என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
- 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வந்த மாட்டு வண்டிகளை சோதனை செய்தனர்.
அதில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






