின் மூலம் கிடைக்கவேண்டிய ஊட்டங்களும், பலன்களும் முழுமையாகக் கிடைக்காது. பொதுவாக விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன. மேலும் உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்போ, அல்லது உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகோ பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். சருமத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதனால் எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும், எந்தளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடுங்கள்.
- தைராய்டு சுரப்பி குறைபாடு ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்தக்கூடும்.
மருத்துவ ரீதியாக தைராய்டு ஹார்மோன் குறைபாடு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். மனிதனின் கழுத்தில் உள்ள பட்டாம் பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. உடல் தனக்கு கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி கொள்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் இது உதவுகிறது. தைராய்டு சுரப்பி குறைபாடு (ஹைப்போ தைராய்டிசம்) இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்
முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி மற்றும் முள்ளங்கி. இதில் உள்ள காயிட்ரோஜன் தைராய்டு சுரப்பி உற்பத்தியை குறைக்கிறது. சோயாபீன்ஸ், சோயா பால், டோபு. இவற்றில் உள்ள காயிட்ரோஜன் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் தைராய்டு செயல்பாட்டை தடுக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அல்லது உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள், காபி (இது தைராய்டு மாத்திரைகள் உட்கொண்ட பின்னர், அவை வயிற்றில் இருந்து ரத்தத்தில் உறிஞ்சப்படுவதை தடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கிறது), மது பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள்.
தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
உணவில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும். மீன், இறால், பால் பொருட்கள், முட்டை, செலீனியம் நிறைந்த உணவுகள் (கடல் உணவுகள், கோழி, காளான், பூண்டு), ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் (சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள், ஆளி விதைகள், அக்ரூட்), முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை), மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் பெக்டின்கள் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு செய்யப்படும் எச்.பி.ஏ1சி (HbA1c) ரத்த பரிசோதனையில் ஒரு பொய்யான உயர்வை ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுத்தக் கூடும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்பியல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
- உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது இன்றைய பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதனை எளிதாக்கும் ஒரு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம்!

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
சமைக்கும்போது குழந்தைகளின் உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பழங்களை துண்டுகளாக வெட்டுவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறபோது உணவை உண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள். அவ்வாறு செய்கிறபோது விரும்பி சாப்பிடுவார்கள்.

காய்கறிகளையும், பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தைகள் முழு கவனத்துடனும் அதனை ரசித்து சாப்பிட முடியும்.
கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அவர்களைப் பயமுறுத்தாமல், அடிக்காமல் பொறுமையாக இருந்து, உணவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு உணவை சிறிய உருண்டைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விருப்பத்துடன் உண்பார்கள்.
- கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
- ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயகரமான நோயாக புற்றுநோய் உள்ளது. ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டறியும்போது குணப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில வகை உணவுகள், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த உணவுகள் பற்றி...

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்:
கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பிஸ்பெனால் ஏ என்ற வேதிப் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கார்பனேற்ற குளிர்பானங்கள்:
கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைட்ரஜனேற்ற எண்ணெய்:
உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
'மைக்ரோவேவ்' பாப்கார்ன்:
மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை:
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.

பதப்படுத்திய இறைச்சி:
பேக்கான், சாசேஜ் போன்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் அவை கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பிரிசர்வேட்டிவ்களுடன், நைட்ரேட்கள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.
சிவப்பு இறைச்சி:
'சிவப்பு இறைச்சி' எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது. குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.
ஊறுகாய்:
ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிட்ட இறைச்சி:
புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

கருவாடு:
உப்பிட்டு தயாரிக்கப்படும் மீன் கருவாட்டில், நைட்ரோசாமைகள் உள்ளன. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
மேற்கண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்வது புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராகின்றன.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, உச்சிப்புளி, தேவிபட்டினம் உள்பட பல்வேறு நகரங்களில் பெரும்பாலான உண வகங்கள், சாலையோர தள்ளு வண்டிகள், இறைச்சி விற்பனை கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்கப்படுவதில்லை. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால் பொது மக்களுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் தொடர்கின்றன.
ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் சுமார் 300க்கும் மேல் உள்ளன. இவற்றில் அசைவ சாப்பாடு, பிரியாணி என காலை, பகல், இரவு நேரங்களில் விற்பனை செய்யப் படுகின்றன. பெரும்பாலான உணவகங்கள் சுகாதார மற்ற நிலையில் உள்ளது.
தண்ணீர் தொட்டி, உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமற்ற நிலை, விதிமுறைப்படி பாத்தி ரங்கள் கழுவப்படாதது, திறந்தவெளியில் உணவு பண்டங்கள், பயன் படுத்தப்பட்ட எண்ணைகள், காலாவதியான இறைச்சி என பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.
நகர் பகுதியில் மட்டும் அதிகம் இருந்த துரித உணவகங்கள் தற்போது பல்வேறு இடங்களில் அதிகரித்து உள்ளன. இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை யினர் மற்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கண்துடைப்பு ஆய்வு பணிகளை பெயரளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
ரோட்டோர திறந்த வெளிக்கடைகள் பாதுகாப்பு இல்லாமல் உணவுகளை வைத்து விற்பனை செய்வது தொடர்கிறது. உணவு பாதுகாப்புத்துறையினரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய பொதுமக்கள் மட்டுமே.
சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
- நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
தாராபுரம் :
வாட்டி வதைக்கும் வெயிலால் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:- வெய்யில் காலத்தில், சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தண்ணீர் குறைந்தளவு குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதே இதற்கு காரணம்.அனைத்து காலங்களிலும், சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ளலாம். ஜூஸ் ஆக குடிக்காமல், நேரடியாக பழங்களாக உட்கொள்வது நல்லது.
தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அதைத் தவிர்க்கலாம்.
மாமிச உணவுகளை வாரம் ஒரு முறை உட்கொள்ளலாம். கோழி இறைச்சி, மீன் உட்கொ ள்ளலாம். அனைத்து விதமான பேக்கரி உணவு, உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் ஒரு சில கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்களை குறைவாக எடுக்க வேண்டும்.பிளாக் டீ, காபி, கிரீன் டீ, ஆகியவற்றை தவிர்க்கலாம். சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதற்குபதில், சாதாரணதண்ணீர் குடிப்பது சிறந்தது.கார்பன், செயற்கை நிறமிகள் நிறைந்த குளிர்பா னங்களை, முற்றி லும் தவிர்க்க வே ண்டும். முக்கி யமாக மது அருந்துவது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.உணவியல் நிபுணர்(டயட்டி சியன்) கவிதா கூறியதாவது:
வெய்யில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம்எடுத்துக் கொள்ளலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள், கம்மங்கூழ், கேப்பைக்கூழ் உட்கொள்ளலாம். இனிப்பு வகைகள், அதிக காரம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, காபி, டீ, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கம்மங்கூழ், கேப்பைக்கூழ் ஆகியவற்றை, 200 மி.லி., அளவு எடுக்க வேண்டும். நீர் மோர் குடிக்க லாம். இவையனைத்துக்கும் மேல், தண்ணீர் குடிப்பதே சிறந்தது.செயற்கை குளிர்பானங்களில், சர்க்கரை அதிகம் இருப்ப தால், அவற்றால் எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோயாளிகள், நீர்ச்சத்து காய்கறி எடுத்துக் கொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- சிராங்குடி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
- திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட உணவுகள் வைக்கப்பட்டன.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிராங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு வகை திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த விழாவிற்கு சிராங்குடி தலைமையாசிரியர் ஞானம்மாள் தலைமை ஏற்றார்.
ஆசிரியர் டேனியல் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தி னராக மூத்தாக்குறிச்சி தலைமையாசிரியர் செல்வராணி, பி.டி.ஏ ஆசிரியர் ரெத்தினப் பிரியா , (பாத்திமா மரியம் பள்ளி) தனியார் பள்ளி ஆசிரியர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உணவு வகை மாற்றம் பற்றியும் உணவு வகை மாற்றத்தினால் மனிதனின் ஆயுள் காலம் குறைவது பற்றியும் முக்கியமானவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் முக்கியமான வர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக சிறந்தவர்களாக உணவு திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் கண்மணி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
- நாயின் படத்திற்கு தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
கும்பகோணம்:
கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). ஓவியர்.
இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர்களுக்கு ராகமாலிகா என்கிற மகளும், மனோ என்கிற மகனும் உள்ளனர்.
பன்னீர்செல்வத்தின் மகன் மனோவும் ஓவியராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நாய் ஒன்றை ஜிஞ்சு என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர்.
இந்த வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.
இதனால் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இழந்து தவிக்கும் உணர்வில் பன்னீர்செல்வம் குடும்பமே துயரத்தில் மூழ்கினர்.
பன்னீர்செல்வம் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உருவப்படத்தை வீட்டில் வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஓவியர் பன்னீர்செல்வம் கூறுகையில், வளர்ப்பு நாயை, நாங்கள் வீட்டில் ஒரு நபராகவே வைத்து பராமரித்து வந்தோம். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதொல்லாம் அந்த நாய் தான் வீட்டுக்கு பாதுகாப்பு.
எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வோம்.
ஒருமுறை வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பை ஜிஞ்சு மட்டும் தனியாக குறைத்து விரட்டியது. திடீரென உடல் நலக்குறைவால் வளர்ப்பு நாய் உயிரிழந்தது.
இதனால் அதன் உருவப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தி வருகிறோம் என்றார்.






