search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pavurchathiram"

    • பாவூர்சத்திரத்தில் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் மாணவர்களுக்கான அரசு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
    • அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு சிலர் அதன் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் மாணவர்களுக்கான அரசு தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு சிலர் அதன் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் குப்பைகளோடு குப்பையாக தெரு ஓரத்தில் ரேஷன் அரிசிகள் கொட்டப்பட்டுள்ளதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுமார் 20 கிலோ அளவிற்கும் மேலான ரேஷன் அரிசி அங்கு கொட்டப்பட்டு கிடந்தது. ரேஷன் அரிசியை அங்கு கொட்டி சென்றது யார்? ரேஷன் அரிசியை வாங்கிச் சென்ற வியாபாரிகளில் யாரேனும் ஒருவர் கொட்டியிருப்பார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
    • காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    தென்காசி:

    கோடைகாலம் என்றாலே சாலை ஓரங்களில் அதிகம் இளநீர், சர்பத், தர்பூசணி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் கடைகள் தோன்றுவது வழக்கம்.

    அதன்படி குளிர்பா னங்கள் பருக வரும் பொதுமக்களை கவரும் விதத்திலும் அவர்களின் உடல்நிலையில் அக்கறை கொள்ளும் விதத்திலும் பாவூர்சத்திரத்தில் குளிர்பான கடை நடத்தி வரும் நபர் ஒருவர் முன்மாதிரியாக இருப்பது பெரிதும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த 8 ஆண்டுகளாக பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி சாலையில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இங்கு தர்பூசணி, இளநீர், சர்பத், சோடா உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்து வருகிறார்.

    பொதுவாக நாம் குளிர்பான கடைகளில் லெமன் சோடா கேட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் அரிராமகிருஷ்ணன் அப்படி இல்லாமல் தன்னிடம் லெமன் சோடா கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு லெமன் சோடாவுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, சீரகம், மிளகு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களையும் சேர்த்து கனகச்சிதமாக லெமன் சோடா வழங்கி வருகிறார்.

    இதனை பருகும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. காரணம் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்ப்பதால் வாடிக்கையாளர்களின் தாகம் அடங்குவதோடு, ஒரு சில நோய்க்கும் மருந்தாக அமைவதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

    மக்களின் நலனுக்காக வும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிக ரிக்கும் வண்ணமும், தான் மற்றவ ர்களை போல் இல்லா மல் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை சேர்த்து லெமன் சோடா வழங்கி வருவதாக தெரிவிக்கிறார். 

    • கூட்டத்திற்கு தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரணியசுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்திருவிழா நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன், கீழப்பாவூர் பால்துரை, வணிகர் சங்க நிர்வாகிகள், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் 10-ம் திருவிழாவில் பால்குடம் எடுத்து வரும் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையப்பட்டி, திப்பணம்ட்டி அரியப்பபுரம், வெங்காலிபட்டி , கல்லூரணி, ஆரியங்காவூரை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது. சாதி ரீதியான வாசகங்களோ, தலைவர் படம் பொறித்த பனியன்களோ அணியக்கூடாது. சாதித்தலைவர்கள் படம் போட்டு விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. 10-ம் திருவிழாவன்று மதியம் 12 மணிக்குள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



    • பழைய மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவில் வாசலின் முகப்பு பகுதியில் பொதுமக்கள் அவ்வப்போது கொட்டி வருகின்றனர்.
    • வீடுகளில் கழிப்பறையில் பயன் படுத்தப்பட்ட கோப்பைகளை சில மர்மநபர்கள் குப்பைகளுடன் சேர்த்து தூக்கி எறிந்து சென்றுள்ளனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கல்லூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பழைய மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவில் வாசலின் முகப்பு பகுதியில் நெல்லை- தென்காசி சாலையில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை பொதுமக்கள் அவ்வப்போது கொட்டி வருவதால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. ஊராட்சி நிர்வாகமும் தொடர்ந்து அப்புறப்படுத்தி வந்தாலும் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் வீடுகளில் கழிப்பறையில் பயன் படுத்தப்பட்ட கோப்பைகளை சில மர்மநபர்கள் குப்பைகளுடன் சேர்த்து தூக்கி எறிந்து சென்றுள்ளதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு என கூடுதலாக குப்பை தொட்டிகளை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
    • முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடியவில்லை.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் மிக முக்கியமான ரெயில் நிலையமாகவும், 2-வது அதிக வருமானம் தரும் ரெயில் நிலையமாகவும் பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது.

    இந்த ரெயில் நிலையத்தில் தற்போது காலை 8.30 முதல் 10.30 வரையும், நண்பகல் 11.30 முதல் 12.30 வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் முன்பதிவு மையம் இயங்கி வருகிறது. இந்த முன்பதிவு மையமானது ரெயில் நிலைய மேலாளர்களால் இயக்கப்படுகிறது.

    டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தனியாக வர்த்தக அலுவலர்கள் யாரும் கிடையாது. இதனால் சில நேரங்களில் பராமரிப்பு பணிகளுக்காக ரெயில்கள் வரும் போது ஸ்டேஷன் மாஸ்டர்களால் முன்பதிவு செய்ய முடிவதில்லை.

    மேலும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையமானது பிளாக் ஸ்டேஷன் என்பதால், தென்காசிக்கும், கடையத்துக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட்டு களை மூடுவது, திறப்பது குறித்த கட்டுப்பாட்டு அறை பாவூர்சத்திரத்தில் உள்ளது.

    பயணிகள் தவிப்பு

    ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்கள் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவது மட்டுமல்லாமல் முன்பதிவையும் சேர்த்து செய்வதால், சரியான நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.


    இதுகுறித்து திப்ப ணம்பட்டியைச் சார்ந்த ரெயில் பயணி ஜெகன் கூறியதாவது:-

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.

    சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு செய்யப்படும் முன்பதிவு, காலை 11 மணிக்கு குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு செய்யப்படும் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

    காலை 10 மணிக்கு செய்யப்படும் ஏ.சி. தட்கல் மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. பரா மரிப்பு ரெயில்கள் வந்து விட்டால் அதுவும் செய்ய முடியாது.

    ரெயில்வேயின் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக, வர்த்தகப் பணியாளர்கள் நீக்கப்பட்டு, ரெயில் நிலைய மேலாளர்கள் மேற்கொள்வதால், ரெயில்கள் வரும் நேரங்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடிய வில்லை.

    தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் நேரங்களில் பயணி களுக்கும், நிலைய மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கு முன்பு பாவூர்சத்தி ரம் தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்ததால் பயணிகள் மிகவும் பயன டைந்து வந்தனர். தற்போது அங்கும் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது.

    எனவே ஆயிரக் கணக்கான பயணிகளின் நலன் கருதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு மையம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் செயல் படும் வகையில் தனியாக டிக்கெட் முன்பதிவு ஊழியர் ஒருவரை நியமித்து முன்பதிவு மற்றும் முன்பதிவல்லாத டிக்கெட்டுகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    • திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 70) இவர் திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரில் போலீசார் வாகன சோதனை செய்ததில் சடையப்பபுரம், மேலத்தெரு ராமையா மகன் கோபாலகிருஷ்ணன் என்ற கண்ணன் (42) என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 96 குவாட்டர் பாட்டில்களையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பாவூர்சத்திரம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர். பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் கூடுதலாக தண்ணீரை தெளித்து சாலை அமைக்கவும், தென்காசியில் இருந்து ஆலங்குளம் வரை நடைபெறும் சாலை பணியில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், சாலை பணி நடைபெறுவதை குறிக்கும் எச்சரிக்கை பலகையும் பயன்படுத்தப்படவில்லை. எனவே அவைகளை முறையாக அமைத்து வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவில்லை எனில் பாவூர்சத்திரம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
    • பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில், பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

    இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகள் பொதுப் பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு, ஆரம்ப நிலை பிரிவு என 3 பிரிவு களாக நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். செயலர் வைகை குமார் முன்னிலை வகித்தார்.

    பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் நெல்லை மாவட்ட வீரர் ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட வீரர் சிபி சக்கரவர்த்தி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவர் ஜேட் ஆட்ரியான், இலஞ்சி பாரத் பள்ளி மாணவர் சுரேந்தர் ஆகியோர் முதல் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    புது வீரர்கள் பிரிவு மாணவர்கள் பிரிவில் சுரண்டை அரசுப்பள்ளி மாணவர் பரணிசுதாகர், மாணவிகள் பிரிவில் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவி தர்ஷினி, ஆரம்ப நிலை வீரர்கள் பிரிவில் தென்காசி வேல்ஸ் பள்ளி மாணவர் தீனதயாளன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    பொதுப்பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் பரிசு கோப்பையும் மற்ற பிரிவின ருக்கு பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்கள் பெற்றவர்கள் பொதிகை கோப்பை 2023 மாநில சதுரங்க போட்டியில் விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    விழாவில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ், மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பாலகிருஷ்ணன், குலசேகரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், சதுரங்க பயிற்சியாளர்கள் ஜெயசங்கர், அருண்குமார், ராஜகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

    • தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
    • பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.

    அதில் இசக்கி சந்துரு 53 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், பால் மணி 60 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும்,கோமதி சங்கர் 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சுகுமார் 45 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், கிஷோர் கவிஷ் வெண்கல பதக்கமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களை பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
    • மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரிய வந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மேட்டூர் ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் உடல் ஒன்று கிடந்தது.

    ரெயிலில் அடிபட்டு பலி

    இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்தவர் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரத்குமார் (வயது 25) என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சுப்பிரமணியன் இறந்ததால் தனது தாயுடன் அவர் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    நேற்று இரவில் வெய்காலிப்பட்டி அருகே உள்ள மேட்டூர் ெரயில் தண்டவாளத்தை இரவு 12:15 மணிக்கு கடக்க முயன்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் உடல் 3 துண்டுகளானது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய மக்கள் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
    • மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ரெயில்வே தரைப்பாலம் முழுமையாக மழை நீரால் நிரம்பி காணப்படுகிறது.

    எனவே அச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் யாரும் மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பால வழியினை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட், தண்ட வாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதனால் தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி யில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேர பட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து வழக்கமான சாலையில் சென்றது. இதனால் வாக னத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளானார்கள்.

    ×