என் மலர்
நீங்கள் தேடியது "book fair"
- தஞ்சையில் வருகிற 14-ந் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
- கண்காட்சியின் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடியும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 6-வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும், தஞ்சை புத்தகத் திருவிழா-2023 இலச்சினை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தஞ்சை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வடிவமைத்து ஒரு எம்.பி. அளவில் ஜே.பி.ஜி. படமாக https://thanjavur.nic.in/thanjavurbookfestival என்ற இணையதளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் நாளை ( வெள்ளி கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்ப டுத்த முடியும். இதேபோல, புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்து டன் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தியது.
- இந்த கண்காட்சி மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
மேலூர்
மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட நூலக ஆணைக் குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து 38-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தியது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவி, செல்வி ராம்கிளினிக் டாக்டர் கணேசன் முதல் புத்தக விற்பனையை பெற்றுக்கொண்டனர்.
பள்ளியின் தலைவர் எம்.ஓ.சாகுல் ஹமீது, பொருளாளர் காதர் மைதீன், துணைத் தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், ராஜாமுகமது, ராஜா முகமது, பிலால் முகமது, ஜபார், சாகுல்ஹமீது, மேலூர் வருவாய் ஆய்வாளர் முனியசாமி, அரசு கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் பெரியவர், 2-ம் நிலை நூலகர் சீதாலட்சுமி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் மகேந்திரன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
- படிக்கும்போது ஏற்படும் மனஅமைதியினால் உடல் ஆரோக்கியமாக இருந்தது புத்தகம் என்பது கேடயம் போன்றது.
- மறந்து போன வாசிப்பு பழக்கம் மீண்டும் துளிர்விட இந்த புத்தக கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கு பெறுவோம்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிடும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.
ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பதாகையை வெளியிட்டு பேசும்போது,
வாசிப்பு பழக்கம் தற்போது குறைந்துவிட்டது. படிக்கும்போது ஏற்படும் மனஅமைதியினால் உடல் ஆரோக்கியமாக இருந்தது.புத்தகம் என்பது கேடயம் போன்றது.
வாசிப்பினால் நமக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். புத்தகங்களை பற்றி அறிஞர்கள் கூறும்போது தங்களை அறிஞர்களாகவும், தலைவர்களாகவும், மாற்றியது புத்தகங்கள் தான் எனக் கூறுகின்றனர்.
எனவே மறந்து போன வாசிப்பு பழக்கம் மீண்டும் துளிர்விட இந்த புத்தக கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கு பெறுவோம். தேவையான புத்தகங்களை வாங்கவேண்டும், பல்வேறு பேச்சாளர்களின் பயனுள்ள சொற்பொழிவை கேட்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்படி புத்தக திருவிழாவை வெற்றிபெறச் செய்யும் விதமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி மக்கள் 5000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொள்ள விழிப்புணர்வு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
- காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
- தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
திருநின்றவூர்:
திருவள்ளூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தககண்காட்சியில் ரூ.1 கோடியே 20லட்சத்துக்கு புத்தகம் விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆவடியில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆவடி,எச்.பி.எப். மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியின் 'லோகோ' அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சி 'லோகோ' வை அறிமுகப்படுத்தினர்.இந்த புத்தக கண்காட்சி நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்காக கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதி னருக்கும் ஏற்ற வகையில் ரூ. 10 முதல் ரூ.1000 வரை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்க உள்ளனர். அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தக கண்காட்சியில் தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
- காளீஸ்வரி கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்தது.
- தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து 2 நாட்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், தலைசிறந்த புதினங்கள், கவிதைகள், கதைகள் தொடர்பான புத்தகங்கள், திறனாய்வுப் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம், இலக்கணம் தொடர்பான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், ஆங்கிலம், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பிற துறை சார்ந்த புத்தகங்கள், பயண நூல்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையான நூல்களை வாங்கிப் பயனடைந்தனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.
- தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர்.
- அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் இன்று இரவு நடக்கிறது.
நெல்லை:
நெல்லை பொருநை புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, ெதாடர் வாசிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது.
கைதிகளுக்கு புத்தகம்
தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து புத்தக கண்காட்சியை கண்டு செல்கின்றனர். பெரும்பாலானோர் அங்குள்ள புத்தகங்களை வாங்கி சிறை கைதிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
கண்காட்சி தொடங்கி 9-வது நாளான இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என ஏராள மானோர் திரண்டனர்.
பட்டிமன்றம்
ஒரு நாள் ஒரு புத்தகம் என்ற தலைப்பில் ஒவ்வொரு துறையை சார்ந்தவர்களும் புத்தகங்களை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இல்லம் தேடி கல்வி திட்ட ஊழியர்கள் தயார் செய்த புத்தகம் இன்று வெளியிடப்படுகிறது.
இன்று இரவு, வாழ்க்கை யில் நிம்மதியை தருவது அன்பா? அறிவா? என்ற தலைப்பில் அரசு ஊழியர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடக்கிறது.
நாளை மறுநாள் நிறைவு
அரசு அருங்காட்சியகம் சார்பில் கூட்டு ஓவியப்ப யிற்சி இன்று நடத்தப்பட்டது. நாளை மறுநாள் 7-ந் தேதியுடன் புத்தக கண்காட்சி நிறை வடைகிறது. இதனால் பார்வையாளர்களின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி,கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என இதுவரை லட்சக்கணக்கானோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
- தினமும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு செல்கிறார்கள்.
- 7-ந்தேதி வரை தினமும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை பொருநை புத்தக கண்காட்சி பாளை வ.உ.சி. மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மாணவிகளுக்கு பயிற்சி
தினமும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு செல்கிறார்கள்.
மேலும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 7-ம் நாளான இன்று நெல்லை அரசு அருங்காட்சி யகம் சார்பில் வாழை நாரில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப் பட்டது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர் வாசிப்பு
தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் தொடர் வாசிப்பு நிகழ்ச்சியிலும் இன்று கல்லூரி மாணவர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர். மாற்றுத்திற னாளிகளுக்கு சிறப்பு வாசிப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இன்று மாலை, சூடாமணி என்ற மாணவி எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடை பெறுகிறது.
கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 7-ந்தேதி வரை தினமும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த புத்தகம் வெளியிடப்படுகிறது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை யாற்றுகிறார்.
நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
- 20000 க்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய அரங்குகள் அமைக் கப்பட்டு இருந்தது.
- முதல்வர் பிரமோதனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் கதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல், பொதுஅறிவு, கலைக்களஞ்சியம், அகராதிகள், வாழ்க்கை வரலாறு, கணிதம், கணினிஅறிவியல், போட்டி தேர்வுகளுக்கு என பல்வேறு தலைப்புகளில் 20000 க்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.
கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை பெற்றோருடன் வந்து வாங்கி சென்றனர்.
முன்னதாக ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி கண்காட்சியினை தொடங்கிவைத்து மாணவர்களிடையே புத்தகங்களுக்கு செய்யும் செலவினம், எதிர்கால வாழ்க்கைக்கான முதலீடு என்னும் கருத்தை வலியுறுத்திபேசினார்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் பிரமோதனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்
திருப்பூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது என்று இந்து இளைஞா் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து இளைஞா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரில் தனியார் புத்தக நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதனிடையே தற்போது நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் பணி செய்ய அரசுப் பள்ளி ஆசிரியா்களை நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கண்டனத்துக்குரியது என்று தேசிய ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய போக்கை நிறுத்தாவிட்டால் இந்து இளைஞா் முன்னணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.