என் மலர்
நீங்கள் தேடியது "confiscation"
- கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
- போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி மனோஷ்குமார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த ரோந்து பணி இன்று காலை திருநாவலூர் பகுதியில் நடந்தது. அப்போது கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே டி.எஸ்.பி தலைமையி லான போலீசார் அங்கு சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
- திருச்சி ஹோட்டல்களில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்
திருச்சி,
நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் கடந்த 16-ந் தேதி சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல்நல க்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இந்த சம்பவத்தை தொட ர்ந்து திருச்சியில் தில்லை நகர், சாஸ்திரி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள சவர்மா கோழி க்கறி மற்றும் அசைவ உண வுகள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாது காப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான அதிகாரிகள் குழுவி னர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் கெட்டுப்போன 200 கிலோ அசைவ உணவுகள் பறி முதல் செய்யப்பட்டு, அழி க்கப்பட்டன.
இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்க ப்பட்டது. இதில் 6 கடை களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், ஜூஸ்போட அழுகிய பழங்கள் வைத்தி ருந்த ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறுகையில், "சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோதனையின்போது, அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை
- காரைக்காலில் பணம் வைத்து சீட்டு ஆடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பறவைபேட் குப்பை கிடங்கு பின்புறம், சிலர் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சீட்டு ஆடிய 3 பேர் தப்பி ஓடினர். போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தபோது, 3 பேரிடம் ரூ.2,500 பணம், சீட்டு கட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
- மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வானூர்:
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனுமதியின்றி மணல் கடத்துவதாக வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 3 சரக்கு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக்கத்துக்குட்பட்ட பகுதியில் நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்துவதாக வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத், காவலர் சிற்றரசு, உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து அனுமதியின்றி 3 சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விரட்டி சென்று மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். உடனே அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் நெய்வேலி வடபாதி ஆவனாண்டி கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டிஸ்வரன் ( வயது 20) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷ், , ராஜஸ்ரீஹரன், வினோத், அறிவழகன், அஜய் ,உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் பழனி (வயது 40), தண்டலம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்த முனிநாதன் மகன் சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் மினி லாரியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்தனர். 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், கடத்தி வரபரபட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் மதுபாட்டில் விற்று கொண்டிருந்த நாகல்குடி காலனியை சேர்ந்த பீமன் (வயது56) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
- 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையிலான போலீசார் கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரது கடையிலும், பாபநாசம் தெற்கு ராஜவீதியில் உள்ள சுகுமார் என்பவரது கடையிலும் தடை செய்யப்பட்ட 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, பாபநாசம் போலீஸ் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் கூறியதாவது;-
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்டவைகளில் போலீஸ், பிரஸ், வக்கீல் மற்றும் அரசு துறையின் கீழ் பணியாற்றுபவர்கள் அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். அரசு வாகனங்களில் மட்டுமே அந்தந்த துறையின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.
எனவே, திருக்கோவிலூர் பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களை உடனடியாக தாங்களாகவே அகற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி நம்பர் பிளேட்டுகளில் நம்பர் தெரியும்படி இருக்க வேண்டும். வருகிற 20-ந்தேதியில் இருந்து திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார். வீதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 220 லிட்டர் வெளிமாநில சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தரங்கம்பாடி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மதுபாட்டில்களை கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டி ல்கள் காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நீலகண்டன் தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் நாகரெ த்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர் அருள், முதன்மை காவலர்கள் மனோகர், மகேஷ், பாலகுரு ஆகியோர் செம்பனா ர்கோவில் காவல் சரகம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 672 வெளிமாநில மதுபாட்டி ல்கள் மற்றும் பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபி டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மது கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட காரையும், 672 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் வெளி மரிநல சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக மயிலாடுதுறை அருகே பாண்டூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவ ரை கை செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.