search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice"

    • காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள்.
    • ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ரேசன் அரசி உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து ஆந்தி மாநிலத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. பஸ், ரெயில்களில் கடத்தப்படும் ரேசன் அரிசி மூட்டைகளை அவ்வப்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேசன் கடையில் இருந்து இரவு நேரத்தில் மூட்டை,மூட்டையா ரேசன் அரசி கடத்தப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் இரவு நேரத்தில் கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியே எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இரவு நேரத்தில் ரேசன் கடை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அந்த ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் சரிவர வழங்குவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்
    • இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள்

    ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாகத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது.

     

    நிறுவனங்கள் லாபம் ஈட்ட ஊழியர்களைக் கொத்தடிமைகளாக்க நாராயண மூர்த்தி வழி சொல்கிறார் என்று இணையவாசிகளும் ஐடி ஊழியர்களும் புலம்பித் தள்ளினர்.

    இந்நிலையில் தனது 70 மணி நேர ஐடியாவுக்கு நாராயண மூர்த்தி விளக்கம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை முதல் இடத்திற்கு உயர்ந்த நமது இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் அரிசி பெறுகிறார்கள், அப்படியென்றால் 800 மில்லியன் பேர் இன்னும் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

     

    அதற்காகத்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது நாடு இரக்கமுள்ள முதலாளித்துவமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார். 

    • பழங்குடியின மக்களுக்கு கேரள அரசு சார்பில், மாதந்தோறும் 5½ டன் ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ரேஷன் அரிசி மாயமான விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இடமலைக்குடி என்ற மலைக்கிராமம் உள்ளது. மூணாறில் இருந்து, சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அந்த கிராமம் இருக்கிறது.

    இந்தியாவிலேயே பழங்குடியின மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரே பஞ்சாயத்து இது. 6 மலைக்கிராமங்கள், 13 வார்டுகளை கொண்டது. இங்கு 1,200-க் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வசிக்கிற பழங்குடியின மக்களுக்கு கேரள அரசு சார்பில், மாதந்தோறும் 5½ டன் ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக, இடமலைக்குடி கிராம மக்களுக்கு ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்படவில்லை. இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அரிசி ஏன் இன்னமும் வினியோகிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் விசாரித்தனர்.

    அப்போது அரிசி இல்லை என்பது தெரியவந்தது. அப்படி என்றால் அங்கே இருந்த 5½ டன் அரிசி எங்கே போனது? என்ற கேள்வி எழுந்தது.

    பழங்குடியின மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிற ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இடமலைக்குடியில் உள்ள கூட்டுறவு சங்க குடோனில் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். அங்கிருந்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    எனவே அந்த குடோனுக்கு நேரடியாக சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் வழங்கல் துறையினர் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் சொன்ன தகவல் அதிகாரிகளை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அதாவது பழங்குடியின மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த 5½ டன் ரேஷன் அரிசியை எலிகள் தின்று விட்டதாக குண்டை தூக்கி போட்டனர். குடோன் ஊழியர்களின் இந்த பதில், வழங்கல்துறையினரை நிலைதடுமாற செய்து விட்டது.

    டன் கணக்கில் ரேஷன் அரிசியை எலிகள் எப்படி தின்று அழிக்கும் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது. இது, கேரள மாநில வழங்கல்துறையினரை மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே ரேஷன் அரிசி மாயமான விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரத்தில், திருட்டுத்தனமாக வெளி மார்க்கெட்டில் ரேஷன் அரிசி கடத்தி விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வழங்கல் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக குடோன் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வழங்கல்துறையினர் தெரிவித்தனர்.

    எலிகள் தின்று இருக்கலாம் என்றாலும் 5½ டன் ரேஷன் அரிசியையும் தின்று இருப்பதாக எலிகள் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதாக இல்லை. உண்மையாக தின்றவர்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.

    • 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை.

    தமிழ்நாட்டில் ஏழை மக்கள் பயன்பெறும் மாதந்தோறும் நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில், 5.2 லட்சம் டன் அரிசியில் 15.8 சதவீதம், கசிவு ஏற்பட்டு சிந்தியதாக கூறப்பட்டுள்ளது. பி.டி.எஸ் மூலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று விநியோகித்து வரும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒவ்வொரு நபரும் மாதத்திற்கு ஐந்து கிலோ வழங்க வேண்டும். அதேபோல் மே 31, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி அரிசி வரைதல் குடும்ப அட்டைகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    அரிசி கசிவு தொடர்பான ஆய்வில் இருந்து தமிழ்நாடு இரண்டு அம்சங்களில் ஆறுதலை பெறலாம். கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ்நாட்டை விட கசிவு விகிதம் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை. இதனால் சுமார் ரூ69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆய்வின் முடிவுகள் இவ்வாறு இருந்தபோதிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தது, அதன் மதிப்பு சுமார் ரூ.2.4 கோடி. அதேபோல் "ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று 2024-25 ஆம் ஆண்டிற்கான சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    தருமபுரி:

    உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், உத்தரவின் பேரில் கோவை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பஞ்சபள்ளி அருகே நல்லம்பட்டி கொல்லபுரி மாரியம்மன் கோவில் எதிரில் கிருஷ்ணகிரி அலகு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உட்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அவரிடம் விசாரணை செய்தபோது கர்நாடகா மாநிலம், ராம் நகர் மாவட்டம் கொல்லி கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகரன் மகன் பிரமோத் (22) என தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை கர்நாடகா மாநிலம் ராம்நகரில் உள்ள டிபன் கடைகளுக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்தது.

    அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் ராஜ், தீபன் குமார் மற்றும் போலீசார் கடையநல்லூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் லாரியின் ஓரங்களில் கோழி தீவனங்களை வைத்துவிட்டு மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ரேசன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரியுடன் அதில் இருந்த 12 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா வேம்புவிளை பாலப்பள்ளம் என்ற ஊரை சேர்ந்த லாரியின் டிரைவர் அசோக் (வயது 34) என்பவரை கைது செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடத்தி செல்ல இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்படும் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 9 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வேளாங்கண்ணி அருகே பறவை காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள், நாகை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் காரைக்காலுக்கு கடத்தி செல்ல இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை அதிகாரி தேடிவருகின்றனர். 32 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 800 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை பனங்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    அப்போது பறக்கும்படை துணை வட்டாட்சியர் ரகு, வாணிப கழக தர ஆய்வாளர் பிரபாகரன் அலுவலக உதவிஆய்வாளர்கள் ராமன், பூவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
    • ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

    அதுவும் ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம். அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம். பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய கோர்ட்டுக்கு தே.மு.தி.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே தரம் பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதி செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சேந்தமங்கலம் போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்பதும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    1050 கிலோ பறிமுதல்

    இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ எடை கொண்ட 21 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பொன்னாகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த சசிகுமார் (27), அவரது தம்பி ரஞ்சித்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    • 21 மூட்டைகள் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நரசிங்கபு ரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டி ருந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் நரசிங்கபுரம், உடையார் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும் , அங்கு அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1,050 கிலோ ரேசன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.

    ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை கொண்டு சென்று அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வாலாஜாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படை க்கப்பட்டது.

    இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் கடலூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2750 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர். அந்த வாகனத்தின் டிரைவர் வேலூரை சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பம் அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டிவனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்தப்பட்ட வழக்கில் அபுதாகீரை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பரிந்துரையின்படி கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் அபுதாகிர் என்கிற சையது அபுதாகிர் என்பவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அபுதாகீரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில்அடைத்தனர்.

    ×