search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவர் 9,140 சிகரெட்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1.55 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே விமானத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வாசனை பொருட்களை மறைத்து எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47 ஆயிரம். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக விமானம் மூலமாக வெள்நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவை கடத்தல் குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    • மதுரைக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட இறைச்சி மாயம்.
    • 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல்

    சென்னை

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்ற பிக்கானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    5 நாட்களுக்கு முன்னர் வெட்டப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில் வெட்டி உரிக்கப்பட்ட ஆடுகளை மடக்கி வைத்து ரெயிலில் கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே ஒரு கண்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ எடை கொண்ட இறைச்சி மாயமாகி உள்ளது. 30 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெட்டிகள் அனைத்தும் மாயமாகி உள்ளது.

    அவை சென்னை வருவதற்கு முன்பே ரெயில் பெட்டியில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி கெட்டுப்போன இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி சில்லரை விலையில் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ராஜஸ்தானில் இருந்து இறைச்சியை கடத்தி வந்த கும்பல் இதுபோன்று பலமுறை கெட்டுப்போன இறைச்சியை எடுத்து வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு ஒரு கிலோ இறைச்சி ரூ.500 என நிர்ணயம் செய்து விற்பனை செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து சென்னையில் உள்ள அசைவ உணவகங்கள் மற்றும் பிரியாணி கடைகளில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை மாநகரில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி தொடர்ச்சியாக பிடிபட்டு வருவது அசைவ உணவு பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஓட்டல் உணவுகள் ஆபத்தாவை

    தானோ? என்கிற அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகிறது.

    • அகில் மரக்கட்டைகள் சுமார் 20 கிலோ இருந்தன.
    • சந்தன மரத்தை விட அதிக நறுமனம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரம்.

    ஆலந்தூர்:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் சுற்றுலா பயணிகளாக சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பைகள் மற்றும் சூட்கேசை திறந்து பார்த்த போது 20 பார்சல்கள் தனித்தனியாக இருந்தன.

    அதில் சந்தனத்தை விட அதிக நறுமனம் தரக்கூடிய அகில் மரக்கட்டைகள் சுமார் 20 கிலோ இருந்தன. மேலும் விலை உயர்ந்த அகர் அத்தர் ஆயில் பாட்டில்கள், வாசனை திரவியங்கள் 15 -க்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தது.

    இந்த அகில் மரம், சந்தன மரத்தை விட அதிக நறுமனம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரம். இதை வீடுகளில் வளர்ப்பது, சர்வதேச வன பாதுகாப்பு சட்டப்படி குற்றம். இந்த மரங்கள் இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளிலும், நாகா மழை காடுகளிலும், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அதிகமாக அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.

    அதைப்போல் இந்த மரங்களில் இருந்து வடியும் பிசின்களில் அகர் அத்தர் ஆயில் கிடைக்கிறது. இந்த ஆயில் அதிக நறுமணத்துடன் கூடிய உயர் ரக வாசனை திரவியம். இது மிகவும் விலை உயர்ந்தது.

    இததையடுத்து ரூ.40 லட்சும் மதிப்புள்ள அகில் மரக்கட்டைகள், வாசரனை திரயவியங்களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த இலங்கை பயணிகள் 2 பேரையும் சுங்கஅதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்கள் இந்த நறுமன கட்டைகள், வாசனை திரவியங்களை யாருக்காக கடத்தி வந்தனர்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்.
    • 100-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பிரசத்தி பெற்றது. சனி கிரக பரிகாரஸ்தலம் என்பதால், இக்கோவிலுக்கு புதுச்சேரி தமிழகம் மட்டுமின்றி பல மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் இங்கு வருகின்றனர்.

    பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நளன் குளத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, விநாயகரை வழிப்பட்டு, ஏழை,எளிய மற்றும் யாசகம் கேட்போருக்கு அன்ன தானம் வழங்குவது வழக்கம்.

    பக்தர்களின் பரிகாரத்திற்காக நளன் குளம் மற்றும் கோவில் சுற்றி ஏராளமான இடங்களில் அன்னதானம் செய்வதற்காக சிறிய உணவு பொட்டலங்கள் விற்பனை செய்கின்றனர்.

    பக்தர்கள் உணவு பொட்டலங்களை வாங்கி யாசகம் கேட்போருக்கு அளிப்பர். அந்த பொட்டலங்களை அங்கு கடை வைத்திருக்கும் நபர்கள் குறைந்த விலைக்கு வாங்கி, மீண்டும் பக்தர்களுக்கே விற்பனை செய்கின்றனர்.

    இதனால் நளன் குளத்தை சுற்றியுள்ள வியாபாரிகளுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நளன் குளத்தை சுற்றி பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.

    ஆனாலும் தடையை மீறி நளன் குளம் அருகில் தர மற்ற உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றது.

    இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையி லான குழுவினர் போலீ சாருடன், நளன் குளம் பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர்.

    அப்போது, நளன் குளம் சுற்றி தடை செய்யப்பட்ட பகுதியில் தரமற்ற பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த 8 பேரிடம் இருந்து எள், தயிர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

    அப்போது, பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த பெண், உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதம் செய்தார். போலீசார் தலையி்ட்டு சமாதானம் செய்தனர்.

    இதுதொடர்பாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    • 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
    • போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    மதுரையை சேர்ந்த கும்பல் ஒன்று நெல்லை மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு காரில் வருவதாகவும், அந்த கும்பல் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று இரவு மூன்றடைப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான போலீசார் மூன்றடைப்பை அடுத்த நெடுங்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கருப்பு நிற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த வாகனத்தின் பதிவெண் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது காரின் பின்புற இருக்கைக்கு அடிப்பகுதியில் ஒரு பெட்டியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனே அந்த பணத்தை போலீசார் எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும் பிடித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் பதுக்கி வைத்திருந்த கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டிய நகர் 5-வது தெருவை சேர்ந்த சீமை சாமி ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இந்த கும்பல் சமீப காலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளது.

    அதாவது ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி நம்பவைத்து பணத்தை வாங்கி கொண்டு திரும்ப ரூ.2 லட்சம் வழங்கும்போது அதில் ஒரு கட்டு பணத்தில் மட்டும் நல்ல நோட்டுகளை வைத்துவிட்டு மற்ற கட்டுகளில் கள்ள நோட்டுகளை வைத்து வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இந்த வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பண மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டதும், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று அங்கும் மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அசல் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 8 செல்போன்கள், அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    அந்த கும்பலுக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்பவர்கள் யார்? அவர்களாகவே எந்திரம் மூலம் அச்சடிக்கிறார்களா? அப்படியானால் எங்கு வைத்து அதனை செய்கிறார்கள்? இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக முக்கிய பிரமுகர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை.
    • பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமான பய ணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணியின் உடமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் ஒன்று இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்கத்து றை அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது அதில் 8000 அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 5.63 லட்சம் என தெரிய வருகிறது.

    அதற்கான உரிய ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இல்லை என்பதால் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதே போன்று சிங்கப்பூ ருக்கு சென்ற ஸ்கூட் விமான பயணிகளின் உடமை களை சோதனை செய்தபோது பயணி ஒருவர் சிங்கப்பூருக்கு கடத்த இருந்த ரூபாய் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க எண் மற்றும் யூரோ பறிமுதல் செய்யப்பட்டது.

    சுங்கத்து றை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
    • 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மங்களூரு நகர சிறை வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் சிறைச்சாலையின் அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

    இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 25 செல்போன்கள், 1 புளூடூத் கருவி, 5 இயர்போன்கள், 1 பென் டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்தரிக்கோல், 3 கேபிள்கள் மற்றும் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் பிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கியது.

    இந்த பொருட்கள் எப்படி சிறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனை கடைசிவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    • பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.
    • இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    பாரிமுனை ராஜாஜி சாலை, கடற்கரை ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு கத்தியுடன் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்களான தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சாமுவேல் (3-ம் ஆண்டு), கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லோகேஷ் (2-ம் ஆண்டு), மீஞ்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (3-ம் ஆண்டு) என்பது தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகையாக மாறியது. இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் மறைந்திருந்தது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து இரண்டரை அடி நீளமுள்ள பெரிய பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கைதான மாணவர்கள் லோகேஷ், சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 3 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பற்றி போலீசார் மாணவர்களின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களில் 11 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

    அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 56 இடங்களில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு மாநகராட்சியில் கெங்கேரி மண்டலத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து வரும் பசவராஜ் மாகி வீட்டிலும் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.

    மேலும் பெங்களூரு, கலபுரகியில் உள்ள பசவராஜ் மாகிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. அவரது வீடுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம் சிக்கியது.

    மேலும் அவருக்கு பெங்களூருவில் 5 வீடுகளும், கலபுரகியில் தனது பெயர் மற்றும் சகோதரி பெயரில் 5 வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. இதுதவிர பசவராஜ் மாகியின் தாய் பெயரில் 50 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது.

    பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா கிராம பஞ்சாயத்து செயலாளர் ஜெகதீசுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள வீட்டிலும் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி பணம், வாகனங்கள், நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    மேலும் மண்டியாவில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் சிவராஜ், அவரது உறவினர் வீட்டிலும், மைசூரு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக இருந்து வரும் மகேஷ், பெலகாவி மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் திட்டமிடுதல் அதிகாரி சேகரகவுடா, ராமநகர் மாவட்டம் ஆரோஹள்ளி தாசில்தார் விஜியண்ணா, பெலகாவி மாவட்ட பஞ்சாயத்து உதவி என்ஜினீயர் மகாதேவ் பன்னூர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறை என்ஜினீயர் ஜெகதீஷ் ஆகியோரின், வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தாவணகெரே மாவட்டத்தில் தொழில்துறை என்ஜினீயராக பணியாற்றி வரும் உமேஷ், அதே மாவட்டத்தில் மின்வாரிய என்ஜினீயராக இருந்து வரும் பிரபாகர், சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயரான ரவீந்திராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி, தங்க நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி எடுத்துs சென்றுள்ளனர்.

    லோக் ஆயுக்தா போலீசார் சோதனைக்கு உள்ளான 11 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    11 அதிகாரிகள் வீடுகளில் இருந்தும் ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீசார் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலம் முழுவதும் 11 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வங்கி லாக்கர் களிலும் பணம், நகை பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பல்வேறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 11 அதிகாரிகள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கர்நாடகாவில் வால்மீகி மாநகராட்சி ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிகாரிகள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான சொத்துக்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.
    • பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.

    திருப்பதி:

    பிரபல தெலுங்கு சினிமா நடிகர் சந்தீப் கிஷன். இவர் தமிழில் கடைசியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இவர் ஐதராபாத் ஜூப்ளிகில்ஸ் மற்றும் செகந்தி ராபாத் ஆகிய இடங்களில் பிரபலமான ஓட்டலில் பங்குதாரராக உள்ளார்.

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீரென செகந்திரா பாத்தில் உள்ள நடிகருக்கு சொந்தமான ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 25 கிலோ காலாவதியான அரிசி இருந்தது. மேலும் பச்சை மற்றும் அரைத்த உணவுகளில் லேபிள்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.

    துருவிய தேங்காய்களில் சில இயற்கை உணவு வண்ணங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சமையலறை பகுதியில் அதிகளவில் கழிவுநீர் தேங்கி இருந்ததையும் கண்டறிந்தனர்.

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் செகந்தி ராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரையின்படி, திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல், டீக்கடை, பூக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 5 கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    மேலும் 3 இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த 3 கடைகளில் இருந்த வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 10 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் 3 பிரியாணி கடையில் சிக்கனில் அதிகப்படியான வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை இருந்ததால் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

    2 கடைகளில் உணவுப் பொருட்களில் காலாவதியான 100 பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் 5 லிட்டர் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

    • பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    • 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் போலீசார் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் இருவரும் தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் வைத்திருந்ததும் அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மேலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனம், சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா 2 பேரையும் மதிக்கோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

    ×