search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblock"

    • கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
    • போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அதியமான் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சட்ட விரோதமாக மது விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இத்தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுவும் அளித்து இருந்தனர். எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையும், மது விற்பனையும் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அதியமான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஈரோடு-பவானி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு, அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே 24 மணி நேரமும் மது விற்பனையும், சட்டவிரோத மாக லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது. மது குடித்து வரும் நபர்களால் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல் எங்கள் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.

    இதனை அடுத்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.

    • கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
    • அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனுர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இங்கு மதுக்கடை இருப்பதால் தங்கள் பகுதியில் இருக்கும் வாலிபர்கள் வேலைக்கு கூட செல்லாமல் குடித்து விட்டு சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்தக் கடையில் வாலிபர்கள் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களில் செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.

    எனவே இந்த மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் இன்று அந்தியூர்-மேட்டூர் மெயின் ரோட்டில் முளியனூர் பிரிவு என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர்.

    இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்துகளைந்து சென்றனர். இதனால் அந்தியூர் அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • படுகாயம் அடைந்த விக்னேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கீழக் குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32) இவர் சம்பவத்தன்று நடந்த தகராறில் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கீழக்குறிச்சி கிராமத்தினர் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன், தாசில்தார் சுகுமார், மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வழக்கில் தொடர்புடை யவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் சாலை மறியலில் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரசு பஸ்சை சிறை பிடித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் கத்தரியில் இருந்து நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் குவிந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • மாற்றுபாதை சேரும், சகதியுமாக இருப்பதாக புகார்
    • ேபாக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறு பாலம் அருகே மாற்று ப்பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் அந்த வழியாக சென்று வந்தனர்.

    தற்போது பெய்த மழையால் மாற்றுப்பாதை முழுவதும் சேரும் சகதியமாக மாறி உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்லும்போது சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர். மேலும் பைக்கில் செல்லும்போது வழுக்கி கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    சரியான முறையில் மாற்றுப்பாதை அமைக்காததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் இருந்து கிடாதுறைபுதூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தார்சாலையில் நேற்று இரவு பெய்த மழையால் மழைநீரானது குளம் போல் தேங்கி நின்றது.இதனால் இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளிபாளையம் மற்றும் கிடாதுறைபுதூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு பள்ளிபாளையம் பகுதியில் இருந்து அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் தேங்கி நிற்காத வகையில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சு வார்த்தை அடுத்து கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கூழ்கார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரி களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாட்ட றம்பள்ளி டோல்கேட்டில் புதுப்பேட்டை திருப்பத்தூர் செல்லும் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பேரணாம்பட்டு அருகே சாலை வசதி கேட்டு போராட்டம்
    • பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் இருந்து நாள்தோறும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு பேரணாம்பட்டு நகரத்திற்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் இந்த கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

    பலமுறை சாலை அமைத்து தர கோரி மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அடிப்படை வசதி செய்து தரக்கோரி நடத்தினர்
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி, கே.கே.நகர், பாரதியார் தெரு, பாலமுருகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கால்வாய் வசதி கேட்டு மனு அளிக்க இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    மேயர் மற்றும் கமிஷனரிடம் மனு அளிக்க நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வர தாமதமானது இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

    மேலும் அவர்களை மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    அதிகாரியிடம் கே.கே.நகர் பகுதி மக்கள் அளித்தமனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளும் இல்லை.

    கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்குவரத்து பாதிப்பு
    • தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதாக புகார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் பெரிய ஏரியூர் கிராம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

    இங்கு பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள் அதில் நடந்து செல்வதால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒடுக்கத்தூர் - அணைக்கட்டு சாலையில் அரசு பஸ்களை மறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரிய ஏரியூர் பகுதியில் கழிவு நீர் கால்வாய், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தி.மு.க. கொடி அகற்றம் - பரபரப்பு
    • அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

    வேலூர்:

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினர் இன்று காலை மாலை அணிவிக்க சென்றனர்.

    அப்போது அண்ணா சிலைக்கு முன்பாக தடுப்பு தூணில் நீளமான தி.மு.க கொடி கட்டப்பட்டு இருந்தது. இதற்கு அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க .மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, பொருளாளர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் பொருளாளர் ஜேசிபி சுரேஷ் உள்ளிட்ட கட்சியினர் அண்ணா சாலையில் திடீரெனமறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாசாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நீளமான தி.மு.க. கொடியை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க. கொடி அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மறியலை கை விட்டனர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×