search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist Communist Party"

    • கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரை உலகில் பாலியல் பலாத்கார அத்து மீறல்கள் அதிகளவு நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தர விட்டது. அதன்படி நீதிபதி ஹேமா மலையாள திரையுலகில் நடக்கும் அத்துமீறல்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து பெரிய அறிக்கையாக தயாரித்தார். கடந்த 2019-ம் ஆண்டு அந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளி யிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளி யானது. அதில் வெளியான தகவல்கள் மலையாள பட உலகை சுனாமியாக சுருட்டி வீசும் வகையில் புயலை கிளப்பி உள்ளது.

    நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் மினு குரியன், ஸ்ரீலேகா மித்ரா உள்பட பல நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறினார்கள். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடைவேள பாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் மீது பாலியல் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மட்டும் 376, 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

    நடிகர் முகேஷ் மீது பதிவாகி இருக்கும் 376-வது பிரிவு கற்பழிப்புக்கான தண்டனை பெற்று தரும் சட்டப்பிரிவாகும். இந்த பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளியில் வர இயலாது. இதை அறிந்த நடிகர் முகேஷ் அவசரம் அவசரமாக எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதன் பேரில் செப்டம்பர் 3-ந்தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் முகேஷ் சற்று நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார்.

    என்றாலும் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்ப்பு வலுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்புகள் முகேசை கைது செய்யக்கோரி தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் முகேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ், பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது.

    இதற்கிடையே கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடிகர் முகேசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா கூறுகையில், "நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க தார்மீக தகுதியை இழந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மாநில அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

    தோழமை கட்சிகள் முகேசை எதிர்ப்பதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. என்றாலும் நடிகர் முகேசை ராஜினாமா செய்ய வைத்தால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறார்கள்.

    எனவே கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பதிலடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளனர்.

    கேரள கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அமைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது. அவர்கள் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தால் முகேசிடமும் அந்த கோரிக்கையை வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

    இந்தநிலையில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் அனைவரும் நடிகர் முகேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நடிகர் முகேஷ் விலக மாட்டார் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மலையாள நடிகைகள் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அவர்கள் நடிகைகளை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆதாரங்களை திரட்டத் தொடங்கி உள்ளனர்.

    நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் திருவனந்தபுரத்தில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை சந்தித்து விளக்கங்களை கொடுத்தனர். நடிகர் சித்திக்குக்கு எதிராக நடிகை தெரிவித்த பாலியல் பலாத்கார புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதன் காரணமாக பாலியல் பலாத்கார விவகாரத்தில் நடிகர்கள் மீது கைது நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    நடிகர் முகேஷ் போல நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன. நடிகர் ஜெயசூர்யா மீது 376, 509 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதனால் நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் பத்மநாபன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீதிபதி ஹேமா ஆணையம் கொடுத்த அறிக்கையின் அனைத்து பகுதிகளும் வெளியிடப்படவில்லை. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

    கேரளாவில் நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த சின்ன மீன்கள் தான் சிக்கி உள்ளன. பெரிய திமிங்கலங்கள் தப்பி உள்ளன. அறிக்கையின் முழு விவரம் வெளியானால் பல கசப்பான கதைகள் வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது கருவண்ணூர் கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் கடந்த 2010-ம் ஆண்டு கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வங்கியில் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அநத மோசடி தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி நடந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடன் பெற்று பணம் மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. பணம் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்கள்-குழு உறுப்பினர்கள் மற்றும் வங்கியை நிர்வகிக்கும் நபர்களின் அறிவுறுத்தலின்பேரில் வங்கி மேலாளரால் முகவர்கள் மூலம் ரொக்கமாக பலருக்கு கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மந்திரி சபையில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ., கவுன்சிலர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்த மோசடி தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

    வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. மோசடி தொடர்பாக 55 நிறுவனங்களின் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவற்றில் கருவண்ணூர் கூட்டுறவு வங்கியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளும், திருச்சூர் மாவட்ட குழுவின் நிலையான வைப்பு கணக்குகளும், மேலும் 3 வங்கிகளில் கட்சியின் சேமிப்பு கணக்குகளும் அடங்கும்.

    பொரத்திசேரி கட்சி அலுவலகத்தின் மாவட்ட செயலாளர் வர்கீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலமும் முடக்கப்பட்டது. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.29கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக பல நபர்களின் வங்கி கணக்குள் மற்றும் அசையா சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.87.85 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கருவண்ணூர் கூட்டுறவு வங்கி பணம் மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மானந்தவாடி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான கேலுவுக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
    • பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெற்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மாநிலத்தின் தேவஸ்தானம் மற்றும் ஆதிவாசி பழங்குடி நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆனார். இதையடுத்து அவர் தனது மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகித்த தேவஸ்தானம் மற்றும் ஆதிவாசி பழங்குடி நலத்துறைக்கு புதிய மந்திரியை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் மானந்தவாடி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான கேலுவுக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

    பழங்குடியின வகுப்பை சேர்ந்த அவருக்கு ஆதிவாதி பழங்குடி நலத்துறை மட்டும் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தான துறை மந்திரி வாசனுக்கும், பார்லிமென்ட் விவகாரத்துறை மந்திரி ராஜேசுக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.

    புதிய மந்திரியாக பொறுப்பேற்க உள்ள கேலு மானந்தவாடி தொகுதியில் தொடர்ச்சியாக 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் ஆவார். வயநாடு மாவட்டத்தை சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும் கேரள சட்டசபையில் ஆதிவாசி-பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவராகவும் பணியாற்றுகிறார்.

    கட்சியில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னதாக கேலு தினக் கூலியாக வேலை பார்த்தவர். அவர் எஸ்டேட் மற்றும் விசைத்தறிகளில் தொழிலாளியாக பணியாற்றியிருக்கிறார். மேலும் விவசாயமும் செய்தார். தொழிலாளியாக கடினமாக உழைத்து வந்தபோது தான், அரசியலுக்கு வந்தார்.

    கேலு 2000-ம் ஆண்டில் திருநெல்லி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பதவியேற்றார். அதன்பிறகே அவரது பொதுவாழ்வு பயணம் தொடங்கியது. பின்பு பல ஆண்டுகள் திருநெல்லி கிராம பஞ்சாயத்து தலைவராகவும், மானந்தவாடி தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் 2016-ம் ஆண்டில் மானந்தவாடி தொகுதி எம்.எல்.ஏ. ஆகி முதன்முதலாக சட்டசபைக்கு சென்றார்.

    தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெற்றார். இதன் காரணமாக 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகும் மக்கள் பணியாற்றி தொகுதியில் சிறந்த பெயரை பெற்றிருக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் விவசாயத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். நெல், வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அவர் பயிரிடுகிறார். தினக்கூலி தொழிலாளியாக வேலைபார்த்த கேலு, பஞ்சாயத்து உறுப்பினர், தலைவர், எம்.எல்.ஏ. என படிப்படியாக உயர்ந்து தற்போது மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    இதன்மூலம் வயநாடு மாவட்டத்தின் முதலாவது மந்திரி என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். மந்திரியாக பொறுப்பேற்கும் கேலுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் சில விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
    • தமிழ் மாநிலக் குழுவின் ‘எக்ஸ்’ தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் 'எக்ஸ்' தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 'எக்ஸ்' தள பக்கத்தை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் சில விளம்பரங்களை வெளி யிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு 'எக்ஸ்' தள பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்படும் செய்திகள் ஏதும் கட்சி சார்ந்தது அல்ல. 'எக்ஸ்' தளத்தை தொடர்புகொண்டுள்ளோம். இந்த பக்கம் விரைவில் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது
    • இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் களம் காண்கிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களான சச்சிதானந்தம், சு.வெங்கடேசன் ஆகியோரின் படங்களைப் பதிவிட்டு இந்தியா கூட்டணிக்கே எனது ஆதரவு என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று இன்று நாளை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த ரவிக்குமார் அண்மையில் அயலான் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய 2 திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் வெற்றிப்பட இயக்குநர் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

    • அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
    • நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

    இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

    முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    • சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன.
    • சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அவிநாசி செங்காடு கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி பேரூராட்சி 9 வது வாா்டு முத்துசெட்டிபாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன. எனவே உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.

    இந்திரா நகா் பகுதியில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை சாலையில் இருந்து சேவூா் சாலை முத்துசெட்டிபாளையம் பகுதி வரை அமைந்துள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறம் வா்ணம் பூசி, ரிப்ளட் விளக்கு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

    • தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் தோட்டத்துப்பளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பி.மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது: - திருப்பூா் மாநகராட்சி, தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத்துப்பாளையம் சாலை, வாவிபாளையம் முதல் பூலுவபட்டி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றனா்.

    ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன், ஒன்றியச் செயலாளா் ஆா்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆ.சிகாமணி, ஆா்.மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.
    • சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.இது குறித்து அக்கட்சியினா் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவு உமையஞ்செட்டிபாளையம் எல்லை வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.

    ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பாலத்தின் வலதுபுற சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய நிா்வாகத்தினா் 10 நாள்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். ஒரு வார காலத்துக்குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, ராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

    • நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நடந்தது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வந்தவாசி:

    வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் சண்முகம் முனியன் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் வி.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் கீழ் கொடுங்கலூர் கிராம கூட்டுச்சாலையில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்தும் மழைநீர் வடிகால் கால்வாயை சரியான முறையில் அமைக்கவில்லை என்று கூறியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சுகுமார், ராதாகிருஷ்ணன், தீபநாதன், தேவி, ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது.
    • புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    ஊத்துக்குளி :

    வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சமத்துவமின்மை, மக்கள் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ந்து மத்திய அரசின் தாக்குதலாலும், பாஜக. அல்லாத மாநிலங்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிப்பது, தொடரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மார்ச் 27,28 ந்தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில குழு அறிவித்தது. அதன்படி ஊத்துக்குளி தாலுகா, புலவர்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தெருமுனை பிரசார இயக்கம் துவங்கியது.

    எம்.தொட்டிபாளையம், தென்றல் நகர், சொட்டகவு ண்டம்பாளையம், ராஜீவ் நகர்,தெற்கு சாணார்பா ளையம், பல்லகவுண்ட ன்பாளையம் நால்ரோடு, கூனம்பட்டி, கூனம்பட்டிபுதூர் காலனி, ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், பாச்சாங்காட்டுபாளையம், சுக்காகவுண்டன்புதூர் கா லனி, செங்காளிபாளையம், சுண்டக்காம்பாளையம், எம்.ஜி.ஆர்.காலனி, தாளப்பதி, விருமாண்ட ம்பாளையம், செங்கப்பள்ளி வரை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    இதற்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன் மற்றும் சிவராஜ், சந்திரமூர்த்தி, அர்ஜுனன், லிங்கப்பன், நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×