என் மலர்
நீங்கள் தேடியது "vaccination"
- குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
- கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயியான இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார். நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார்.
நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.
நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 3 மாத குழந்தை தஸ்விக் ராஜாவின் பெற்றோர் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், " கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை.
கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று குழந்தைக்கு 2ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதற்கு இயற்கை மருந்து கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தையுடன் 6 குழந்தைகளுக்கு ஒரே தடுப்பூசியில் இருந்து மருந்து செலுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இந்த குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் கவனிப்பில் வைக்கப்பட்டு நலமுடன் இருப்பதை அறிந்த பிறகே வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதனால், குழந்தை தடுப்பூசி குறைப்பாடால் இறக்கவில்லை.
குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்.
- கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.
- குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம்.
நெல்லை:
கடுமையான நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகி விடாமல் இருப்பதற்காக தமிழகத்தில் கால அட்டவணைகளின் படி குழந்தை களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இத்தகைய தடுப்பூசிகள் போடப்படுவதன் காரண மாக அவர்களுக்கு தட்டம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதை தடுக்க லாம்.
இதற்காக தமிழக அரசு, பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தை களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட்டு வருகிறது. எனினும் கிராமப்புறங்களில் தடுப்பூசி போடுவது குறித்து இன்னமும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருந்து வருகிறது.
கிராமப்புற மகளுக்கு தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு பணியில் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் பணிச்சுமை காரணமாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா? என்ற விவரத்தை செவிலியர்கள் சரியாக கணக்கிடாமல் விட்டு விடு கின்றனர்.
இதனை ஈடு கட்டும் வகையில் நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போடுவது அவசியம். வழக்கமாக தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்களுக்கு தற்போது தமிழக அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் அதாவது மாநகராட்சி நகர் புறம் மற்றும் கிராமப்புறங்களை சேர்த்து இதுவரை 3,222 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பது கணக்கிடப்பட்டுள்ளது.
இதே போல் 500 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படாமல் இருக்கிறது. அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சராசரியாக ஒரு வாரத்தில் 6 நாட்களில் 1200 முகாம்கள் அமைக்கப்பட்டு விடுபட்டவர்கள் அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை கிராமப்புற கர்ப்பிணிகள், குழந்தைகள் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அந்தந்த பகுதி சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தைகள்-கர்ப்பிணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
- விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டும்.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையின் மூலம் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தில் இந்த முகாமை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய தடுப்பூசி முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்ப டுகின்றன. இத்தகைய ஊசி 12 வகையான நோய்களை தடுக்கும் சக்தி கொண்டதாகும். பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசி போட்டுக்கொள் வதில்லை. ஆதனால் பல்வேறு நோய்கள் தாக்குவது கண்டறி யப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,13,577 பேர் உள்ளனர். அதில் 1845 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் முறையான தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி முகாம்களின் மூலமாக தடுப்பூசி அளிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவனைகள் உட்பட 823 மையங்களில் தடுப்பூசி அளிக்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் இந்திரா, வட்டார மருத்துவஅலுவலர் சுகந்தி,பூச்சியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர் பக்கீர் முகமது மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீவிர மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
- 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விடுபட்டு போன தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ளலாம்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தீவிர மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம் இன்று முதல் 12 ந்தேதி வரை நடக்கிறது.
எனவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் விடுபட்டு போன தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
- 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும்.
- யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
இந்திர தனுஷ் திட்டம் விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1342 குழந்தைகள் மற்றும் 132 கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்று எதிர்வரும் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் இந்த விவரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய மருத்துவ துறையினருக்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
High Risk எனப்படும் அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் புலம் ெபயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜெகதீஸ்குமார், உலக சுகாதார அமைப்பை சார்ந்த ஆஷா மற்றும் வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தது முதல், 2 வயது வரை, 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய அளவில் இந்த திட்டம் அடுத்த மாதம் 7ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அவர்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உறுப்பினர் செயலர், தடுப்பூசி திட்ட கண்காணிப்பு நல அலுவலர் வேலன், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ஊட்டச்சத்து துறை, தொழிற்சாலை துறை, தொழிலாளர் நல துறை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர் குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, இதற்காக துறை வாரியாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பு, பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவற்றை முற்றிலும் சாப்ட்வேர் மூலம் முழுமையாக பதிவேற்றம் செய்து, தினமும் இதன் விவரங்களை குழுவுக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
- கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுகிறது.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர்அருகே பெரு ந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட வைகள் மேற்கொள்ளப்படு கிறது. மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளா றுகள் கண்டறியப்படுகிறது. இம்முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்ட வைகளை கால்நடை வளர்ப்போரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர் 3 நபர்க ளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் உடனிருந்தனர்.
- யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் (2023) அறிமுகப்படுத்தியது.
- யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் குழந்தைகளுக்கான மத்திய அரசின் யு - வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த தமிழக சுகாதாரத்துறை ஆயத்தமாகி வருகிறது.
நோட்டில் மட்டுமே இருந்து வரும் தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல்மயம் ஆக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.
கர்ப்பிணியர், குழந்தைகளுக்கான தடுப்பூசி விபரம் மற்றும் அட்டவணையை இச்செயலி மூலமாக மொபைல் போன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் யு - வின் செயலி இயக்கம் மே மாதம் அறிமுகமானது. மீதமுள்ள 36 மாவட்டங்களில் இம்மாதம் 31-ந்தேதிக்குள் யு - வின் செயலியை இயக்கத்துக்கு கொண்டு வர சுகாதாரத் துறை ஆயத்தமாகியுள்ளது.
மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட இணை இயக்குனர், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி, எந்த நாளில் செலுத்த வேண்டும் என்பதில் பெற்றோர் பலர் ஒரு வித குழப்பம் அடைகின்றனர்.மொபைல் போன் வழி நினைவூட்டல் இருந்தால் தடுப்பூசி செலுத்த முன்கூட்டியே தயாராகி விடுவர். சரியான தேதியில் செலுத்துவது சாத்தியமாகி விடும்.யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
- ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், மினரல் மிக்சர் 75 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட ஒன்பது மாடுகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை துணை இயக்குனரும் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன், உழவர் பயிற்சி மைய டாக்டர் கதிர்செல்வம், ஆவின்பால் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் மகேந்திரன், ஆவின் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோமளா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
- நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி?
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையில் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், நோய்களிருந்து கால்நடைகளை பாதுக்காப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.