என் மலர்
நீங்கள் தேடியது "pension"
- ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
- தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கல்யாணரங்கன் (எ) பாலாஜி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சேகரன், வட்டார செயலாளர்கள் இளம்வழுதி, கண்ணன், பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க சேகர் வரவேற்றார். அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓர் ஆசிரியர் பள்ளிகள் உள்ளது. உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதே நேரம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி எதிர்க்கிறது. 8 மாதங்களுக்கு பிறகு அந்த ஆசிரியர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தகுதித் தேர்வை முடித்தவர்களை மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக பணியில் சேர்க்கலாம். அவர்கள் நிரந்தரமாக பணியாற்றுவார்கள். தேவையில்லாத தற்காலிக ஆசிரியர் பணி வேண்டாம். இத்திட்டம் அக்னி பாத் திட்டத்தை விட இது மோசமானது.
ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது போல் வாக்குறுதி கொடுத்த நீங்களும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இளநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், அகில இந்திய பொது குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், நல்லாசிரியர் ராஜசேகர், இடைநிலை ஆசிரியர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டனர் மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
- ஓய்வூதியம் பெறுவோர் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர் மூலமாக சமர்ப்பிக்கலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
- இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா கூறியதாவது:-
ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வீடுகளில் இருந்தே டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது.
நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 'ஜீவன் பிரமான்' திட்டத்தில் போஸ்டல் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' மூலம் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி, வீட்டிலிருந்த படியே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதி போஸ்ட்மேனிடம் ஆதார், அலைபேசி எண், பென்ஷன் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
- ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பின்னையடி மாரியம்மன் கோவிலில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியம் பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய பொருளாளர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பூசாரிகள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய துணைத்தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் ரத்தினம், நகரச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிக்க பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். வருகிற 3-ம் தேதி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நமது பகுதியில் இருந்து அதிக நபர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 1,000 ரூபாய் முதியோர் உதவித் தொகை என்பது உண்பதற்கே போதாது என்ற நிலையில் தனியாக வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்வது என்பது மிகவும் சிரமம்.
- எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிடவும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், பக்கம் 86, பத்தி 322-ல் முதியோர் நலன்' என்ற தலைப்பின்கீழ் 'தகுதியுள்ள முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும், முதியோர் உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையினை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, தற்போது ஓய்வூதியம் பெறும் முதியோரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்று இருந்தாலோ, மகன் அல்லது மகள் வீட்டில் வசித்தாலோ, சொந்த வீடு இருந்தாலோ முதியோர் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெறுகிறார் என்றால், வேறு வழியில்லாமல், அவசர செலவுக்காக தன்னிடம் உள்ள நான்கு அல்லது ஐந்து சவரன் நகையை வைத்துக்கடன் பெறுகிறார் என்றுதான் அர்த்தம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார் என்றுதான் பொருள். அவரை எப்படி வசதி படைத்தவர் பட்டியலில் சேர்க்க முடியும்?
அதேபோன்று, மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் வயதான காலத்தில் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கு கிடைக்கிறது. மேலும், 1,000 ரூபாய் முதியோர் உதவித் தொகை என்பது உண்பதற்கே போதாது என்ற நிலையில் தனியாக வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்வது என்பது மிகவும் சிரமம். எனவே, இவர்களும் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்பவர்கள்தான். சில இடங்களில், முதியோர் ஓய்வூதியம் வருகிறதே என்பதற்காக பெற்றோர்களை வீட்டில் வைத்திருக்கும் மகன்களும், மகள்களும் உண்டு. இதை நிறுத்திவிட்டால், முதியோர்கள் நடுத் தெருவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
சொந்த வீடு வைத்திருப்பவர்களைப் பொறுத்த வரையில், அந்த வீடு பூர்வீக வீடாகவோ அல்லது குடிசை வீடாகவோ அல்லது ஓட்டு வீடாகவோ கூட இருக்கலாம். வயதான காலத்தில், எந்த வித வருமானமும் இன்றி வீட்டை மட்டும் வைத்து வாழ்க்கை நடத்திட முடியாது. சாப்பிடுவதற்கு அவர்களுக்கு வருமானம் தேவை. எனவே, இவர்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வருபவர்கள் தான்.
இந்த 'யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், தற்போது முதியோர் ஓய்வூதியம் பெறுவோரை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீக்குவது நியாயமற்ற செயல். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் இந்தச் - செயல் 'அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. தேர்தல் சமயத்தில் இனிய வார்த்தைகளில் அதைத்தருகிறேன், இதைத் தருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு நஞ்சைக் கக்குவது ஏற்புடையதல்ல. இருப்பதைப் பறிப்பது என்பது மக்கள் விரோதச் செயல்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்பதற்காக பல நிபந்தனைகளின் மூலம் ஏழை, எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிடவும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதியோர், விதவைகள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
அந்த ஓய்வூதிய தொகையுடன் மாநில அரசும் தன் பங்குக்கு பணத்தை கூடுதலாக கொடுத்து ஓய்வூதியம் வழங்குவது வழக்கமாக உள்ளது.
ஆனால் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை மிகக் குறைவாக இருக்கிது. அதாவது ஒரு நபருக்கு மாதம் ரூ.200 மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. 11 ஆண்டுகளாக இதே தொகையைத் தான் வழங்கி வருகிறார்கள். மேலும் கூடுதலான நபர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவில்லை.
எனவே ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டும், கூடுதல் நபர்களை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

நாளை மறுநாள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு தகவல்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
அதாவது பென்சன் தொகையை உயர்த்துவது, அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு திட்டத்தை விரிவு படுத்துவது போன்ற தகவல்கள் அதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை விரிவுபடுத்தவது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு ஆய்வுகளை தொடங்கி உள்ளது. தற்போது 3 கோடியே 9 லட்சம் பேர் உதவி தொகைகளை பெற்று வருகிறார்கள். அதை 2 மடங்காக்கி 6 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அது பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.
ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.
வருகிற பட்ஜெட்டில் இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக ஆய்வு அறிக்கை பெறப்பட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Pension #CentralGovernment

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது85). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வர்மக்கலை படித்தவர். வயதான காலத்தில் இவருக்கு அரசு சார்பாக முதியோர் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குருசாமிக்கு வரவேண்டிய முதியோர் பென்சன் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருசாமி கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு தாலுகா அலுவலக அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை.
இதையடுத்து அவர் தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தார். பின்பு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அனுப்பினார். இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ அனிதா இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் குருசாமி இறந்துவிட்டார் என அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அறிக்கை கொடுத்து பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குருசாமி மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு முதியோர் பென்சன் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்டார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் இறந்து விட்டீர்கள். அதனால் உங்களுக்கு பென்சன் கிடையாது என்றார்களாம். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குருசாமி மீண்டும் மனு கொடுத்தார். அதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதன்பிறகே அதிகாரிகள் தங்கள் தவறு செய்ததாக கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குருசாமிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.#tamilnews
மத்திய அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. சிம் கார்டு வாங்குவது முதல் அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்துள்ள சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
