100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்

பாம்பு நடமாட்டம் உள்ள பகுதிகளில் வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர் போலீசார் பேச்சுவார்த்தை
மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள்.
மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள்.
Published on

ஆரணி:

ஆரணியை அடுத்த அரை யாளம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்படி பணி தள பொறுப்பாளர் சரளா மேற்பார்வையில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி முன் னிலையில் 120 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் நேற்று பெரிய ஏரியின் வழியாக பாசன கால்வாய் செல்லும் பாதையை சீரமைப்புக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனலட்சுமி (வயது 55) என்பவரை பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது, உடனடியாக அவரை தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவம னைக்கு அழைத்து சென்ற னர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனைவரும் ஒன்று திரண்டு அரையாளம் கிராமத்தில் உள்ள ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

தற்போது மழை பெய்து வரும் காரணத்தினால் ஏரி கால்வாய் பகுதிகளில் அதிகளவில் பாம்பு நடமாட்டம் உள்ளது. இந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை வேலை செய்ய உத்தரவிட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தும் ஆரணி தாலுகாபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சப்-இன்ஸ் சாலை மறியலில் ஈடுடட்ட பொதுமக்களிடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நந் தினி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணைத்தலைவர் புவனேஸ் வரி பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் அக்கிராமத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 100 நாள் வேலை திட்டத் தில் பணி செய்யும் இடத்தில் ஊராட்சி சார்பில் அவசர மருத்துவ கிட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் ஏன் வைத்திருக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com