search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration rice"

    • உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சேந்தமங்கலம் போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்பதும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    1050 கிலோ பறிமுதல்

    இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ எடை கொண்ட 21 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஆட்டோவில் 9 சாக்குகளில் 360 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பொன்னாகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த சசிகுமார் (27), அவரது தம்பி ரஞ்சித்குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆட்டோவையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    • 21 மூட்டைகள் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நரசிங்கபு ரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டி ருந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் நரசிங்கபுரம், உடையார் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும் , அங்கு அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1,050 கிலோ ரேசன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.

    ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை கொண்டு சென்று அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வாலாஜாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படை க்கப்பட்டது.

    இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் கடலூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2750 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர். அந்த வாகனத்தின் டிரைவர் வேலூரை சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பம் அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டிவனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்தப்பட்ட வழக்கில் அபுதாகீரை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பரிந்துரையின்படி கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் அபுதாகிர் என்கிற சையது அபுதாகிர் என்பவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அபுதாகீரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில்அடைத்தனர்.

    • ரோந்துப்பணியின் போது ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • ரேசன்அரிசி கடத்திய வாலிபரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி அதனை சுத்தம் செய்து கேரளாவுக்கு விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    இதனைத் தொடர்ந்து போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.

    இன்று ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அவர் 900 கிலோ ரேசன் அரிசி மூடைகளை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.

    பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை பாலீஸ் செய்து கேரளாவுக்கு விற்று வந்துள்ளார். பிடிபட்டவர் சின்னமனூரை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், இவர் தொடர்ந்து இதேபோல ரேசன் அரிசி விற்று வருபவர் எனவும் உறுதியானது.

    இதனையடுத்து பறிமுதல் செய்த அரிசியை உத்தம பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    முத்துக்குமாரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
    • உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மணியனூர் காந்தி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவலின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பலகாரம், தின்பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
    • அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    திருப்பூர்:

    குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி., வன்னியபெருமாள் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக திருப்பூா், அவிநாசி சாலை அணைப்புதூா் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது அங்கு 1,080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    • ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட் கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தஞ்சை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.

    பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ரேஷன்கடைகள், ரெயில் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகம், டோல் கேட் மற்றும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வரு கின்றனர்.

    மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
    • குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. 40 அரிசி முட்டைகளில் சுமார் 1080 கிலோ எடையுள்ள அரிசி இருந்தன.

    இதேபோல் திட்டக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. 13 அரிசி மூட்டைகளில் சுமார் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து 2மினி வேன் மற்றும் 1830 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 3 பேரை போலீசார் கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். வேப்பூர் கூட்ரோட்டில் பிடிபட்ட நபர்கள் திட்டக்குடி கோவிலூர் சேர்ந்த வீரமணி, ரவி,நெசலூர் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் திட்டக்குடி பகுதியில் அரிசி பறிமுதல் செய்யும்போது டிரைவர் தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3பேரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    • சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலம் கடைவீதியில் சந்தேகப்படும் படியாக ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் ஆட்டோவை பரிசோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை பார்த்தனர்.

    இது குறித்து ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தலைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 40), சின்னசேலத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல் (24), காமராஜ் (45) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கொண்டு கடத்தி செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது. அதன் பேரில் பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை பகுதியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை போலீசார் ராஜா கோவிந்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக வேன் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி, வாகனம் மற்றும் அந்த நபரை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 51). இவர் தனது வேனில் 55 அரிசி மூட்டையில் சுமார் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசியை சேலம் மாவட்டம் தலைவாசல் கோழி பண்ணைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • 1 டன் சிக்கியது
    • வருவாய் துறையினருடன் சோதனை செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைதொடர்ந்து அவர் வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் வருவாய் துறையினருடன் சென்று சோதனை செய்தார்.

    அப்போது அரசனப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×