search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPS officer"

    • ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

    மேலும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
    • பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.

    கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.

    இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.

    அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    • ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
    • மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    கோவை:

    திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இங்கு முதலீடு செய்தனர்.

    ஆனால் இந்த நிறுவனம் இங்கு முதலீடு செய்த 58 ஆயிரத்து 571 பேரிடம் ரூ.930 கோடி மோசடி செய்தது. இதுதொடர்பாக இந்த நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவை டான்பிட் கோர்ட்டு அவர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக அப்போது விசாரித்த போலீசார், கமலவள்ளியை கடத்திச்சென்று ரூ.3 கோடியை பறித்ததாக அவர் போலீஸ் உயர் அதிகாரியை சந்தித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் மோ கன்ராஜ் மற்றும் சண்முகையா, ஜான்பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தற்போது கரூர் காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான பிரமோத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்ததுடன், கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அதுபோன்று மற்ற 4 பேரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமார், கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற 28-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் பிரமோத்குமார் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபரஜிதா சிங் சின்வார். இவர் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டிணம் இணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர குமார். அபராஜிதா சிங் சின்வாரும், தேவேந்திர குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திரகுமார் நேற்று மச்சிலபட்டினம் வந்தார்.

    இவர்களது திருமணம் மச்சிலிப்பட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் குட்லவல்லேறு மண்டலம், வேமாவரத்தில் உள்ள கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

    • போலீஸ் அதிகாரி ரவிதேஜாவின் காரை அலங்கரித்து அதில் அவரை அமர வைத்து இழுத்து சென்றனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெளியே கூடை கூடையாக பூக்களை கொண்டு வந்து தயாராக நின்றிருந்த பொதுமக்கள் ரவி தேஜாவின் மீது பூ மழை பொழிந்தனர்.

    ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு ஜூனாகட் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரவிதேஜா அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றி ரவுடிகளை ஒழித்து கட்டியுள்ளார். அவரது அதிரடி நடவடிக்கையால் குற்றச்செயல்கள் குறைந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து ரவி தேஜா தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ரவி தேஜா காந்திநகர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். தங்கள் பகுதியில் இருந்து நேர்மையான அதிகாரி ஒருவர் இடம் மாறுதலாகி செல்வது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க பொதுமக்கள் எண்ணினர். இதன்படி வழிநெடுக திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    போலீஸ் அதிகாரி ரவிதேஜாவின் காரை அலங்கரித்து அதில் அவரை அமர வைத்து இழுத்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெளியே கூடை கூடையாக பூக்களை கொண்டு வந்து தயாராக நின்றிருந்த பொதுமக்கள் ரவி தேஜாவின் மீது பூ மழை பொழிந்தனர். சாலையோரமாக நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேரில் வந்து அதிகாரி ரவி தேஜாவை மலர் தூவி வழியனுப்பி வைத்தனர். இதனை புன்முறுவலோடு மகிழ்ச்சி பொங்க ஏற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி ரவி தேஜா கைகூப்பி பொது மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து இப்படி மக்களின் மனங்களை வென்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது என்று பொது மக்களும், இளைஞர்களும் அவரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்.
    • மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்

    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக உள்ளார். அங்குள்ள கம்பீர்பூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெயின்ஸ் வக்கீல் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி ஆனார். ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவருக்கு தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணப்பெண்ணான ஜோதி யாதவ், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். இவர் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இம்மாத இறுதியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி, அவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் ரூபா, அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

    ரோகிணி சிந்தூரி தனது தனிப்பட்ட ஆபாச புகைப்படங்களை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பினார் என்றும், அதன் உள்நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

    அதுமட்டுமின்றி பல்வேறு முறைகேடு புகார்களையும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த ரோகிணி சிந்தூரி, ரூபா மனநலம் பாதித்தவர் போல் பேசுவதாக விமர்சித்தார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். உயர் பதவியில் இருந்த 2 பெண் அதிகாரிகள் பகிரங்கமாக மோதிக்கொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 2 பேரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதன்பிறகும் மோதல் தொடர்ந்ததையடுத்து, தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடவும், அவதூறாக பேசுவதற்கும் தடை விதிக்க கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி வரை ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ரூபா உள்பட 60 பேரை எதிர் மனுதாரராக சேர்த்திருப்பதுடன், தடை உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க வருகிற 7-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ரூபாவுக்கு நோட்டீஸ் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ரூபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவால் நான் பலமிக்கவளாக உணர்கிறேன். என்னுடைய மெசேஜ் பாக்ஸ் உங்களது குறுந்தகவல்களால் வெள்ளமென நிரம்பி இருக்கிறது.

    உங்களது ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி. நான் கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். கோர்ட்டில் என்னுடைய வாதங்களை சமர்ப்பிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

    • இழப்பீட்டுத் தொகையை பிரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் நலநிதிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று பிரியதர்ஷினி கூறினார்.

    புதுடெல்லி:

    தமிழக போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்தார்.

    ஐ.பி.எஸ் பணி கிடைத்தவுடன் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

    இதனால் வருண்குமார்-பிரியதர்ஷினி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் வருண்குமார், பிரியதர்ஷினியை மிரட்டியும், இருவருக்குமிடையே நடையெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்தாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டின் உத்தரவுப்படி வருண்குமார் மீதும், அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருண்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 26.06.2018-ம் ஆண்டு வருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் . இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் வருண்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தரப்பில், மனுதாரர் பிரியதர்ஷினியின் வக்கீல் விகஸ் சிங்கை அணுகினர்.

    இந்த விவகாரத்தில் 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வருண்குமார் ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து சமரச விவகாரத்தை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் இழப்பீட்டுத் தொகையை பிரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்தார். மேலும் அதனை சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் நலநிதிக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு ரூ. 11 லட்சத்தை வழக்கறிஞர் நலநிதிக்கு 10 நாட்களுக்குள் வருண்குமார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    மேலும் இந்த விவகாரத்தில் வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை தடுப்பு சட்ட வழக்கு, ஐ.டி. சட்டம் 66ன் படியும், ஐ.பி.சி 204ன் கீழ் பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த வழக்கின் சாட்சிகளை எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்றும், இரு தரப்பும் எவ்வித பரஸ்பரம் இடையூறுகளை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

    • புதுடெல்லியில் உளவு பிரிவில் இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி.அலி பிரகாஷ், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
    • ஏ.டி.சி.பி. வன்னிய பெருமாள், தமிழ்நாடு பொது வழங்கல் காப்பீடு ரேஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 45 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக கூடுதல் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அருண் பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று போலீஸ் அகாடமியிலும், ஐ.ஜி. கல்பனா நாயக், கூடுதல் டி.ஜி.பி.யாகி பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவிலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லியில் உளவு பிரிவில் இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி.அலி பிரகாஷ், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஏ.டி.சி.பி. வன்னிய பெருமாள், தமிழ்நாடு பொது வழங்கல் காப்பீடு ரேஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    சேலம் டி.ஐ.ஜி, பிரவீன் குமார் அபினப் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் சென்னை இணை கமிஷனராக இருந்த டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷனராகவும், திண்டுக்கல் டி.ஐ.ஜி, ரூபேஷ் மீனா, ஐ.ஜி.யாகி அமலாக்கத்துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் டி.ஜி.பி. சத்தியபிரியா, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி கமிஷனராகி உள்ளார். சி.பி.ஐ., டி.ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் . நெல்லை ஐ.ஜி. அவினாஸ் குமார் சென்னைக்கும், சென்னை ஐ.ஜி. தமிழ் சந்திரன் பயிற்சி கல்லூரிக்கும், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    திருச்சி கமிஷனர் கார்த்திகேயன் மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் பதவி உயர்வு பெற்று கோவை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் துணை கமிஷனர் நிஷா மிட்டல் பதவி உயர்வு பெற்று சென்னை இணை கமிஷனராகி உள்ளார்.

    டி.ஐ.ஜி. துரை பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் ஐ.ஜி.யானார். ஆவடி துணை கமிஷனர் மகேஷ் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் துணை கமிஷனர் அபினவ் குமார் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் டி.ஐ.ஜி.யானார்.

    தாம்பரம் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென்சென்னை இணை கமிஷனராகி உள்ளார். சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ஷியா உல்கக், சீருடை பணியாளர் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் டி.ஐ.ஜி ஆகி உள்ளார்.

    கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் காஞ்சீபுரம் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நிர்வாகப்பிரிவு ஏ.ஐ.ஜி. சாந்தி, கோவை துணை கமிஷனர் மூர்த்தி, சென்னை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், விருதுநகர் எஸ்.பி. மனோகர், என்.ஐ.ஏ. எஸ்.பி.தர்மராஜன், டெல்லி சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா ஆகியோர் டி.ஐ.ஜி.க்களாகி உள்ளனர்.

    சென்னை இணை கமிஷனர் ராஜேஸ்வரி, சேலம் கமிஷனராகவும், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில் வாகனன் சென்னை போக்குவரத்து பிரிவுக்கும், சென்னை போக்குவரத்துப் பிரிவு இணை கமிஷனர் ராஜேந்திரன், நெல்லைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    சென்னை துணை கமிஷனர் ஷியாமளா தேவி, பெரம்பலூர் எஸ்.பி.யாகவும், பெரம்பலூர் எஸ்.பி. மணி தாம்பரத்துக்கும், மதுரை துணை கமிஷனர் மோகன் ராஜ் கள்ளக் குறிச்சிக்கும், மதுரை துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் விருதுநகருக்கும், சென்னை எஸ்.பி. சாய் பிரனீத் மதுரைக்கும், சிவகங்கை எஸ்.பி. செந்தில் குமார், திருச்சி ரெயில்வேக்கும், திருச்சி ரெயில்வே எஸ்.பி. அதிவீரபாண்டியன், தாம்பரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி. ரோஹித் மயிலாப்பூர் துணை கமிஷனரானார். சென்னை துணை கமிஷனர் மீனா, தலைமையகத்துக்கும், தி.நகர் துணை கமிஷனர் ஆதர்ஸ், ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவர் ‘கர்நாடக சிங்கம்’ என்ற புனைப்பெயர் பெற்றவர் ஆவார்.
    பெங்களூரு:

    பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். அதன்பிறகு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார்.

    மேலும் பணிச்சுமையால் அவதிப்பட்ட போலீசாருக்கு கண்டிப்பாக வாரவிடுமுறை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தினார். இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதன் தொடர்ச்சியாக நேற்று ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் வழங்கினார்.

    ராஜினாமா செய்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானதை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கிய அவர் உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்தார்.

    சிக்கமகளூருவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பின்னர் அவர் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். உடுப்பி, சிக்கமகளூருவில் பணி செய்தபோது அவர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பெற்றார்.



    இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த அண்ணாமலை தனது ராஜினாமா பற்றி அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. எனது ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யும்படி முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். எனது முடிவை நான் மாற்றவில்லை. என்னை பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்து பணி வழங்கியது குமாரசாமி தான். அவர் கொடுத்த பணியை 8 மாதங்களாக செய்தேன். அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்தது. குமாரசாமி எளிமையாக நடந்து கொள்ளும் முதல்-மந்திரி. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், முன்னாள் போலீஸ் மந்திரிகளான பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர். அரசியல் அழுத்தம் காரணமாக நான் ராஜினாமா செய்யவில்லை. 9 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். பணி செய்த நிலையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த முடிவை கடந்த 6 மாதங்களாக யோசித்து எடுத்துள்ளேன். காக்கிச்சட்டை(போலீஸ் உடை) அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது. போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன். அத்துடன் உயர் அழுத்த பணியாகவும் இருக்கிறது. இதனால் ஏராளமான விழாக்களில் நான் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதை செய்துள்ளேன். என் செயல்பாடு யாரையும் பாதித்து இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

    அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறீர்கள் என கேள்விகள் எழுகின்றன. நான் சிறிது காலம் ஓய்வில் இருக்க விரும்புகிறேன். எனது மகனுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். அவனுடன் நேரத்தை செலவிட உள்ளேன். அதன்பிறகு அடுத்து செய்யும் செயல்பற்றி முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர குமார் தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் எலிமருந்து சாப்பிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
    உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி, மனைவியுடனான சண்டை காரணமாகவே விஷம் குடித்ததுள்ளதாக கூறப்படுகிறது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல்நிலை தேறியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்சா ஆர்டர் செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாஸ் பேசிய போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    உறவினர்கள் வந்து ஒன்று சேர்த்து வைத்தாலும், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததால் மனம் உடைந்த தாஸ் விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ×