search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muta"

    • அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.
    • அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தை அம்பாசமுத்திரம் வட்டார சாமில் மற்றும் மரவியாபாரிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் தொடங்கி வைத்தார். மூட்டா தலைவர் பேராசிரியர் இசக்கி, புரட்சிகர இளைஞர் முன்னணி மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த.மு.எ.க.ச. செயலர் வேல்முருகன் வரவேற்றார். மனிதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் கல்லூரிகளில் அரசின் ஆணைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி மூட்டா அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஐகிரவுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாளை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அரசு உதவி பெறும் 2 தனியார் கல்லூரிகளில் அரசின் ஆணைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி மூட்டா அமைப்பினர் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    கோஷங்கள்

    இதன் ஒரு பகுதியாக பாளையில் உள்ள அந்த தனியார் கல்லூரி முன்பு இன்று மூட்டா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் நசீர் அகமது, கோமதிநாயகம், சிவஞானம் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பெருமாள், சுடலைராஜ், வக்கீல் பழனி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கல்லூரி நிர்வாகங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    மறியல்

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஐகிரவுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 15 நிமிடம் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனே பாளை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பாளை நூற்றாண்டு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ×