என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விருதுநகர்"
- சாரல் மழை லேசாக பெய்து வருகிறது.
- பக்தர்கள் ஆர்வத்துடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி ஆடி மாத பிரதோஷம், பவுர்ணமி யை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை லேசாக பெய்து வருகிறது. இருப்பினும் மழை எச்சரிக்கை இல்லாததால் பக்தர்கள் இன்று மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது.அதன்பின் அவர்கள் மலையேறினர். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெறு கிறது.
அபிஷே முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்
நாளை மறுநாள் ஆடி பவுர்ணமி என்பதோடு, அதோடு விடுமுறை நாளாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது.
விருதுநகர்:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.
அதோடு, காமராஜரின் நூற்றாண்டு மணிமண்டபமும் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மணிமண்டபம் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இன்று காலை காமராஜர் வாழ்ந்த இல்லத்தில் அவரது திருவுருப்படத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள காமராஜரின் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர் வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/15/3324367-4.webp)
விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில், கைத்தறி சங்கம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது. இதில் ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூல் நூற்று வேள்வி நடத்தினர்.
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காம ராஜரின் இல்லத்திற்கு வருகை தந்த நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோட்டு புத்தகங்களைக் கொண்டு வந்து காணிக்கையாக அளித்து காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.
காமராஜர் பிறந்த பிறந்த ஊரில் அரசு மற்றும் பல் வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை.
- இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தார்.
விருதுநகரில் சிமெண்ட் ஆலையின் துணை மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிமெண்ட் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் துணை பொது மேலாளர்கள் பால முருகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இருவரும் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
- இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.
ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .
மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.
- தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
- விபத்தில் பஸ்சின் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பலத்த சேதமடைந்தது.
விருதுநகர்:
கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது.
இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு போராடிய பிரபு மற்றும் புவனேஸ்வரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
- குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குாட தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 4-ந்தேதியில் இருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தை யொட்டி சென்னை, கோவை, நெல்லை, தூத்துக் குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நள்ளிரவு முதல் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட்பு முன்பு குவிந்தனர்.
இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.
காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பக்தர்கள் வெயில் தெரியாத நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இன்று மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே தாணிப்பாறை வரை சென்று கோவிலுக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.
வைகாசி அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத் தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்கள் பல முறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை மருத்துவக்கு ழுவினர் நியமிக்கப்படாதது அனைத்து தரப்பினருக்கும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
- விஜய பிரபாகரனை விட சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்.
- நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
- விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார். இவரது கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரக இருந்தார். எனினும், தேர்தலுக்கு முன் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்து விட்டார்.
ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார். ஏற்கனவே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவாக இருக்கும் மாணிக்க தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தனது மனைவி ராதிகா விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என சரத்குமார் பராசக்தி அம்மன் கோவிலில் அங்கப்பிரதிஷ்டம் செய்தார். இவர் அங்கப்பிரதிஷ்டம் செய்யும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- வீட்டின் பழைய அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், கட்டடம் எழுப்பியுள்ளார்.
- வீடு சரிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர பாண்டியன். இவர் வசித்து வந்த வீடு 1988-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த வீட்டின் பழைய அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், கட்டடம் எழுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று பெய்த லேசான மழையில் பழைய அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விபத்துக்குள்ளானது.
2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விழும்போழுது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வீடு சரிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.
- உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் நிவாரணம்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரியில் இன்று நிகழ்ந்த எதிர்பாராத வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்துகளை இறக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கல்குவாரியை மூட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில், குவாரியின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் சேது என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
- திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது," தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைப்பதாக" விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:-
நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவோம்.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இந்தியாவை காப்பாற்றுவதாக் கூறும் முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்கிறார்கள். அது காமெடியா இல்லை நிஜத்தில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)