என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rabies dogs"

    • நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.

    சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.

    நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்

    முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ராமத்தில் இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளையும் தெரிவிக்கவில்லை.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில் இறைச்சிக் கடைகள் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றன. வாரம்தோறும் சேகரமாகும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர்.

    குறிப்பாக ரோட்டோரங்களிலும், மழை நீர் ஓடைகளிலும், மூட்டை, மூட்டையாக இத்தகைய கழிவுகளை கொட்டுகின்றனர். குறிப்பாக கோழிக்கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுவதால் சில நாட்களில், அப்பகுதியில் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது.

    கழிவுகள் மட்கும் முன் அதிலிருந்து நோய்க்கிருமிகளும் கால்நடைகளுக்கு பரவுகின்றன. உடுமலை நகர எல்லையிலுள்ள ராஜவாய்க்கால் பள்ளம், கணபதிபாளையம் பிரிவு, அந்தியூர், ஏரிப்பாளையம் ஓடை ஆகிய இடங்களிலும், குடிமங்கலம் பகுதியில், உப்பாறு ஓடையிலும் இறைச்சிக்கழிவுகள் தொடர்ந்து வீசப்படுகின்றன.

    திறந்த வெளியில், கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால், ஈர்க்கப்படும் தெருநாய்கள் அப்பகுதியில் முகாமிடுகின்றன. இவ்வகை இறைச்சியால் ஈர்க்கப்படும் தெருநாய்கள், கழிவுகள் இல்லாத போது கால்நடைகளை தாக்கும் நிலைக்கு மாறி விடுகின்றன. சமீபத்தில் பல இடங்களில், கிராமப்பகுதியில் இத்தகைய பழக்கத்திற்கு ஆளான நாய்கள் பல்வேறு இடங்களில் கால்நடைகளை கடித்து குதறுவது தொடர்கதையாகியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இறைச்சிக்கழிவுகள் மற்றும் பண்ணையில் நோயினால் இறக்கும் கோழிகளை, திறந்த வெளியில் வீசுவதை தவிர்க்குமாறு பண்ணையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் கிராமத்தில் இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளையும் தெரிவிக்கவில்லை.இதனால் அனைத்து கிராமங்களிலும், நகர எல்லையிலும், இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது, அடுக்கடுக்கான பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் தெருநாய்களால்ம னிதர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    ×