search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand smuggling"

    • ேராந்து பணி
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் தலைமையில் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பொன்னையாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் மடக்கிபிடித்தனர்.

    போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் கைது
    • ரோந்து பணியில் சிக்கினார்

    அணைக்கட்டு:

    வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 50) என்பதும், இவர் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    • இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர்.
    • கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கே.என்.பேட்டை கெடிலம் ஆறு பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் கணபதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர். லாரியில் மணல் இருந்தது. இதற்கு ஆவணம் கேட்ட போது உரிய அனுமதி யில்லாமல் மணல் கடத்த லில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த சமயத்தில் திடீ ரென்று லாரி டிரைவர் கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.

    இதே போல் சப்-இன்ஸ் பெக்டர் குமாரசாமி திருமா ணிக்குழி கெடிலம் ஆற்றங்க ரை பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அருகில் பார்த்த போது மணல் இருந்தது. லாரி மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் திருப்பா திரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாட்டு வண்டிகளை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,பிரசன்னாமற்றும்போலீசார்வேல்முருகன்,உதயகுமார் ஆகியோர்இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றுப்பகுதியில் 2மாட்டுவண்டியில்அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவதிகை குட்ட தெரு கணபதி(64),பண்ருட்டி ெரயில்வே காலனிமகாலிங்கம்(55) ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்கள் ஒட்டி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    • நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி காப்பு காட்டில், வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் சிவகு மார், பன்னீர்செ ல்வம்வ னக்காப்பாளர்கள் நவநீதகி ருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வண்ணா ன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், சின்ராசு, வேலாயுதம் மற்றும் ஒலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகியோர் மோசட்டை சுடுகாடு அருகே அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் திருட்டு த்தனமாக மணலை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

    அவர்களை வனச்சரக அலுவலர் ரகுவரன் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது, அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் 4 பேர் மீதும்தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலா 20 ஆயிரம் வீதம் வண்டிகளுக்கு 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • போலீசார் மடக்கி பிடித்தனர்
    • 2 லோடு ஆட்டோ பறிமுதல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோவில் மணல் கடத்தி வந்த விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன் (வயது 26), வடுகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லோடு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்ததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 37), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மணல் கடத் தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படு கிறது.

    இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மற்றும் வாணி யம்பாடி அருகே உள்ள தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கள் 3 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு வெங் கடேசனின் வீட்டிற்கு சென்று நீதான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாயா? என கேட்டு அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் மற்றும் மினிவேன் முன்பக்க கண்ணாடி ஆகியவற்றை உடைத்து தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் கடத்துவதாக தகவல் தெரிவித்ததால் நள்ளிரவில் வீட்டை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிராக்டர் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திர காவிரி ஆற்றில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 24) என்பதும், இவர் ஆற்றில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைப்பு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடப்பதாக தாசில்தார் மஞ்சுளாவுக்கு புகார் வந்தது. அதன் பேரில் தாசில்தார் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் ஆகாரம் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதனையடுத்து அதிகாரிகள் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியுடைய நெசல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பரசுராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கரிவேட்டான் கால்வாயிலிருந்து மூட்டையுடன் பைக்கில் வந்தவரை போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் பைக்கை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, பைக் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாமண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சின்னராசை (வயது 25) கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த காவலர்கள், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன்(25), சிவா(25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ்(20) ஆகியோரை காவலர்கள் கைது செய்து, மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிராக்டருடன் தப்பியவருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி மேற்பார்வையில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் கள் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ண மங்கலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரின் டிராக்டரில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வந் துள்ளது. அதிகாரிகளை பார்த்ததும் மணல் ஏற்றிவந்தடிரெய் லரை கழற்றிவிட்டு டிராக்டரை ஜெகன் ஓட்டிச் சென்று விட்டார்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதன்பேரில் டிரெய்லரை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இது தொடர்பாக தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபு தீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×