search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surashamharam"

    • வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவின் 6-ம் நாளான நாளை மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாவூர்சத்திரம் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக 22-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 6-ம் நாளான நாளை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கும்ப ஜபம், மூல மந்திர ஹோமம், யாகசாலை பூஜை,சஷ்டி ஹோமம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சியும், மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.

    இரவு 7 மணி அளவில் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். எனவே பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடுவர் என்பதால் பாதுகாப்பு பணியில் பாவூர்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்
    • 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும், 29-ந் தேதி திருமலை குமரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவில் யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் வைபோகம் நடைபெறும்.

    வருகிற 30-ந் தேதி மதியம் 2.00 மணிக்கு முருக பெருமாள் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு முக்கிய ரத வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பத்கர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்படும். 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×