search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    கோப்புபடம்.

    உடுமலையில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    உடுமலை:

    உடுமலை ெரயில்வே சாலை சந்திப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது தொடா்பாக உடுமலை ஜானிபேகம் காலனியில் வசித்து வரும் முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இவா் உடுமலை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    Next Story
    ×