search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பையில்  புத்தகக் கண்காட்சி
    X

    அம்பையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    அம்பையில் புத்தகக் கண்காட்சி

    • அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.
    • அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் மற்றும் மனிதம் அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. அம்பாசமுத்திரம் த.மு.எ.க.சங்கத் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுடலையாண்டி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தை அம்பாசமுத்திரம் வட்டார சாமில் மற்றும் மரவியாபாரிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் தொடங்கி வைத்தார். மூட்டா தலைவர் பேராசிரியர் இசக்கி, புரட்சிகர இளைஞர் முன்னணி மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த.மு.எ.க.ச. செயலர் வேல்முருகன் வரவேற்றார். மனிதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×