என் மலர்
நீங்கள் தேடியது "மணல் கடத்தல்"
- என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு என்றார்.
- பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சோலாப்பூர் மாவட்டத்தின் மாதா தாலுகாவில் உள்ள குர்து கிராமத்தில், சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மண் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக வந்த புகார்களின் பேரில் ஐபிஎஸ் அதிகாரியும் கர்மலா டிஎஸ்பியுமான அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் ஊழியர் ஒருவர் தனது தொலைபேசியில் தலைவருக்கு போன் போட்டு ஐபிஎஸ் அஞ்சனாவிடம் கொடுத்துள்ளார்.
தொலைபேசியை வாங்கிஅஞ்சனா "நீங்கள் துணை முதல்வர் என்பதை நான் எப்படி அறிவது? தயவுசெய்து எனது தொலைபேசியை நேரடியாக அழைக்கவும்" என்று பதிலளித்தார்.
இந்தப் பதிலால் கடும் கோபமடைந்த அஜித் பவார், "உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உன் மொபைல் எண்ணை கொடு, அல்லது வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து பார்.
என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு" என்றார்.
பின்னர் வீடியோ கால் மூலம் பேசி, அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஐபிஎஸ் அஞ்சனாவிடம் அஜித் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இதுகுறித்து அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "சோலாப்பூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியுடனான உரையாடல் தொடர்பான சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல. நிலைமை மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம்.
பொறுமையாகவும் உண்மையாகவும் தங்கள் கடமையைச் செய்யும் நமது காவல்துறை மற்றும் பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.
மணல் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
கரூர்:
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.
உடனே அந்த லாரியை பின்னால் காரில் துரத்தினார். சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று நாமக்கல் மாவட்டம் எல்லையான வேலூர் போலீஸ் சோதனைச் சாவடியில் மடக்கி பிடித்தார்.
பின்னர் அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்பதால் அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மணல் லாரியுடன் வேலாயுதம்பாளையம் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகி சரவணனை புகார் கொடுக்குமாறு அறிவுறுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
போலீசார் விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிடிபட்டதால் அந்த லாரியை போலீசார் பரமத்தி போலீசாரை வரவழைத்து லாரியை ஒப்படைத்தனர்.
- 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் சப் இன்ஸ்பெக்டர் அரசு, மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடுக்கனூர், செய்யாற்று படுகை அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.
போலீசார் வருவதை கண்டவுடன் 3 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் மேல்மட்டை விண்ணமங்கலம் புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருநாவலூர் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவலர் மனோகரன் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கிழக்கு மருதூர் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றபோது, கிழக்கு மருதுறையை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), ஜெகதீசன் (44) சோமாசிபாலயம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) ஆகிய 3 பேரும் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வந்த மாட்டு வண்டிகளை சோதனை செய்தனர்.
அதில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கைகலப்பில் சங்கர் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் உதட்டில் கிழித்தது.
- காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பார்த்திபன்(வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடங்குளம் அருகே உள்ள சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மினி லாரியில் மணல் கடத்தி கொண்டு செல்லப்பட்டு பழவூரில் இறக்கி விட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீஸ்காரர்கள் கார்த்தீசன், சுயம்புலிங்கம், கிருஷ்ணராஜ் ஆகியோர் சண்முகபுரத்திற்கு சென்றனர். அங்கு மணலை இறக்கிவிட்டு மினி லாரியில் இருந்து அதன் டிரைவர் மணிகண்டன் இறங்கினார்.
அவரை தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டை சரிபார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், வீட்டுக்குள் இருந்த சங்கரை அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், அரிவாளை எடுத்து வந்து போலீசாரை வெட்ட முயன்றார்.
உடனே போலீசார் சுதாரித்துக் கொண்டு சங்கரை தடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சங்கர் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் உதட்டில் கிழித்தது. மேலும் தடுக்க வந்த போலீஸ்காரர் கார்த்தீசனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே சங்கரையும் , லாரி டிரைவரான மணிகண்டனையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சங்கர், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கூடங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து மணல் ஏற்றி வந்த மினிலாரி மற்றும் அரிவாளை கைப்பற்றினர்.
கைதான 2 பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சங்கர் மீது ஏற்கனவே பழவூர், பணகுடி போலீஸ் நிலையங்களில் மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார்.
கடலூர்:
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி டிஎஸ்பி, ஆகியோர் உத்தரவின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுவத்தூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து.உடனே போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்து மணல் அல்லிக்கொண்டிருந்த நபர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார். உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் தப்பி ஓடியது அதே ஊரை சேர்ந்த வெற்றிவேல் (எ) தேவவிரதன் என்பது தெரியவந்தது. அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது நடந்தது
- போலீஸ்காரர்களை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்கினி ஆற்றில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது.புகார்களின்படி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரங்கிய பட்டு பாலாஆடி காத்தான் கோவில் அருகே மணல் கடத்தி வந்த சரக்கு வேனை தடுக்க முயன்றனர். அப்போது மணல் கடத்தி வந்த வேனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர்கள் தடுக்க முயன்ற போலீஸ்காரர் ராஜேஷ், வீரபாண்டி ஆகியோரை தாக்கி விட்டு மணல் வண்டியை தப்ப முயற்சித்தனர்.இருப்பினும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மீண்டும் மணல் கடத்தும் கும்பல் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் விக்கி என்பவரை (வயது 28) மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடவாதி ஆவனாண்டி அறிவழகன், அகிலன், கவினேசன், ரமேஷ், கருப்பையா, செல்வராஜ் ஆகிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தும் கும்பலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் அருகே உள்ள கானாற்றில் அடையாளம் தெரியாத 2 பேர் அரசுக்கு சொந்தமான இடத்தில் மணல் கடத்த அங்கிருந்த மணல்களை ஜல்லடை வைத்து ஜலித்துக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பி ஓடினர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
- மயானமே அழியும் நிலையில் உள்ளதாக புகார்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பாலாற்றின் கரையில் சுடுகாடு உள்ளது. மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தை ஒட்டி சமத்துவ மயானம் அமைத்து இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.
இதே போன்று ஏற்கனவே சடலங்களை புதைத்த பழைய மயானத்தில் சமாதிகளில் ஒரே நேரத்தில் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்தப் பகுதியில் திருட்டு மணல் அள்ள தோண்டும் பள்ளத்தால் சமாதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானமே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மணல் திருட்டையும் சமாதிகள் சேதப்படுத்துவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அனுமதி இன்றி 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக அனுமதி இன்றி 3 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
எனவே, மணலுடன் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பல்லூர் பகுதியில் உள்ள கொசஸ் தலை ஆற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்தப்படுவதாக அரக்கோணம் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் விரைந்து சென்ற வருவாய் அலுவலர்கள் மினி வேனில் மணல் கடத்திய நபரை கைது செய்தனர். பறிமுதல் செய்து மணலுடன் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று கீழ் வெங்கடாபுரம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியும், பனப்பாக்கம் கிராமத்தில் 5 மாட்டு வண்டிகளும் கைப்பற்றப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
மொத்தத்தில் மணல் கடத்திய ஒரு மினி வேன் உட்பட ஆறு மாட்டு வண்டிகளை அதிரடியாக வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






