என் மலர்
நீங்கள் தேடியது "ஜகதீப் தன்கர்"
- முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
- ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
- தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இதைதொடர்ந்து,"ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்?
எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.
தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?" என்று குறிப்பிட்டுள்ளார்.
- 1951ல் ராஜஸ்தானில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
- ஒரு துணைக் குடியரசுத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை.
நேற்று பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74 வயது) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி உள்ளார்.
ராஜஸ்தானில் விவசாயக் குடும்பத்தில் 1951ல் பிறந்த ஜெகதீப் தன்கர், சட்டத்துறையில் பட்டம் பெற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
பின்னர் ஜனதா தளத்தில் இணைந்து தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கினார். 1989 முதல் 1991 வரை மக்களவை எம்.பி.யாக இருநதார். அப்போது பிரதமர் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் 2003 இல் பாஜகவில் இணைந்த தன்கர், 2019-ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மாநில சட்டம்-ஒழுங்கு, ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் மம்தா அரசுக்கு எதிராக தன்கர் விமர்சித்து வந்தார். பல முக்கிய மசோதாக்களை அவர் கிடப்பில் போட்டதாக மம்தா அரசு குற்றம்சாட்டியது.
2022 ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்த அவர் எம்.பிக்களை கூட்டாக சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளிடம் கடுமையான போக்கை கையாண்டதாக விமர்சிக்கப்பட்டார்.
2024 டிசம்பரில், தன்கர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு துணைக் குடியரசுத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை.

மேலும் அரசியலமைப்பு முகவுரையில் சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஆளுநர், ஜனாதிபதி அதிகாரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகவும் நேரடியாக விமர்சித்திருந்தார்.
இதுபோன்று சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பேசுபொருளாகி உள்ளது. கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
- ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடந்த மார்ச் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார்.
டெல்லி மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் தீப்பிடிக்க, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். கோடிக்கணக்கான பணம் தீயில் கருகியது.
இதனை தொடர்ந்து, மார்ச் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார் .
பின்னர் அவரது வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளித்தது.
இந்த இரண்டையும் தலைமை நீதிபதி சஞ்சீச் கன்னா ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் மீது ஏன் இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பினார்.
ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய தன்கர், "உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குத் தொடர முன் அனுமதி தேவை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு பணம் கிடைத்த வழி, அதன் நோக்கம், குறிப்பாக இதில் பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது.
- புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ரம்ஜான் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது. இது சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
இந்த பண்டிகை சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். மேலும் நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை வலுப்படுத்தட்டும்.
இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ரம்ஜான் பண்டிகை நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பகிரப்பட்ட பிணைப்புகளில் அதன் வலிமையை நினைவூட்டுகிறது.
"ஈத்தின் சாராம்சம் வெறும் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டது; இது ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் நமது அரசியலமைப்பு லட்சியங்களை உள்ளடக்கியது.
இந்த புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
- குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
- நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் வாழ விழைகிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதினார்.
- அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மோடி மீறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, '2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது' என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.
பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத்தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை.
அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
- பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி நாளை சென்னை வருகிறார்.
- விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள 31ம் தேதி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சென்னை வருகிறார்.
அதன்படி, சென்னை வரும் ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முட்டுக்காடு, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்துக் கொள்ள உள்ளார்.
துணை ஜனாதிபதி வருகையால், நாளை சென்னை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.






