search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cancer"

    • தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
    • சவுந்தர்யா மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல்.

    தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார்.

    இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக

    முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.
    • அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் அசோக். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.

    இதனால் அடிக்கடி கைதாகி சிறைக்கு செல்வதை அசோக் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அசோக்கின் மனைவி அவரை விட்டு புரிந்துள்ளார்.

    சமீபத்தில் பெங்களூரு கிரி நகரில் ஒரு ஐடி ஊழியரின் பைக் ஒன்றை அசோக்கும் அவரது கூட்டாளி சதீசும் சேர்ந்து திருடியுள்ளனர்.

    இந்த வழக்கின் அசோக் மற்றும் சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணையில் அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    "என் நண்பரின் மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பைக்கை திருடி விற்ற பணத்தை முழுவதும் அவரின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற போது அந்த நண்பர் தான் எனக்கு ஆதரவு கொடுத்தார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த உதவியை செய்ததாக" அசோக் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இதற்கிடையே, டி-சீரிஸ் இணை உரிமையாளரும், நடிகருமான கிருஷண்குமாரின் மகள் தீஷா குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

    20 வயதான தீஷா மும்பையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக ஜெர்மனியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தீஷா நேற்று உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புற்றுநோய்க்கு இளம்பெண் பலியானது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.

    அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசி-ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனையடுத்து முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாடுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக ரூ.1 கோடியை வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரிடம் பேசி நிலைமையை விசாரித்து உதவிகளை வழங்கினார்.

    • குடல் சார்ந்த பல வகை நோய்களை உருவாக்குகின்றன.
    • ரசாயனங்கள் உணவின் சத்துக்களை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

    உணவுப்பொருட்களை உண்ணும் ஆசையை தூண்டிவிட அவற்றில் கவர்ச்சிகரமான வண்ண நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.

    பல இடங்களில் பானிபூரியில் கூட கவர்ச்சிகரமாக இருக்கும் வகையில் அவற்றில் நீலம், மஞ்சள் மற்றும் ரசாயன நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் பொதுவாக நீரில் ஒரு சாயமாக பயன்படுத்தப்படுகின்றன.

    இது உயிரணு இறப்பு மற்றும் சிறுமூளை, மூளை தண்டு, சிறுநீரகம், கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மேலும் இது புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குக்கீஸ்கள், வறுத்து பொரித்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து உணவுகளிலும் இது போன்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களான சோடியம் நைட்ரேட், ஒலெஸ்ட்ரா என்னும் உணவு சத்து குறைக்கும் திரவம், ப்ரோமினேடட் வெஜிடபிள் எண்ணெய் என்னும் நரம்பியல் கோளாறை உருவாக்கும் தாவர எண்ணெய், மாவு பொருட்களை நொதிக்க வைக்க உதவும் பொட்டாசியம் புரோமைடு, குளிர்பானங்களை கெடாமல் வைக்கும் பொட்டாசியம், பியூட்டிலேடட் ஹைட்ராக்சினியால் என்னும் உணவை நீண்ட காலம் கெடாமல் வைக்கும் ரசாயனம் போன்றவை கலக்கப்படுவதாக உணவு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    கண்ணுக்கு தெரியாத இந்த வகை ரசாயனங்கள் மனிதர்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடலில் சேர விடாமல் தடுப்பதுடன் குடல் சார்ந்த பல வகை நோய்களை உருவாக்குகின்றன.

    பல நாடுகள் தற்போது இந்த வகை ரசாயனங்கள் கலந்த உணவுகளை தடை செய்ய வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு மாற்றாக காலிபிளவர், பூண்டு, மஞ்சள், பச்சை காய்கறிகள், தக்காளி போன்றவை புற்றுநோயை தடுக்க உதவுவதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பாதிப்பை தடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

    • நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
    • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.

    மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

    கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது.
    • 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.

    பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.

    அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

    • சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
    • பானிபூரியில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வட இந்தியாவில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருந்த பானிபூரி தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 260 பானிபூரி மாதிரிகளை சோதனை செய்த பின்னர் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்றும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனையடுத்து உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களுக்கு கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான்,
    • அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டார்.

    இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை' சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார்.

    அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக் கொண்டு அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஹேக்கட், ஸ்மார்ட்ஃபோன், லைன்ஸ், விஷ்லிஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் ஹினா கான் அவருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 36 வயது ஆகும் ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் மூன்றாம் நிலையை எட்டியுள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து அவர வெளியிட்ட அறிக்கையில் " எல்லாருக்கும் வணக்கம், நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன், நான் இந்த புற்று நோயை மீண்டு வருவதற்கான அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் இன்னும் அதிக வலிமையுடன் வருவேன். இந்த நிலைமையை புரிந்துக் கொண்டு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும். உங்கள் ஆசிர்வாதமும், வேண்டுதலும் நான் குணமடைய கண்டிப்பாக தேவை எனக்காக பிரார்தனை செய்யுங்கள் " என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் அதிகாரியாகும் கனவை வாரணாசி போலீசார் நிறைவேற்றி உள்ளனர்.

    9 வயது சிறுவன் ரன்வீர் பார்தி மூளைக்கட்டிக்கு மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இத்தகைய சூழ்நிலையில், ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    சிறுவனின் விருப்பம் வாரணாசி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் ரன்வீர் பார்தி விருப்பத்தை வாரணாசி போலீசார் நிறைவேற்றினர். 

    போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு மற்ற அதிகாரிகள் கைகுலுக்கி சல்யூட் அடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம்.
    • கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம்.

    உலகின் பல்வேறு பழங்குடிகளிடமும் புகையிலை பயன்பாடு வெவ்வேறு வடிவங்களில் இருந்திருக்கிறது. இதனை போதையாக அவர்கள் கருதவில்லை. மாறாக மூலிகையாக கருதினர்.

    அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமான புகையிலை அங்கு மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக்குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு உள் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, தோல் நோய்களில் மேற்பூச்சாக பயன்பட்டது.

    18-ம் நூற்றாண்டு வாக்கில் புகையிலையானது சுருட்டாகவும், சிகரெட்டாகவும் உருவெடுத்தது.

    புகையிலையை புகைக்கும்போது, அதில் உள்ள நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு போன்றவை உடலுக்குள் செல்லும். அப்போது கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    புகையிலையை பதப்படுத்தி சிகரெட்டாக மாற்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    குறிப்பாக, பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. ஒரு ஆண்டில் 8 லட்சம் மக்களை புகையிலையால் வரும் பாதிப்பு மரணிக்க வைக்கிறது. இதில் ஒரு துயரம் என்னவென்றால் சிகரெட் புகைக்கும் நபரின் அருகில் இருக்கும் பெண்கள், குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான்.

    மூளையில் இருக்கும் டோபோமைன் என்ற சுரப்பு உற்சாகத்தை தூண்டக்கூடியது. அந்த சுரப்பை அதிகரித்து சற்று நேரம் உற்சாகமாக வைப்பது புகையிலையின் குணம். இந்த ஒரு சில நிமிடங்கள் அளிக்கும் உற்சாகம், சிகரெட் புகைக்கும் நபரை காலங்காலமாக அதற்கு அடிமைப்படுத்தி விடுகிறது என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

    • பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
    • அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட நொறுக்கு தீனிகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.

    நொறுக்கு தீனிகள் சுவையாக இருந்தாலும், அவை அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்டவை. இவை உடல் நலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நொறுக்கு தீனிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

    நொறுக்கு தீனிகளில் அதிக அளவு கலோரிகள் இருக்கும். அவை எளிதில் ஜீரணிக்கப்படுவதால், விரைவில் பசி மீண்டும் ஏற்படும். இதனால், அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு அதிகம். இது உடல் பருமனுக்கும், அதன் மூலம் பிற நோய்களுக்கும் வழிவகுக்கும்.

    நொறுக்கு தீனிகளில் அதிக அளவு கொழுப்பு, குறிப்பாக டிரான்ஸ் கொழுப்பு இருக்கும். இது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் (LDL) அளவை அதிகரித்து, நல்ல கொழுப்பின் (HDL) அளவை குறைக்கும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

    நொறுக்கு தீனிகளில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கு அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

    நொறுக்கு தீனிகளில் அதிக அளவு உப்பு இருக்கும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பிற நோய்களுக்கும் வழிவகுக்கும்.

    நொறுக்கு தீனிகளில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. இது பல் சொத்தை மற்றும் ஈறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

    நொறுக்கு தீனிகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அதிக அளவு நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.

    அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்பு கொண்ட நொறுக்கு தீனிகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.

    நொறுக்கு தீனிகள் எளிதில் ஜீரணிக்கப்படுவதால், விரைவில் பசி மீண்டும் ஏற்படும். இதனால், அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு அதிகம். இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    குழந்தை பருவத்தில் நொறுக்கு தீனி பொருட்கள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    பல கடைகளில் தந்தூரி சிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சி மீது பல விதமான ரசாயனங்களை தடவி, எண்ணெய்யில் பொறித்து விற்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில், பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில், இந்த கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இது போன்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன,

    நொறுக்கு தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. பல முக்கிய காரணங்களில் ஒன்று நொறுக்கு தீனி. அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ள பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களை கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வரும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல், இளவயதில் புற்றுநோய் நோயாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,

    தேவைக்கு மீறிய அளவில், பொறித்த துரித உணவுகள், பெரிய சூப்பர்மார்கெட்களில் கழிவு விலையில்(discount) விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை, இலவச பொருட்களுடன் விற்கப்படும் தீனிகள் , சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விளம்பரம் செய்யும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும்

    பெற்றோர்களின் உண்ணும் பழக்கம் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதில் இருந்து குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு புரியவைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற பெற்றோர்கள் செய்யும் முதல் முயற்சி ஆகும்.

    ×