என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stray dog"

    • தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
    • மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    டெல்லியில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

    அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    இந்நிலையில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். அங்கு தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்.

    பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  

    • சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர்.
    • நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாக தெரிவித்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில் தெருநாய் ஒன்று இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டிய கொட்டகையில் நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெல்லந்தூரைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்தார்.

    அவர் தனது புகாரில், அக்டோபர் 13 ஆம் தேதி கொட்டகையில் ஒரு கும்பலால் தெரு நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் தான் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்கு வதை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்குனர்.

    சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர். நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு பின் உண்மை வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • நாய்களை தூக்கிச் சென்று சாப்பிடலாம் என சிறுத்தை தாக்கியது.
    • ஆனால் தெருநாய் சிறுத்தையை படுகாயமாக்கியது.

    டெல்லி தலைநகர் பகுதியில் தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி வந்த நிலையில், வெறிநாய் கடித்து சிலர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இதனால் நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. பின்னர், கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த இன்று உத்தரவிட்டுள்ளது.

    டெல்லியில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான இடத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியாக செல்லுபவர்களை கடித்து குதறும் காட்சிகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறுத்தைகள், புலிகள் வீட்டில் உள்ள நாய்களை அடித்து தூக்கிச் செல்லும் காட்சிகளையும் பார்த்திருக்கிறோம்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறுத்தையையே தெருநாய் கடித்து சுமார் 300 மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்ற பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட கங்குர்டே வஸ்தி அருகே, சில நாய்கள் உலாவிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் புகுந்த சிறுத்தை, நாய்களை துரத்தியது. இதில் ஒரு நாய், சிறுத்தையின் வாய் பகுதியை கவ்விக்கொண்டது. இதனால் சிறுத்தையால் ஒன்னும் செய்ய முடியவில்லை. தன்னை மிஞ்சிய எடை கொண்ட சிறுத்தையை 300 மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த சிறுத்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    அதிக எடை மற்றும் மின்னல் வேகத்தில் பாயும் சிறுத்தையையே கடித்து குதறுகிறது என்றால், அப்பாவி மக்கள் தனியாக கிடைத்தால் என்னவாகும்? என வீடியோவை பார்க்கம்போது பதைபதைக்க வைக்ககிறது.

    • இந்த பெஞ்ச் முந்திய 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது.
    • ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும்.

    டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 8 அன்று உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து நாய் பிரியர்கள் செய்த மேல்முறையீடு 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. இந்த பெஞ்ச் முந்தைய 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது. 

    அதில், 

    பொது இடங்களில் மக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி வார்டுகளில் நிர்வாகம், உணவளிக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.

    இந்த உத்தரவை டெல்லி உடன் நிறுத்திக்கொள்ளாமல் நாடு முழுவதும் விரிவு படுத்த இந்தியா முழுவதும் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகிறோம்.

    கருத்தடை, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு நாய்களை அதே பகுதிக்கு விடுவிக்க வேண்டும். இருப்பினும், ரேபிஸ் அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும்.

    விலங்கு ஆர்வலர்கள் நாய்களைத் தத்தெடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நாய்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும்.

    எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்பும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தலையிட முடியாது.

    ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த நாய் பிரியர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ரூ.25,000 மற்றும் ரூ.2 லட்சத்தை பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

    • கடை ஒன்றில் கேக்கிற்கு நாயின் பெயர் 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.
    • 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து எல்தோ என்ற தெருநாய் வாழ்ந்துள்ளது.

    டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த உத்தரவை வரவேற்றுள்ள நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கேரளா மாநிலம் கொழிவெட்டும்வெலி பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்ற தெருநாய்க்கு ஊர் மக்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக இந்த நாய்க்கு பாலில் செய்த கேக் மிகவும் பிடிக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கேக்கிற்கு 'எல்தோ கேக்' என்றே பெயரிட்டுள்ளனர்.

    • நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.

    சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.

    நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்

    முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
    • கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.

    கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     

    • பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
    • இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளி சிறுவர்களை கடிப்பதற்கு துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அங்கிருந்தவர்கள் அந்த தெரு நாய்களை துரத்த முற்பட்டபோது அங்கிருந்த சிற்றுண்டி கடை உரிமையாளரை கடிக்க சென்றதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    எனவே இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    • ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது.
    • நேற்று ஒரே நாளில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது.

    கோவை,

    கோவையின் மைய பகுதியில் ரேஸ்கோர்ஸ் அமைந்துள்ளது. இங்கு 2 அரை கிலோ மீட்டரில் நடைபயிற்சி செல்லும் மைதானம் உள்ளது. இங்கு தினசரி ஆயிரகணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ரேஸ்கோர்சில் குழந்தைகள் விளையாடும் பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அடைந்துள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் இடங்கள் அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, ஆலயம், கோவில் ஆகியவையும் அமைந்துள்ளது. எனவே இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    ரேஸ்கோர்ஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய் ஒன்று வெறிபிடித்த படி திரிந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை விரட்டி விரட்டி காலில் கடித்தது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வெறிபிடித்த நாய் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது. இதனால் அந்த வழியாக சென்ற வர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரேஸ்கோர்சில் தினசரி நடை பயிற்சி செல்லும் வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

    ரேஸ்கோர்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் நாய்களை பிடித்து செல்கிறார்கள். பின்னர் கருத்தடை செய்த பின்பு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேறு பகுதிகளில் பிடித்த நாய்களையும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பலர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு தினசரி வந்து நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் உணவு பொருட்களை அளிக்கின்றனர். இதனால் ஈர்க்கப்பட்ட நாய்கள் அங்கே தங்கி விடுகின்றன. இப்படி நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்கள் நாய்களை அவர்களது வீடுகளுக்கு எடுத்து சென்று உணவு வழங்க வேண்டியது தானே. எனவே அதிகாரிகள் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94, 95-வது வார்டு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. திருநகர் பகுதியில் பொதுமக்கள், நடைபயிற்சி செல்வோர், மாணவ-மாணவிகள், பெண்கள் அதிகளவில் சென்று வரும் சாலைகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன.இவைகள் வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

    மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகளை நாய்கள் தூக்கிச்செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துட னேயே வெளியே சென்று வருகின்றனர்.

    நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு அவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக மாநக ராட்சி சார்பில் கூறப்பட்டா லும், தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது.
    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தெரி தெரு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை வெறி நாய் கடித்தது. அதை விரட்ட சென்ற தாயாரையும் கடிக்க வந்த போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் நாயை விரட்டினர். கடந்த மாதத்தில் மட்டும் கீழக்கரையில் 9 நபர் களை வெறி நாய்கள் கடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களை அச்சு றுத்தும் வெறி நாய் களை பிடிக்க கீழக் கரை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகா ரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் கூறுகையில்,

    கீழக்கரையில் தொடர்ச்சியாக வெறி நாய்கள் பொது மக்களையும் குழந்தை களையும் கடித்துக் கொண்டி ருக்கிறது. இதனை எஸ்.டிபி.ஐ. கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பொது மக்களை ஒன்று திரட்டி நாய்களை நகராட்சிக்குள் விடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    ×