search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    கால்நடை மருத்துவ முகாம்

    • முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம், தோல் கழலை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமானது கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர்கள் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முகம்மது சலாவுதீன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.

    இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சசிக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர், செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வடகரை ஊராட்சி திருப்பனையூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்து முகாமை நடத்தி வைத்தனர். அதே போல் ஆதலையூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை வகித்துமருத்துவ முகாமை நடத்தி வைத்தார்.

    Next Story
    ×