என் மலர்
நீங்கள் தேடியது "public"
- கடை ஒன்றில் கேக்கிற்கு நாயின் பெயர் 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.
- 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து எல்தோ என்ற தெருநாய் வாழ்ந்துள்ளது.
டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த உத்தரவை வரவேற்றுள்ள நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேரளா மாநிலம் கொழிவெட்டும்வெலி பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்ற தெருநாய்க்கு ஊர் மக்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த நாய்க்கு பாலில் செய்த கேக் மிகவும் பிடிக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கேக்கிற்கு 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.
- யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
- தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை அமைந்து உள்ளது. இது மலைஅடிவாரத்தை ஒட்டிய கிராமம் ஆகும்.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை இன்று அதிகாலை நெலாக்கோட்டை கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற வாகனங்களை தந்தத்தால் முட்டி சேதப்படுத்தியது. மேலும் நெலாக்கோட்டை வீடுகளின் பக்ககவாட்டு சுவர்களை இடித்து தள்ளியது.
இதற்கிடையே தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் திடுக்கிட்டு விழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தெருவில் காட்டு யானை சுற்றி திரிவது தெரிய வந்தது.
இதனை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து நெலாக்கோட்டை கிராமத்தினர் திரண்டு வந்து பெரிதாக சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஓசை எழுப்பியும் காட்டு யானையை விரட்டினர். பின்னர் அந்த யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
நெலாக்கோட்டை கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு நின்ற வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நெலாக்கோட்டை-கூடலூர் போக்குவரத்து சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக நெலாக்கோட்டை-கூடலூர் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நெலாக்கோட்டை கிராமத்தினர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும் அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தொடர்ந்து நாங்கள் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் அவர்கள் நெலாக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
- வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.
- சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன.
இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வன விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.
காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.
தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
இதனால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
- மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வந்தது.
நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டு வந்தனர்.
மூன்றாவது நாளாக இன்றும் மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி, சுஜில் கரை, கோட்டமாளம், பூதாளபுரம், தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.
மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.
எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் ரோட்டில் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தில் முதலை ஒன்று உலா வந்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடுமலை அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும் போது அமராவதி அணையில் இருந்து முதலைகள் தண்ணீர் வழியாக வந்து ஆற்றில் ஆங்காங்கே இருந்து வருகிறது.
இதற்கு முன்பு சீதக்காடு, தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில், வீராச்சிமங்கலம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருந்து வந்தது. அப்போது தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றில் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் முதலை தப்பி சென்றது.
தற்போது முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முதலை நடமாட்டத்தால் அலங்கியம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கீழே இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு செல்லும்போது அலங்கியம் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அமராவதி ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.
இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.
இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
- குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
- பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில், மின் கம்பத்தை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சாலையிலும் மழைநீர் தேங்கி உள்ளதால், வேலைக்கு செல்வோர், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர் என அனைவரும் இந்த பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்தபடிதான், செல்ல முடியும். மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால், தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே தாமதம் செய்யாமல், மின் கம்பத்தை சுற்றி நிற்கும் மழை நீரை அகற்றி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாரவிரதம் நடைபெற்றது
- பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் பொதுமக்கள் அடிப்படை வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் சசிக்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவலறிந்த பெரம்பலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டம் சுமார் 5மணிநேரம் நடந்தது. பின்னர் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அளித்தனர்.
- வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
- சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு;-
துணை மேயர் அஞ்சுகம் பூபதி: 51-வது வார்டில் சில இடங்களில் காலியாக உள்ள மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது.
இதனால் வீட்டுக்குள் பாம்பு, விஷபூச்சிகள் படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: தீபாவளி நேரத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என கூறியது. அப்போது எப்படி இந்த கடைகள் அமைக்கப்பட்டன.
இதற்கு பதில் அளித்து ஆணையர் சரவணக்குமார் பேசும்போது, வியாபாரிகள் அவர்களாகவே கடை அமைத்தனர்.
இனி வரும் காலங்களில் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
இதையடுத்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு;-
கவுன்சிலர் கோபால்:
எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை.
உடனடியாக அனைத்து பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு உடனே முடிக்க வேண்டும்.
சரவணன்: சேவப்பநாயக்கன்வாரி 3 தெருவில் சாலை வசதி இல்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
யு.என்.கேசவன் :
எனது வார்டில் சாலைகள் மோசமாக உள்ளது.
அதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மழை காலம் தொடங்க உள்ளதால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
காந்திமதி :
கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே வேறு இடத்தில் மீன் மார்க்கெட்டுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் சாலைகள் பழுதடைந்துள்ளது.
அதனையும் சீரமைக்க வேண்டும்.
ஜெய்சதீஷ் :
எனது வார்டில் பாதாள சாக்கடை ஆழ்துறை குழிக்கான மூடி கண்டுபிடிக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதே நேரத்தில் சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்தும் சரிவர மூடாப்படாதால் சாலை சேதமடைந்துள்ளது.
அதனை சரி செய்ய வேண்டும்.
ரம்யா சரவணன் :
தஞ்சை மாதவராவ் நகரில் இருந்து அண்ணா நகர் வரையிலான பகுதிகளில் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும்.
கடன் இல்லாத மாநகராட்சி
கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது;-
தமிழகத்தில் கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது.
- பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் நல்லூர் பகுதி 3-ம் மண்டலத்தில் அமைந்துள்ள 46வது வார்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். அந்த நிலத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கொசு தொல்லை மற்றும் பல நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீர்கள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எத்தனையோ முறை பொதுமக்கள் சார்பாக தடுத்து பார்த்தும் குப்பைகள் மற்றும் கம்பெனி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டும் இடமாக அந்த இடம் மாறி வருகிறது. அதுபோக அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்ச நிலையையும் நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது . திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பஸ் நிறுத்தம், கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநகரின் பல இடங்களில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் காமாட்சி புரம் கல்லூரி சாலையில், மின் இணைப்புக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி சாலை ஓரத்தில் போட்டுள்ளதால் கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் பலரை பாராட்டி கவுரவித்தார்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசியதாவது,
முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
அந்த வகையில் உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பர் இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கிராம சபை மூலம் பாராட்டி கவுரவித்தார்.
இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நமச்சிவாயம், உதவி இயக்குனர் (வேளாண்மை துறை) சுதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய குழு தலைவர் செல்வம் சவுந்தர்ராஜன், ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணன், குமரவடிவேல், ஊராட்சி செயலர் மருதாசலமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது.
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
திருப்பூர் :
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இதில் 37-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகள் மற்றும் நடைபெற இருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை மேயர் கே.எம். பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
37-வது வார்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல் சாக்கடை கால்வாய், சுகாதாரம்என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ்குமார், 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






