என் மலர்
விருதுநகர்
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
- பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.
இந்நிலையில், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேசுயுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்" என்றார்.
- குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின.
- குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டிபுரத்தில் பட்டசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமானது.
குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த குடோனில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. மேலும் குடோன் உரிமையாளர் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
- சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு பெண்கள் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 26-ந்தேதி பெண் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் தரை மட்டமாயின.
இந்த வெடி விபத்தில் சொக்கம்பட்டி மாரியம்மாள் (வயது 51), கூமாபட்டி திருவாய்மொழி (48), எம். சொக்கலிங்கபுரம் கலைச் செல்வி (35) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த வெடி விபத்தில் 100 சதவீதம் தீக்காயம் அடைந்த பாக்கிய லட்சுமி (55) என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
இதன்மூலம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த கோமதி (55), பாத்திமுத்து (55), ராபியா பிவீ (50), ராமசுப்பு (43), லட்சுமி(40), முனியம்மாள் (40) ஆகிய 6 பெண் தொழி லாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
- இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மதியம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். அதன் விபரம் வருமாறு:-
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆர்டரின்பேரில் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தொழிலாளர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசாயன மாற்றம் காரணமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதில் அடுத்தடுத்து இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை.
வெடி விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த அறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரை வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
- கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி.
- பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மதுரை ஐகோர்ட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் (இன்று), 27-ந்தேதி அமாவாசை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப் பட்டது. வனத்துறையினர் உடைமைகளை சோதனை செய்த பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கடும் வெயிலால் பக்தர்கள் சிரமமடைந்தனர். மலை பகுதிகளில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் அமாவாசை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.
- பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதேபோல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில், துலுக்கன்குறிச்சி பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை தனித் தாசில்தார் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் அருண் குமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முன்னதாக துலுக்கன்குறிச்சியில் உள்ள மஞ்சுநாத் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலை கடந்த 2020-ல் பட்டாசு வெடி விபத்து காரணமாக பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உரிமத்தை மீண்டும் புதுப்பிக்காமல் அந்த தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வின் போது அங்கு, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த வெம்பக்கோட்டை மற்றும் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 36), மதன்குமார் (32), செந்தமிழ் வெற்றி பாண்டியன் (40), இளஞ்செழியன் (40), மணிகண்டன் (38), விஜயகுமார் (40), மஞ்சுநாத் குமார் (40) ஆகியோர் வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து துலுக்கன் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பட்டாசு தயாரித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பேன்சி ரகவெடிகள், சோல்சா வெடிகள், மேலும் முழுமையடையாத பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
- ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
- விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த கட்சியின் முதன்மை செயலாளராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ராஜினாமாவை துரை வைகோ வாபஸ்பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
- காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
விருதுநகர்:
கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அவரை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்தநிலையில் அதே நாளில் வரிச்சியூர் செல்வம் மதுரையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களை அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை என்றும், கோவைக்கு சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்பாக அவர் ஆஜரானார்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு திடீரென செந்தில் குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், செந்தில் குமார் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விருதுநகர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், ரவுடி வரிச்சியூர் செல்வம் அளித்த பேட்டியில், விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான முதல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இன்று ஆஜரானேன். இதுவரை அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் நான் தவறாமல் ஆஜராகி வருகிறேன். என் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் முடித்து விட்டு நிம்மதியாக வாழ நான் ஆசைப்படுகிறேன்.
என்னை சுட்டு பிடிக்க போலீசார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் வீண் வதந்தி. காவல்துறை இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை. நான் எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எனக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் கிடையாது. காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். வழக்குகளை முடித்து விட்டால் நான் எனது பணிகளை தொடர்ந்து பார்ப்பேன் என்று கூறினார்.
- உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
- கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரிசேரி என்ற ஊரில் திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
திருவிழாவுக்கு மைக் செட் அமைத்தபோது உயர் அழுத்த மின் கம்பி மீது கை பட்டதில் திருப்பவர் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
திருப்பதியை காப்பற்ற முயன்ற அவரது மனைவி லலிதா மற்றும் திருப்பதியின் பாட்டி பாக்கியம் ஆகியோரும் மின்சாரம் தாக்கியது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
- ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கவுசல்யா கீழே விழுந்தார்.
- ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார்.
ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அதனை இயக்குபவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றியபோது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.
உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர், ஆபரேட்டர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவு பண்டங்கள், சிறுவர்களை குதூகலமாக்க செய்யும் விளையாட்டு அம்சங்கள், பிரமாண்ட ராட்டினங்கள் ஆகியவவை இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு முழு ஆண்டுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இந்த பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார். அப்போது அதனை இயக்குபவர் பல்வேறு விதிமுறைகளை பக்குவமாக எடுத்துக்கூறினார்.
அதன்படி ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றிய போது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த மற்றவர்கள் கூச்சல் போட்டனர். உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.