என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு"
- தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினர்.
- ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செய்திருந்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடை துறை உதவி இயக்குநர் கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஒன்பத்துவேலி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மதியழகன் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் உதவி மருத்துவர்கள் ரகுநாத். சௌந்தரராஜன் ஆகியோர் விளக்கி பேசினர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் கால்நடை வளர்ப்போர் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் செய்து இருந்தனர்.
- பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கைகால் வழங்க நிதி திரட்டும் வகையில் நிர்வாகிகள் ஏற்பாடு
கோவை,
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் மாரத்தான் போட்டி இன்று கோவை அவினாசி சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த மாரத்தான் ஓட்ட த்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் தொடங்கி வைத்து, மக்களுடன் மார த்தான் ஓடினார். செல்லா கே.ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இதில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், டி-சர்ட், சாக்ஸ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. திட்டத்த லைவர் லட்சுமி நாராய ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் குழந்தை களை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "கிட்ஸ் வாக்க த்தான் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோவை ரேஸ்கோர்சில் நடந்த நிகழ்ச்சியை கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். பந்தய சாலை மீடியா டவரில் தொடங்கிய வாக்க த்தான் பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடை ந்தது. இதில் குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகை களை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.இதில் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி இ கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் தலைவர் ரேஷ்மா ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- ராமநாதபுரத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
- இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கான விழிப்பு ணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன.
இம்முகாமில் ஆண்க ளுக்கான குடும்பநல அறுவை (நவீன வாசக்டமி) சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை தற்காலிக மற்றும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் உயர்வரிசை குழந்தை பட்டியலில் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர். சிலருக்கு குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்று கொள்ள முடியாத வகையில் உடல்நிலை பிரச்சினைகள் இருக்கும். இதனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.
இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தின்போது உயிர் இழக்கும் ஆபத்து ஏற்படு கின்றன. இதை தவிர்த்திடும் வகையில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படு வதுடன் இத்தகைய சிறப்பு முகாம் தற்பொழுது நடை பெற்று வருகிறது. தகுதி யானவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் சிவானந்தவல்லி, இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் , விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் ஸ்ரீ காந்த் தலைமை தாங்கினார். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சிவசேனா முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் தனராஜன் வரவேற்றார் .
டோல் பிளாசாவை கடந்த வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலை துறையினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . உதவி பொறியாளர்கள் வசந்த பிரியா, கவுதம், ராஜ ஸ்வேதா, சாலை ஆய்வாளர்கள் சாந்தி, அருள்மொழி, பழனியம்மாள் , டோல் பிளாசா பி.ஆர்.ஓ., தண்டபாணி,துணை மேலாளர் சொர்ணமணி, போக்குவரத்து காவல் சப்–இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் சாலை பணியாளர்கள், டோல் பிளாசா ஊழியர்கள் பங்கேற்றனர் .
- சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
- மீன்பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே காரங்குடா, மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக் கூடாது.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. கடத்தல் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை பிரதான அதிகாரி பி.வி.வினு, ரமேஷ்ராஜா மற்றும் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும காவல் துணைக் கண்காணிப்பபாளர் பிரான்சிஸ், காவல் ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
- தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.
மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.
விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
- இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொட்டியம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி பெரியசாமி முசிறி கோட்டாட்சியர் ராஜன், மாவட்ட பழங்குடி யினர் நல அலுவலர் கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு கல்லூரி முதல்வர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்துகொண்டு இளம் வாக்கா ளர்களை அதிக அளவில் சேர்த்திடும் வகையில் இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் தேர்தல் தனி துணை தாசில்தார் செல்வி, வரி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தொட்டியம் பகுதி கிராம நிர்வாக அலுவ லர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் தொட்டியம் தாசில்தார் கண்ணாமணி நன்றி கூறினார்.
- தீ தடுப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து நடந்தது
- செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்
வேலூர்:
பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு பள்ளியில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நிலைய அலுவலர் பொறுப்பு அரசு விளக்கம் அளித்தார்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளும் முறை. தீ விபத்திற்கு எந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும் என செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் உடற்கல்வி ஆசிரியர் அமிர்தராஜ், தொரப்பாடி பள்ளி ஆசிரியர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பங்கேற்பு
- கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மாக்கமூலா பகுதியில் காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு திட்டம் தொடக்க விழா நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து கொண்டு பெயர்ப்ப லகையை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் முதல்முறையாக கிராம விழிப்புணா்வு திட்டம் கூடலூரில் தொடங்கப்பட்டு உள்ளது. இது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், கிராமத்துக்கு ஒரு காவலா் வீதம் நியமிக்கப்படுவா்.
அந்த காவலரை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடா்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதன்மூலம் கிராமத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றார்.
தொடா்ந்து கூடலூா், மசினகுடி, ஸ்ரீமதுரை, ஓவேலி, தேவா்சோலை, நடுவட்டம் ஆகிய பகுதிகளுக்கு கிராம விழிப்புணா்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு உள்ள காவலரின் பெயா், கைப்பேசி எண் அடங்கிய அறிவிப்புப் பலகையை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், கூடலூா் டி.எஸ்.பி. செல்வராஜ், பந்தலூா் டி.எஸ்.பி. செந்தில்குமாா் உள்பட பலர் கலந்துகொண்டனா்.
- நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.
- பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீ விபத்து இல்லாத தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் காங்கயம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.
இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.