search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளைத்தில் 2018-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால பணி ஆகியவை ெதாடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய கோரியும், 3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், சொத்து வரி விகிதத்தை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சோழராஜா பட்டியில் நடந்த போராட்டத்திற்கு செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சம்பந்தபுரம் போஸ் பார்க் ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு முருகானந்தம், பால மஸ்தான் தலைமை தாங்கினர். வடக்கு மலையடிப்பட்டி 4 முக்கில் நடந்த போராட்டத்திற்கு செல்வம், சன்னாசி தலைமை தாங்கினர். தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு அய்யனார், குருசாமி தலைமை தாங்கினர்.

    எம்.ஜி.ஆர். நகரில் நடந்த போராட்டத்திற்கு செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு அழகை நகரில் நடந்த போராட்டத்திற்கு சந்திரன் தலைமை தாங்கினார். ஆர். ஆர்.நகரில் நடந்த போராட்டத்திற்கு பொன்னுசாமி, கார்த்திகா தலைமை தாங்கினர்.

    முனியம்மன் பொட்டலில் நடந்த போராட்டத்திற்கு மாரிமுத்து, பழனிச்சாமி தலைமை தாங்கினர். பட்டுக்கோட்டை மன்றம் அருகே நடந்த போராட்டத்திற்கு ஜானகி தலைமை தாங்கினார். மதுரை கடை தெருவில் நடந்த போராட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சின்ன சுரக்காய் பட்டியில் நடந்த போராட்டத்திற்கு ஜெகன், மைதிலி தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாநில குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், நகர செயலாளர் மாரியப்பன், மூத்தநிர்வாகி கணேசன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் பேசினர்.

    Next Story
    ×