என் மலர்
நீங்கள் தேடியது "சிவகாசி"
- இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
- இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.
சிவகாசியில் சாலையில் சண்டையிடுவது போல் நடித்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து 2 இளைஞர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.
இளைஞர்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இவர்களை கைது செய்யவேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் (21), வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
- பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தீபாவளியை ஒட்டி, பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் இபிஎஸ் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அச்சக உரிமையாளர்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள், மற்றும் வணிகர் சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளிநாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதியாகி அரசுக்கு வருமானம் வருகிறது ஒரு சிலர் பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த காரணத்தால்தான் இந்த பிரச்சினை வெடித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அரசாங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்படும் நிலை உள்ளது இந்த வழக்கு நடக்கும்போதே இதற்கு தீர்வுகாண அதிமுக ஆட்சியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி, நீதிமன்றத்தில் முத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைத்தோம்.
இருந்தாலும் தீபாவளி காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் மாசுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுநல வழக்கை போட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. நம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்படும் நிலைகளை எடுத்துச் சொல்லித்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.
அதிமுகவைப் பொறுத்த வரையில், எல்லா தொழிலுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் எடுத்துச் சொல்வோம். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் உங்கள் பிரச்னைகளை சொல்லி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் பட்டாசு தொழிலாளர்கள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசியில் 10 கோடி ரூபாயில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையிலும் இது தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், காமராஜ் கே டி ராஜேந்திரபாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
- அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவகாசி:
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் பல்வேறு வசதிகளையும் சிறப்பு கற்றல் முறைகளையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க முன் உதாரணமாக அரசு அதிகாரிகளும், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை சில அதிகாரிகளும் பின்பற்றுவதை அவ்வப்போது காண முடிகிறது. ஆங்காங்கே கலெக்டர்கள் முதல் அரசு கடைநிலை ஊழியர்கள் சிலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது சார்பு நீதிபதி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயபாரதி, சிவகாசி சார்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினியாளை(7) சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை வரவேற்றனர்.
நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளது மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
- கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
சிவகாசி:
சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தேர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் முன்புதான் தேரை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக கோவில் முன்பு தேரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' படம் ரீ ரிலிஸ் செய்ய உள்ளது.
- 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் ரீ ரிலிஸ் செய்ய உள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மற்றும் 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் ரீ ரிலிஸ் செய்ய உள்ளதாக படத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இவர் தயாரிப்பில் கடந்த ஆண்டு ரீ ரிலிஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த தமிழ்நாட்டின் முதல் படம் என்ற சாதனையை கில்லி படைத்தது. இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- பட்டாசு வெடித்த போது தீப்பொறி சாரத்தின் மீதுபட்டு தீப்பிடித்தது.
சிவகாசி:
சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேன்சி ரக பட்டாசு வெடித்தப் போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோயில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.
இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- சிவகாசி, வத்திராயிருப்பு யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிட்டங்கி யை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் நியாயவிலை கடையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.31.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே கிராமத்தில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக ளையும், கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.24.900 லட்சம் மதிப்பீட்டில், வரத்து கால்வாயில் உறிஞ்சி குழி அமைக்கப்பட்ட பணியை யும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.மூவரை வென்றான் ஊராட்சி இந்திரா காலனியில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும், வடுகப்பட்டி ஊராட்சி களத்தூர் கிராமத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.995 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பணியையும், குன்னூர் ஊராட்சியில்
15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மைய கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.1.570 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கால்நடை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்ட பணியையும், ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்டார நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட பணியையும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வேளா ண்மைத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உமா மகே சுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- சிவகாசியில் மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமையில் அமைச் சர்கள் நேரு, சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது அமைச்சர் கள் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்க ளுக்கு எளிதிலும், விரை வாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவி களை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரம மின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதித்திட்டங் களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதி களுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய கட்டிட பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அரசு நிர்ண யம் செய்யப்பட்டுள்ள காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பயன் பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், சீனிவாசன், தங்கபாண்டி யன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சிவகாசி மாநக ராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் விவேகன் ராஜ், மாமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். லட்சுமி நாராயண புரம் ஊராட்சி பாறைப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள சமை யலறை கூடம், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.90 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சாலை, ரூ.8.44 லட்சம் மதிப்பில் மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.3.49 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் ஊரணி தூர்வரப்பட்டு குளியல் தொட்டி அமைக்கும் பணி, ரங்க பாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.33.24 லட்சம் மதிப்பில் நாகரத்தினம்மாள் நகர் தெருவில் அமைக்கப் பட்டுள்ள சிமெண்ட் தளம்,
மங்கலம் ஊராட்சி கோபாலன்பட்டி கிரா மத்தில் ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் ஆகிய வற்றை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், உதவி பொறியா ளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சிவகாசியில் தீபாவளி விடுமுறைக்கு பிறகு மீண்டும் பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின.
- தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் 1,070 பட்டாசு ஆலை கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழி லாளர்களும், உப தொழில் கள் மூலம் மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்ற னர்.
ரூ.6 ஆயிரம் கோடி
ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டமே என்றா லும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக் கும் ஓய்வறியா மனிதர் களை கொண்ட ஊர் சிவ காசியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி விற் பனை இலக்கை சிவகாசி பட்டாசு தொழில் சந்தைபடுத்தியுள்ளது.
கடைசி நேர பட்டாசு வெடி விபத்துகள், அதிகாரி களின் ஆய்வுகள் பட்டாசு விற்பனையை பாதித்த போதிலும் அதையும் தாண்டி பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாக விற்ப னையாளர்கள் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு ஆலைகளில் கடந்த 11-ந்தேதி உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைக ளில் மராமத்து பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர்.
ஆயத்த பணிகள்
பட்டாசு அறைகளுக்கு வெள்ளை அடிப்பது, செடி கொடிகளை அகற்றுவது, ஆலையை சுத்தப்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன் தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான பட்டாசு ஆலைகளில் பூஜை கள் போட்டு உற்பத்தி பணி களை தொடங்கியது.
இதில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர். அடுத்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை நன்றாக இருக்க வேண்டும், விபத்தில்லாமல் பட்டாசு ஆலைகளில் உற் பத்தி நடைபெற வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகளுக்கான வட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந் தும் பெறப்பட்ட ஆர்டர் களை கொண்டு பட்டாசு உற்பத்தி பணிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் செய்திருந்தனர். பட்டாசு ஆலைகள் மீ்ண்டும் திறக்கப் பட்டதால் பட்டாசு ஆலை யில் பணிபுரியும் தொழிலா ளர்கள் மகிழ்ச்சியுடன் பணிக்கு வந்தனர்.
- முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார்.
- இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
முருகனை கந்தன், கடம்பன், வேலன், வேலாயுதம் என பல்வேறு பெயர்களால் அழைப்பர். ஆனால் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் உள்ள முருகன், வித்தியாசமான பெயரில் குடிகொண்டு இருக்கிறார். இங்கே 'வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி' என்ற பெயரில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள இறைவன் வாழை மர வடிலில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி தினமும் இங்கு யாகம் நடைபெறுவதும் இத்தலத்திற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.
தல வரலாறு
150 ஆண்டுகளுக்கு முன்பு துலுக்கன் குறிச்சி கிராமத்தில் தேரியப்பர்-வீரம் மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். வேலாயுதம். இவர் தினமும் தனது அன்றாட விவசாயப் பணிகளைத் தொடங்கும் முன், அதிகாலையில் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்தி லிங்கபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அத்துடன் இவர் மூலிகைகளைக் கொண்டு வைத்தியமும் செய்து வந்தார். அருள்வாக்கும் சொல்லி வந்தார்.
ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முருகனை தரிசிக்க சென்றபோது, வைப்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமலும், இறைவனை தரிசிக்க முடியாமலும் வருத்தத்துடன் இல்லத்திற்கு வந்து விட்டார். முருகனை தரிசிக்க முடியாத மனவேதனையில் எந்த பணியும் செய்யாமல் வீட்டில் இருந்தார். முருகனின் திருநாமத்தை கூறியபடி கண் அயர்ந்தார்.
அப்போது கனவில் இறைவன் தோன்றி. ''என்னைக் காண நீ வெகுதூரம் வர வேண்டாம். நானே உன்னைத் தேடி உன் இருப்பிடம் வந்துவிட்டேன். நீ ஆசையாக பராமரித்து வந்த வாழை மர தோட்டத்தில். ஒரே ஒரு வாழை மரத்தில் மட்டும் குலை தள்ளி இருக்கும். அதில் தான் நான் குடிகொண்டு உள்ளேன்" எனக் கூறி விட்டு மறைந்தார்.
மறுநாள் அதிகாலையில் வேலாயுதம் நீராடி விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கிச்சென்றார். அங்கே இறைவன் கனவில் சொன்னபடியே ஒரு வாழை மரம் மட்டும் குலை தள்ளி இருந்தது. அன்று முதல் தினமும் அதிகாலை நீராடி விட்டு முருகன் குடிகொண்டிருக்கும் வாழை மரத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். இந்த செய்தி அக்கம்பக்கம் முழுவதும் பரவியது. இதையடுத்து பொதுமக் களும் அந்த வாழை மரத்தை வழிபட்டு வந்தனர்.
நாட்கள் பல சென்றன. ஒரு நாள் செவல்பட்டி ஜமீன்தாரின் பணியாட்கள் வாழைத்தோட்டம் நோக்கி வந்தனர். அவர்கள் "அரண்மனையின் பிரதான கணக்குப் பிள்ளையாக இருப்பவரின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மணப்பந்தலில் வைக்க குலை தள்ளிய வாழை வேண்டும். வேறு எங்கும் வாழை கிடைக்கவில்லை. ஆதலால் ஜமீன்தார் தங்களிடம் உள்ள வாழை மரத்தை வெட்டி எடுத்து வரும்படி உத்தர விட்டுள்ளார். எனவே இந்த குலை வாழையை தர வேண்டும்" என கேட்டனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலாயுதம். இது சாதாரண வாழை அல்ல. இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில். அதனால் தர முடியாது" என்று மறுத்தார்.
இதுபற்றி அறிந்த ஜமீன்தார். நானே நேரில் செல்கிறேன்' என்று கூற, மணமகனோ தான் செல்வதாகக் கூறிச் சென்றான். அவனிடமும், வாழை மரத்தை தர முடியாது என்று வேலாயுதம் மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன், அந்த மரத்தை வெட்ட அதில் இருந்து ரத்தம் வெளியேறியது. மேலும் அங்கு தோன்றிய நாகம் ஒன்று. மணமகனை தீண்டியது. இதையறிந்த ஜமீன்தாரும், கணக்குப்பிள்ளையும் தோட்டத்திற்கு விரைந்து வந்து, தங்களின் பிழையை மன்னித்து விடும்படியும், மணமகனின் உயிரை காப்பாற்றும் படியும் வேண்டினர்.
இதையடுத்து வேலாயுதம் தன் கையில் இருந்த பிரம்பை, மணமகனின் மீது வைத்து 'முருகா..முருகா.. முருகா.. என்று மூன்று முறை சொல்லவும், அவர் நல்லபடியாக உயிர் பிழைத்தார் என்று இந்த ஆலயத்திற்கு தலவரலாறு சொல்லப்படுகிறது.
இந்த கோவிலில் வழிபட்டால், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்குவதுடன், விஷக்கடி உள்ளிட்ட பல நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. குலம் தழைக்க வாழை மரத்தையே உதாரணமாக சொல்வர். ஆனால் இங்கு இறைவனே வாழை மரமாக இருந்து அருள்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் வெம்பக்கோட்டை அருகே துலுக்கன் குறிச்சியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.






