search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "replace"

    • புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
    • பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய மின் மோட்டார் அமைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணியினை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்த தாவது:-

    வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீமுருகன் திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முத்தூர் –காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

    முத்தூர் காங்கேயம் கூட்டுக்குடிநீர் திட்டமானது திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 1790 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 86 கிராம ஊராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டமாகும். 1998-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் உள்ள கான்கிரீட் குழாய்கள் 25 வருடங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வடிவமைக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலவில்லை. அதன் பொருட்டு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதல் துறையின் மூலமாக ரூ. 62.29 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணியானது 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முத்தூர் – காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இத்திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தலைமைப்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) செல்லமுத்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் கண்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    • நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.


    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். #PoliceCommissioner #RajeevKumar
    கொல்கத்தா:

    நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கிய ராஜீவ் குமார் சி.ஐ.டி. பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து கொல்கத்தா போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அனுஜ் சர்மா நேற்று நியமனம் செய்யப்பட்டார். #PoliceCommissioner #RajeevKumar 
    அடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers
    பெங்களூரு:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.



    இதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

    கோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.

    விராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers 
    ×