என் மலர்
நீங்கள் தேடியது "slogans"
- கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மன்னார்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரை வேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விழுப்புரம்:
சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் கவர்னர் ரவியை பதவியில் இருந்து அகற்றக்கோரி விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி,மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம்,விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் ஐயர் கண்டன உரையாற்றினார்கள் அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் ஆர்.டி. சீனிவாச குமார் தலைமையில் தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- பணியாளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
- பிச்சை பாத்திரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பருவகால பணியாளர்கள் பானை, தட்டில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் 2022-23 சம்பா பருவம் தொடங்கப்பட்டுள்ளதால் கொள்முதல் பணியை மேற்கொள்ள பணியா ளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யாத நெல்லில் ஏற்படும் எடை இழப்பை இயக்கம் செய்யாத துணை மேலாளர், உதவி மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோ ரை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
சேமிப்பு கண்களுக்கு இயக்கம் செய்யப்பட்ட நெல் இறங்கிய மறுநாள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும்.
பருவகால பணியாளர்களின் சம்ப ளத்தை பிரதி மாதம் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிச்சை பாத்தி ரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநிலத் துணைப் பொருளாளர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் தயாளன், துணைச் செயலாளர் பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், இளையராஜா, ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செலிவியர்கள் உள்ளிட்ட வர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும்.
- பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் கலைவாணன், இளவரசன் தலைமை தாங்கினர்.
அரசு ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், மாநில துணைத்தலைவர்.தமிழ்நாடு உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் மாநில தீர்ப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு வெங்கட்டு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் சுந்தரம் வரவேற்றார்.
அப்போது தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அலங்காநல்லூர்-பாலமேட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க. அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்று பாலமேடு பேரூர் அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமேடு பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கவும், நிலு வையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கப்படும் என, முதல்- அமைச்சர் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசாணைப்படி உள்ளா ட்சி அமைப்புகளில் பணி புரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் சகாயராஜ் நன்றி கூறினார்.
- விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
- மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.
மன்னார்குடி:
தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.
மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை
மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 'தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரனுக்கு உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்டத் தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தன், தமிழ்நாடு வணிகவரிப்பணியாளர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் கோட்டைராசு உள்பட பலர் பங்கேற்றனர்.