என் மலர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு"
- சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
- சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.
ஊட்டி:
சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலமாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓ.டி.பி. உள்ளிட்ட தகவல்களை யாரும் கூற வேண்டாம்.
அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.
டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இணையத்தில் ட்ரெண்டாகும் மீம்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் போலீசார் பகிர்ந்து வருகின்றனர்.
- கிரீடம் படத்தில் வரும் ராஜ்கிரணை வைத்து நெட்டிசன்கள் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.
கிரீடம் படத்தில் வரும் 'கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே' என்ற பாடலை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வந்தனர்.
அந்த பாடலில் தன மகனை நினைத்து அப்பா ராஜ்கிரண் பெருமைப்படுவார். அதனை மீமாக மாற்றி நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர்.
அவ்வகையில் இந்த மீமை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையும் கோவை போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'அனைத்து கோவை மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, ஹெல்மெட் அணிகின்றனர்.' அதனை நினைத்து கோவை போக்குவரத்து போலீசார் பெருமைப்படுவதாக கிண்டலாக தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மீம்களை காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
When All Coimbatore Peoples Following Traffic Rules&Wear Helmet ~ City Police be LikeCOIMBATORE CITY POLICE #coimbatore #coimbatorecitypolice #traffic #beawarebesafe #bealert #trafficnews #followtherules #wearhelmet #wearseatbelt @tnpoliceoffl@CMOTamilnadu @CollectorCbe pic.twitter.com/hpECcgvVEB
— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) January 18, 2025
- தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
- செல்போன் கடைகளில் வைத்திருந்த 500 ‘டம்மி’ ஸ்மார்ட் செல்போன்களை சேகரித்தார்.
அரியாங்குப்பம்:
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் உப்புக்கார வீதியை சேர்ந்தவர் சுந்தரராசு (வயது 52). இவர் மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருகிறார்.
கொரோனா காலத்தில் மருத்துவ பொருட்களை பயன்படுத்தி குடில் அமைத்திருந்தார். மேலும் 1 கன செ.மீ. அளவில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றுள்ளார்.
இந்தநிலையில் தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களால் குடில் அமைக்க ஆசிரியர் சுந்தரராசு முடிவு செய்தார். இதற்காக செல்போன் கடைகளில் வைத்திருந்த 500 'டம்மி' ஸ்மார்ட் செல்போன்களை சேகரித்தார். அவற்றை பயன்படுத்தி தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.
இதில் ஏசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. சைபர் குற்றத்திற்கு முக்கிய காரணமான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் மற்றும் இ-மெயில் போன்ற வலைதளங்களின் முகப்பு பக்கங்களை கொண்ட டம்மி செல்போன்களால் குடில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வியந்து வருகின்றனர்.
- தலைக்கவசம் அணிவது சட்டப்பூர்வமான தேவை மட்டுமல்ல, பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதும் கூட.
- தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவேண்டும், கார் ஓட்டும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று சட்டத்தை அமல்படுத்தினாலும் அதை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமருபவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவது சட்டப்பூர்வமான தேவை மட்டுமல்ல, பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதும் கூட.
இந்த நிலையில், திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் மணமக்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர். பின்னர் மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதனை அடுத்து, விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு பிரேந்திரன் தனது திருமண விழாவில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மணகன் பிரேந்திரன் சாஹு கூறுகையில், தனது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்பு ஆழமாக என்னை பாதித்தது. இதனை தொடர்ந்து இருசக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டேன் என்றார்.
- அப்பா நீங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள் என எழுதப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக ஏலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் புதுமையான விழிப்புணர்வு தொடங்கியுள்ளனர்.
வழக்கமான வேகம் மற்றும் எச்சரிக்கை அறிவுரைகளையும் தாண்டி இந்த மாவட்டத்தில் விபத்துகள் அதிகரித்தது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களை நினைவுபடுத்தும் வகையில் உணர்ச்சிகரமான வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சாலை சந்திப்புகள், விபத்து நடைபெறும் இடங்களில் சிறுமி ஒருவர் தனது கையில் வாசகத்துடன் நிற்பது போல பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அப்பா நீங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள் என எழுதப்பட்டுள்ளது.
இது வாகன ஓட்டுபவர்கள் இதயத்தை வருடும் வார்த்தைகளாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
முதற்கட்டமாக ஏலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடுமையான தண்டனை, எச்சரிக்கை போன்றவற்றை விட உணர்ச்சிகரமான அணுகுமுறை பொதுமக்களுக்கு விரைவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என போலீஸ் சூப்பிரண்டு பிரதாப் சிவ கிஷோர் தெரிவித்தார்.
- நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது.
- பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக எச்சரித்தும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்றும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், போதை பொருள் அடங்கிய பார்சல் வந்து இருப்பதா கவும் கூறி பல வகைகளில் சைபர் கிரைம் கும்பல் அப்பாவி மக்களிடம் பணத்தை அபேஸ் செய்து வருகின்றன.
இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் ஏமாந்து பணத்தை இழந்து வருகின்றனர். ஏமாற்றுபவர்கள் புது வகையான டெக்னிக்கல் யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடு கின்றனர்.
சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது.
எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. அவ்வாறு யாரேனும் தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக போலீசாருக்கு தெரி விக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று நேற்று நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபேசி யுள்ளார்.
பிரதமர் மோடியே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 7.40 லட்சம் ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் ரூ.120 கோடி வரை மோசடி கும்பல் பறித்துள்ளனர். ஆன்லைன் மோசடி கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே தொடர்பு கொள்கின்றனர்.
இந்தியாவை குறிவைத்து மியான்மர், லாவோஸ், கம்போடியாவில் இருந்து ஏராளமான மோசடி கும்பல் போன் மற்றும் தகவல் தொடர்பு மூலம் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 நாடுகளில் இருந்து மட்டும் 46 சதவீதம் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
ஆன்லைன் மோசடிகளில் சபலபுத்திக்காரர்களை குறி வைத்து இனிமையான குரலில் பேசி காதல் செய்யலாம் என்றும் டேட்டிங்கிகுக்கு அழைத்தும் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளது. ரூ.13.23 கோடி வரை காதல் மற்றும் டேட்டிங் மோசடிகள் நடந்துள்ளது.
குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்றும், பணம் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பாகும் என்றும் ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது. அந்த வகையான மோசடிகளில் ரூ.222.53 கோடி மோசடி நடந்துள்ளது.
ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக கூறிதான் அதிகளவில் மோசடி நடந்துள்ளது. இந்த வகையில் ரூ.1776 கோடி வரை மோசடி நடந்துள்ளது.
தற்போது புதிய வகையாக உங்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள், சட்ட விரோதமான பொருட்கள் கொண்ட பார்சல்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்று வீடியோ அழைப்பு மூலமும் மோசடி நடக்கிறது.
அமலாகத்துறையில் இருந்து பேசுவதாகவும் போலீசார் சீருடை அணிந்து பேசுவது போலவும் மோசடி செய்து பணத்தை பறிக்கின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு 15.56 லட்சம் ஆலைன் மோசடி புகார்களும், 2022-ம் ஆண்டு 9.65 லட்சம் புகார்களும், 2021-ம் ஆண்டு 4.52 லட்சம் புகார்களும் வந்துள்ளது.
தற்போது நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆலைன் மோசடி புகார் அதிகரித்தே வருகிறது.
அனைத்து மாநிலத்திலும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆலைன் மோசடி குறையவில்லை. அதிகரித்துதான் வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இல்லா விட்டால் ஆன்லைன் மோசடியை குறைக்க முடியாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 36 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றதே சாதனையாக இருந்தநிலையில் அதனை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றது.
- சாதனையில் பங்கேற்ற அனைத்து நாய்களும் இறைச்சி கடைகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் மீட்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களை சமைத்து உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும், செல்லப்பிராணிகள் பராமரிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தென்கொரியாவில் நடத்தியது.
அதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்ற வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் 38 நாய்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 36 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றதே சாதனையாக இருந்தநிலையில் அதனை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றது.
சாதனையில் பங்கேற்ற அனைத்து நாய்களும் இறைச்சி கடைகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் மீட்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்.
- இதுவரை 224 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடி உள்ளார்.
சென்னை:
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் மீதான பயம் காரணமாக பல்வேறு தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். தற்கொலை செய்து கொ்ளவது, வீட்டை விட்டு ஓடிப்போவது என மாணவர்கள் மேற்கொள்ளும் செயல்களை தடுப்பதற்கும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கும் 14417 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எண் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவே செயல்பட்டு வருகிறது.
இந்த எண்ணை மாணவர்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14417 எண்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற டி-சர்ட்டை அணிந்து வருகிறார். டி-சர்ட்டின் பின்பகுதியில் இந்த எண் பொறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
பள்ளி கல்வி துறையின் தகவல் மையம் போலவும் மாணவ-மாணவிகளுக்கு உரிய மனநல ஆலோசனையை வழங்குவதற்கும் செயல்பட்டுவரும் 14417 என்கிற எண்கள் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 6 மாதமாக அணிந்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு வரும் அவர் இது வரை 224 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியுள்ளார். விரைவில் முதல் அமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் தனது ஆய்வை அமைச்சர் முடிக்க உள்ளார்.
மாணவர்களின் மனதில் 14417 என்கிற எண் முழுமையாக பதிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த எண்கள் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டை அமைச்சர் அணிந்து வருகிறார். இது நல்ல பலனையும் கொடுத்துள்ளது.
மனநல ஆலோசனை தொடர்பான எண் எது என்று தெரியாமல் இருந்த மாணவ, மாணவிகளின் மனதிலும் அந்த எண் பதிவாகி இருக்கிறது.
மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் அத்தனை தகவல்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
- Zero accident day என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது.
- இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.
சென்னை:
சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரமானது ஆகஸ்ட் 5 தொடங்கி ஆகஸ்ட் 25-ந்தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெற்றது.
Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம் குறித்து வேப்பேரி டிராபிக் இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,
சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 5.8.2024 முதல் இன்று வரைக்கும் 26.8.2024 வரை சென்னை பெருநகரத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நடத்தி இருக்கிறோம்.
ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.
ஆகஸ்ட் 26-ந்தேதி ZAD (Zero accident day) 20 நாட்கள் விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.
சென்னை பெருநகர மக்கள் அனைவருக்கும் ZAD (ஆக. 26) (Zero accident day) என்று அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறோம்.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்வபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்று ஓவர் ஸ்பீடு செல்லக்கூடாது என்று பல நிகழ்ச்சிகள் நடத்தி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.
- போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
- துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
மதுரை:
தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.
விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.
அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது.
- சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு.
- உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டது.
சென்னை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூட்டுறவு வங்கிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன், நகைக் கடன், சுய உதவி குழுக் கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழிற்முனைவோர் கடன், மகளிர் சம்பளக் கடன், வீட்டு வசதிக் கடன் போன்ற கடன்களை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் மக்களுக்கு சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா, ரத்ததான முகாம், மரக்கன்று நடும் முகாம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.
போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.
இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.