என் மலர்
விருதுநகர்
- முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும்
- திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும்.
சிவகாசி மேயர் சங்கீதா இன்ப இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், "காதல் பண்ணறது EASYனு எல்லாரும் சொல்லுவாங்க ஆனா... இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க... அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்" என்று கலகலப்பாக பேசினார்.
- மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர்.
- பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜபாளையம் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அய்யனார்கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
கடந்த ஆண்டு மழை அளவைவிட இந்த ஆண்டு அதிகபட்சமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக மாவரிசி அம்மன் கோவில் ஆறு, முள்ளிக்கடவு ஆறு, மலட்டாறுகளின் வழியாக அய்யனார் கோவில் ஆற்றில் சங்கமித்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணைகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மீதி உள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி புதுக்குளம், பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டைநேரி கண்மாய், கருங்குளம், செங்குளம், வாகைக்குளம், கீழராஜகுலராமன் கண்மாய் உள்பட பல்வேறு குளங்களை பெருக்கி தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
108 கண்மாய்கள் அமையப் பெற்ற ராஜபாளையம் வட்டாரத்தில் விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் என பெயர் பெற்ற ஜமீன் கொல்லங்கொண்டான் கண்மாய் உட்பட அனைத்து கண்மாய்களும் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் ஆறாவது மைல் கோடைகால குடிநீர் தேக்க ஏரி உட்பட அனைத்து கண்மாய்களும், நீர் நிலைகளும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நிரம்பி வழிகிறது.

இந்த மழை காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர். உரம், பூச்சி மருந்து போன்றவைகள் தட்டுப்பாடு இருந்தாலும் அவைகளை முறையாக பெற்று வயல்களில் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு பெய்த மழையால் தரிசு நிலங்களை உழுது விவசாய நிலங்களாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முழுமையான அளவு இரு போகம் விளையும் என எதிர்பார்த்த நிலையில், பல இடங்களில் முப்போக விளைச்சலை எதிர்பார்த்து விவசாய பணிகள் தொடங்கி உள்ளனர்.
ஏற்கனவே நெல் நாற்று பரவி உள்ள வயல்களில் தக்கை பூண்டு போன்ற கொளுஞ்சி விதைத்திருந்ததால், அதனை அடி உரமாக போட்டு உழுது தற்போது நல்ல நிலையில் நெல் வயல்களை வைத்து பாசனம் செய்து வருகின்றனர். ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கீழராஜகுலராமன், ஆலங்குளம், தொம்பக்குளம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
- ஆற்றை கடந்து பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
- மழை பெய்து வருவதால் பக்தர்களும் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வனத்துறைக்கு சொந்தமான இந்த பகுதியில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றை கடந்து பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தொடர்ந்து மழை பெய்யலாம் என்பதால் இன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள வனத்துறை கேட் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
மழை பெய்து வருவதால் பக்தர்களும் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுந்தர மகாலிங்கம் சாமி மற்றும் பல்வேறு சாமிகளுக்கு பக்தர்கள் இன்றி அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
- தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
* காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை.
* காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்
* காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
* தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி.
* காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
* தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.
* அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
* பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்.
* தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
- மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா?
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடி தான் எங்கள் டாடி என்று பேசியது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த நிலையில் 'மோடி தான் எங்கள் டாடி' என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேசியுள்ளார்.
சிவகாசியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது. மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா? மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை. எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
- சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
- நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் வனப்பகுதியில் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பணியில் இருந்த காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகிய இருவரையும் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அங்கிருந்த உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இதில் தேவதானத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்பவரிடம் நடந்த விசாரணையில் காவலாளிகளை கொன்று உண்டியலை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவருடன் சேர்ந்து முனியாண்டி (30) என்பவரும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதற்கிடையே இன்று காலை 6 மணி அளவில் சேத்தூர் அருகே உள்ள அசையாமணி விலக்கில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை ஆஞ்சநேயர் கோவில் அருகே கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் கூறினார். அதனை கைப்பற்றுவதற்காக சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கல்லணை பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்றவுடன் புதைத்து வைத்திருந்த இடத்தின் அருகே நாகராஜ் திடீரென்று அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியின் தோள் பட்டையில் வெட்டி தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் இருந்த இன்ஸ்பெக் டர் ரமேஷ் கண்ணா, நாகராஜின் வலது முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கோவிலில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர்.
- அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேவதானம் கிராமம்.
இங்கு தென்மாவட்ட பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் தவம்பெற்ற நாயகி சமேத நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக பஞ்சபூத கோவில்களாக திகழும் காஞ்சிபுரம், காளகஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகியவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்ய முடியாது.
ஆனால் தென் மாவட்டங்களில் உள்ள சங்கரன்கோவில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சபூத கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கலாம் என்பதால் இந்த ஸ்தலங்களுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் வந்து தரிசனம் செய்வார்கள்.
சேத்தூர் ஜமீன்தார் வம்சத்தினர் பரம்பரையாக கோவிலை நிர்வகித்து வந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஜமீன்தார் வம்சத்தினர் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள். இக்கோவில் தினமும் காலை 6.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7.15 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பல நூற்றாண்டுகளை கடந்த இந்த கோவிலில் தற்போது பகல் நேர காவலாளியாக மாடசாமி என்பவரும், இரவு காவலாளிகளாக தேவதானம் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மிகப்பெரிய மதில் சுவர்களை கொண்ட கோவிலில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
நேற்று இரவு கோவிலுக்கு வந்த காவலாளிகள் கதவுகளை பூட்டிக்கொண்டு உள்பகுதியில் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதற்கிடையே நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கோவிலுக்கு முன்பாக இரண்டு கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே காவலாளிகள் இருவரும் கதவை திறக்காமல் அதன் அருகே நின்று கொண்டு சத்தம்போட்டு கேட்டுள்ளனர். ஆனால் வெளியில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதற்கிடையே அந்த கார்களில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் முதலில் கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கட்டைகளால் அடித்து உடைத்துள்ளனர். பின்னர் தென்பக்கமாக உள்ள தூண்கள் வழியாக ஏறி கோவில் வளாகத்திற்குள் குதித்துள்ளனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் யார் நீங்கள், வெளியே செல்லுங்கள் என்று கூறியவாறு அருகில் சென்றுள்ளனர்.
ஆனால் மர்ம நபர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் மூலஸ்தானம், அம்மன் சன்னதிக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைக்க முயற்சித்தனர். அதனை காவலாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கோவில் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் அவர்களது உடல்களை கொள்ளையர்கள் தரதரவென்று இழுத்து சென்று இரண்டு மூலைகளில் வீசியுள்ளனர். அத்துடன் உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் மூலஸ்தானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம்பெற்ற நாயகி அம்பாள் ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, ஐம்பொன் விக்கிரகங்களும் கொள்ளை போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 6 மணியளவில் பகல் நேர காவலாளியான மாடசாமி பணிக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, காவலாளிகள் மாடசாமி, சங்கரபாண்டியன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து உறைந்து போனார்.
உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் கொலையுண்டு கிடந்த காவலாளிகள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலையுண்டவர்களின் ரத்தக்கறை உறைந்திருந்த நிலையில் இச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் கொள்ளை போன நகைகள், விக்கிரகங்கள், சிலைகள் சரிபார்ப்பு பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் கொள்ளையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் 2 காவலாளிகளை கொன்று பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
- காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
- உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து (50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும்.
- 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
கிளிமஞ்சாரோ சிகரமானது தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையாகும்.
இது ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த சிகரத்தை தொடுவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்படும் ஒரு சில திரைப்படங்களிலும் இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.
இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன.
இதில், கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலையாக உள்ளது. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை.
ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சாரோ மலைமீது ஏற பல்வேறு மலைவழிகள் உள்ளன.
அதில் "மச்சாமே" என்பது சிறந்த பாதையாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இதுபற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். இதில் ஏறுவது எளிமையானதாக கருதப்பட்டாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் கடினத்துடன், ஆபத்தானதாகவும் உள்ளது.
மலையேறும் அனைவருமே மூச்சுவிடக் கடினம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" என்று அழைக்கப்படும் கொடுமுடியை அடைகிறார்கள்.
குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
இந்தநிலையில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உள்பட 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
அதுபற்றிய விபரம் வருமாறு:-
தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ் செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் (5,895 மீ.) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.
இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (வயது 5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தை சேர்ந்த 40 வயதான அமர்நாத் ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர்.
மேலும், தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4,720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.
உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு படைத்துள்ளார்.
அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பக்தர்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணிக்குள் திரும்பி வர வேண்டும், இரவில் தங்கு வதற்கு அனுமதி இல்லை.
கடந்த சில தினங்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 17-ந்தேதி முதல் இன்று வரை பக்தர்கள் கோவிலுக்கு மலை ஏறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 18-ந்தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம், நேற்று தீபாவளி திருநாள், இன்று ஐப்பசி மாத அமாவாசை திருநாள் வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சில பக்தர்கள் மட்டும் அனுமதி உண்டா எனக் கேட்டனர். ஆனால் வனத்துறையினர் அனுமதி வழங்காததால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இன்று அதிகாலையில் இருந்து சதுரகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடையிலும் தண்ணீர் கூடுதலாக வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் இன்றி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
- கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன.
விருதுநகர்:
விருதுநகர் வணிகச் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை நிலவரம் வருமாறு:-
நல்லெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 4,300 ரூபாய், கடலை எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,600 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 6,500 ரூபாய், ரீபைண்ட் ஆயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,400 ரூபாய் , விளக்கெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,550 ரூபாய், பாமாயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,030 ரூபாய் , கடுகு எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,700 க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விலையில் எண்ணெய் வகைகள் விலை நிலவரம் :-
நல்லெண்ணெய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் கடலை எண்ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், ரீபைண்ட் ஆயில் ஒரு கிலோ 170 க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 460 ரூபாய்க்கும், விளக்கெண் ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும் , பாமாயில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் ஒரு கிலோ 190 க்கும் விற்கப்படுகிறது.
நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன. தீபாவளி வரை இந்த நிலையே தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
- பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மலைப் பகுதியில் மழை பெய்து திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்ப தால், மழை பெய்யும் நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேறிச் சென்று கோவிலில் வழிபடுவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஐப்பசி மாத சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனினும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பக்தர்கள் மலையேறிச் சென்று கோவிலில் வழிபட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






