search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottai"

    • நெல்லை-செங்கோட்டை இடையே நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை- செங்கோட்டை இடையே ரெயில் பாதையில் தண்டவாளங்கள் வலுப்ப டுத்தப்பட்டு மின்பாதை அமைக்கப்பட்டது.

    அதில் மின்சார ரெயில் என்ஜின் மூலம் அதிவேகமாக ரெயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    நெல்லை-செங்கோட்டை இடையே மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்குவதற்காக நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் எவ்வித குறைபாடுகளும் இன்றி ரெயில் இயங்கியதால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் அந்த வழித்தடத்தில் நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில் (06681-06658) வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் இன்னும் மின்மயமாக்கல் பணிகள் முடிவடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணி, மாலை 6.15 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, காலை 10.05 மணி, மாலை 5.50 மணிக்கும் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட இருந்த நிலையில் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது.

    வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட நிலையிலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து அதி காரிகளிடம் கேட்டபோது அவர்களுக்கும் இந்த திடீர் ரத்து குறித்த தகவல் தெரியவில்லை. ஓடுபாதையில் தேவையான அளவு மின்சாரம் வினியோகம் இல்லையா அல்லது மின்சார என்ஜின் இல்லையா என்பது குறித்து அவர்களுக்கும் முழு விபரம் தெரியவில்லை. இதனால் எந்த விதமான முன்னறிவிப்பும், காரணமும் இல்லாமல் மின்சார என்ஜின் ரெயில் இயக்கம் ரத்தானது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டாரத்தி ல் வரும் கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். நெல் சாகுபடி செய்யும் வேளாண் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சான்று பெற்ற நெல் விதைகளை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு கார் நெல் சாகுபடிக்காக செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு இந்த ஆண்டும் நெல் விதைகளை மானியத்தில் வழங்கலாம் என உத்தர விட்டுள்ளதன்படி, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்டங்களின் துணை இயக்குனர் ஊமத்துரை மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு ஆலோசனையின் பேரில் செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதுபற்றி வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு கூறுகையில், செங்கோட்டை வட்டாரம் புளியரை, தெற்குமேடு, புதூர், கற்குடி, செங்கோட்டை மேலூர், கீழூர், டவுன், சீவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி விதை கிராம திட்டத்தில் பயன்பெறும் பொருட்டு இணையத்தில் பதிவு செய்யலாம் எனவும், மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அசோ ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பெற்று விதை நேர்த்தி செய்தல் நாற்றங்காலில் இடுதல், நடவு வயல்களில் இடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கலாம் என கூறியுள்ளார்.

    நெல் விதை விநியோகத்தி ற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார் , அருணாசலம், முகமது ஜலால் மைதீன் செய்தனர்.

    • நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • பாலருவி விரைவு ரெயில் நெல்லையில் இருந்து வ 11.30-க்கு புறப்படுகிறது.

    தென்காசி:

    நெல்லை-கொல்லம் இடையே கடந்த சில மாதங்களாக மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை-செங்கோட்டை இடையே பணிகள் நிறைவு பெற்றுவிட்டது.

    இதையடுத்து இந்த வழித்தடத்தில் நெல்லை-தென்காசி மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் 70 கிலோமீட்டரில் இருந்து 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் ரெயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரெயில்(16791) நெல்லையில் இருந்து வழக்கமான நேரமான 11.20-க்கு பதிலாக 11.30-க்கு புறப்படுகிறது. தென்காசிக்கு வழக்கமான நேரமான 12.35 மணிக்கு செல்லும். பாலக்காடு - நெல்லை விரைவு ரெயில்(16792) செங்கோட்டைக்கு வழக்கமான நேரமான அதிகாலை 3 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக 4.40 மணிக்கு வந்தடைகிறது.

    காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை - செங்கோட்டை ரெயில் செங்கோட்டையை 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.05-க்கு சென்றடையும். காலை 9.10-க்கு புறப்பட வேண்டிய ெரயில் 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டையை மதியம் 11.50-க்கு சென்றடையும்.

    இதேபோல் மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு வழக்கமான மணியை விட 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவும் சென்றடைகிறது. மறுமார்க்கமாக காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரெயில் நெல்லை டவுன் வரை வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அதே நேரமான 8.50 மணிக்கு வந்தடையும்.

    காலை 10.05 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக இரவு 12.15 மணிக்கும், மதியம் 2.55-க்கு புறப்படும் ரெயில் 20 நிமிடங்களுக்கு முன்பாகவும், மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவும், மதியம் 11.50 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் செங்கோட்டை - மதுரை ரெயில் 11.50 மணிக்கு பதிலாக 12.10 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு மாலை 3.40 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    • மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 28, மார்ச் 2-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    நெல்லை:

    பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரெயில் இயக்கவும் மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை (திங்கட்கிழமை) முதல் மார்ச் 7-ந்தேதி வரை பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில் (16731), இன்று முதல் மார்ச் 6-ந்தேதி வரை திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரெயில் (16732), வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரெயில் (06664), செங்கோட்டை - நெல்லை சிறப்பு ரெயில் (06648), நெல்லை - செங்கோட்டை சிறப்பு ரெயில் (06687), வருகிற 17-ந்தேதி முதல் மார்ச் 7 வரை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரெயில் (06663),

    வருகிற 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரெயில் (16861), வருகிற 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரெயில் (16862), பிப்ரவரி 27, மார்ச் 1-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரெயில் (22657), 28, மார்ச் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரெயில் (22658) ஆகியவை இந்த வழித்தடங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோவை விரைவு ரெயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோவை - நாகர்கோவில் விரைவு ரெயில் (22628), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628),

    மார்ச் 2-ந்தேதி புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரெயில் (12667), மார்ச் 3-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரெயில் (12668), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரெயில்கள் (06405/06409), மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு - நெல்லை விரைவு ரெயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (16846) ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    • செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிறுப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.
    • பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிறுப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.

    இங்கு மண்னால் தயாரிக்கப்படும் அடுப்பு வகைகள், மண்பானைகள், மண்சட்டிகள், பூந்தொட்டி வகைகள், அகல் விளக்குகள் போன்றவைகள் தயாரித்து உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் .

    மண் பானைகள், அடுப்புகள் செய்வதையே தங்கள் தொழிலாக செய்து குடும்பம் நடத்தியதோடு தங்கள் குழந்தைகளுக்கும் அதையே கற்று கொடுத்து வந்துள்ளனர் இப்பகுதி மண்பாண்ட தொழிலாளார்கள்.

    சுற்று வட்டார பகுதிகளில் இத்தொழிலை நம்பி சுமார் 400 குடும்பங்கள் வரை பார்த்து வந்த இந்த தொழில் தற்போது நலிவடைந்து 50 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இவர்கள் வாரத்திற்கு 1,000 பானைகள் வரை உற்பத்தி செய்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனை வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தற்போது பொங்கல் சீசனை தொடர்ந்து செங்கோட்டையை அடுத்துள்ள காலங்கரை, தேன்பொத்தை கட்டளைகுடியிருப்பு, இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கலுக்கான பானைகள், அடுப்பு, மண்சட்டி, பானை, பொங்கல்கட்டி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது.

    இது குறித்து தொழிலாளிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலோர் பித்தளை, சில்வர் பாத்திரங்களிலேயே பொங்கல் வைக்கும் பழக்கத்திற்கு வந்துவிட்டனர். கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை பானைகள் விற்கப்பட்டது.

    ஆள்பற்றாக்குறை, குளங்களில் மண் அள்ள தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பது, கடந்தாணடில் பெய்த தொடர்மழையால் செய்த பானைகளை பாதுகாக்க இடமின்மை போன்ற பல்வேறு பிரச்சிைன காரணமாக இத்தொழிலில் பெரிய அளவில் வருமானமும் கிடைப்பது இல்லை.

    தற்போது பொங்கல் சீசன் என்றாலும் தமிழகத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர்களும் வருவதில்லை.

    அதிக அளவில் பொங்கல் பானைகள் கேரள மாநிலத்திற்கே ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    அவ்வாறு முறையே தயார் செய்த பனைகள் தற்போது ரூ. 70 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது.

    வரும் காலங்களில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பானைகளையும் சேர்த்து வழங்கினால் எங்களது வாழ்வாதாரம் பெரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது
    • பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலா் பழனிச்சாமி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது. மேலும் அனுமதியின்றி கொட்டப்பட்ட கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாமை நடமாடும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை - நெல்லை புற்றுநோய் மருத்துவ மையம் இணைந்து மருத்துவர் மற்றும் செவிலியர் குழு மூலம் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், சுய உதவி குழுக்கள், டிபிசி பணியாளர்கள், மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.

    செங்கோட்டை:

    சங்கடகரசதுர்த்தி முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.

    இதேபோல் வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கல்வெட்டு செங்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அதனை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் காமராஜர் பேத்தி காமராஜ்கமலிகா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராம் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி வேலுசாமி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 லட்சம் என கூறப்படுகறது.

    இதுசம்பந்தமாக தங்கச்சன் (வயது 65) மற்றும் அவரது மகன் வர்கீஸ் (35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து செங்கோட்டைகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடமும் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை வனத்துறையினரும் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி பூங்கா அருகில் உள்ள முருகாத்தாள் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்து ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுந்தரராஜன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியான தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
    • உளுந்து பயிரில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறப்பட்டது

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியான தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகச்சாமி வழிகாட்டுதலின் படி துணை பேராசிரியர் ரஜினிமாலா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பயிற்சியின் நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு வரவேற்று பேசினார். உளுந்து பயிரில் விதை உற்பத்தி முறைகள் மற்றும் உயிர் உரத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செயல் விளக்கத்தின் முறைகளை எடுத்து கூறி இதன் செயல் விளக்கம் விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பாலா உளுந்து பயிரில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறினார். இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அருண் சசிக் குமார் நன்றி கூறினார்.

    • செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, என்ஜினீயர் ஜெயப்ரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

    அதனைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை சரிவர தீர்க்காமலும், பாரபட்சமாக நடப்பதாகவும் கூறி ரஹீம் தலைமையில் இசக்கித்துரை பாண்டியன், மேரிஅந்தோணிராஜ், பினாஷா, சரவண கார்த்திகை, பேபிரெசவுபாத்திமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனா்.

    பின்னா் தமிழக அரசின் புதிய சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. உறுப்பினா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், வேம்புராஜ், செண்பகராஜன், ராஜ்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனா். அதனைதொடா்ந்து புதிய சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர்ஒளி ராமதாஸ், ராதா, சரஸ்வதி, சுகந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×