என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly"

    • தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
    • எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.

    கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.

    அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.

    தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.

    போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.

    இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.

    கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.   

    • ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

    ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

    70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
    • கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சோலை(வயது 82). இவர் உடல் நலக்கு றைவால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் சோலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதியவரின் மகள் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம் அருகே உள்ள கட்டதேவன் பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா(வயது72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    முத்தையா, அவரது மனைவி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்தையா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதியவர் முத்தையாவின் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ஹவுசிங் போர்டு லட்சுமி நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (62). இவர் தொடர் மூட்டு வலி காரணமாக அவதி அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தீஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் (43). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். வங்கியில் பெற்ற கடனை செலுத்துமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நலபாதிப்பும் ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் முத்து (45). குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் தற்கொலை செய்து கொண்டார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ராமதேவம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 63). கூலித் தொழிலாளி.

    இவர் தனது வீட்டில் இருந்து செட்டியாம்பாளையம் கருப்பனார் கோவில் வரை தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். வழக்கம்போல் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து ராமதேவம் வக்கீல் சதாசிவம் என்பவர் வீடு அருகே நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஞானராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்தவரை பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஊஞ்சபாளையம் அருகே பொன்னேரிப்பட்டி பகுதி சேர்ந்தவர் சின்னப்பகவுண்டர் (வயது 80). விவசாயி. இவர் மாடு வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    சாலையை கடக்க முயன்ற போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ சின்னப்பகவுண்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சின்னப்பகவுண்டர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில், சரக்கு ஆட்டோவை அதிகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வெங்கரை அருகே திட்டமேடு பகுதியை சேர்ந்த தினகரன் (45) என்பவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் தனேஷ்குமார்(வயது28). கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இவர் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவரால் சரியாக நடக்க முடிய வில்லை. இதனால் விரக்தியில் இருந்த தினேஷ்குமார் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மேட்டமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் குணசேகரன் (23). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த குணசேகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் உள்தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்(66). இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று இரவு வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ‘டெமன்ஷியா’ என்பது மூளை சம்பந்தப்பட்ட வியாதி ஆகும்.
    • இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக்கழகம், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ர் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர்.

    உலகிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு மாதிரி ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    இதற்காக 31 ஆயிரத்து 477 பேரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இதில் கிடைத்த முடிவுகள், ஒரு மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, இந்தியாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோரில் 1 கோடியே 8 லட்சம் பேருக்கு 'டெமன்ஷியா' என்ற ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

    இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும். அதே சமயத்தில், அமெரிக்காவில் 8.8 சதவீதம் பேருக்கும், இங்கிலாந்தில் 9 சதவீதம் பேருக்கும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 8.5 முதல் 9 சதவீதம் பேருக்கும் இந்நோய் இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

    மேலும், 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 60 வயதை தாண்டியவர்களில் கணிசமானோருக்கு ஞாபகமறதி நோய் ஏற்படும் என்றும், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 19.1 சதவீதம் பேருக்கு இந்நோய் ஏற்பட்டு இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.

    இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களிடையே பெண்கள், கல்வியறிவு இல்லாதவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகியோருக்குத்தான் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    'டெமன்ஷியா' என்பது மூளை சம்பந்தப்பட்ட வியாதி ஆகும். இந்த நோய் வந்தவர்களுக்கு நினைவுத்திறன், சிந்திக்கும் திறன், கேள்விக்கு பதில் அளிக்கும் திறன், முடிவு எடுக்கும் திறன் ஆகியவை குறைந்து விடும். மொத்தத்தில், அன்றாட பணிகளை செய்வதற்கான திறன் கடுமையாக பாதிக்கப்படும்.

    • கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
    • இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

    இளமை காலத்தில் இனிக்கிற வாழ்க்கை பலருக்கு முதுமையில் கசப்பாகி விடுகிறது. அதுவும் தனிமையில் வாழும் போது தவிப்பாகி விடுகிறது. ஏனெனில் பரபரப்பான உலகில் பாச உணர்வுகள் உள்ளங்களில் இருந்தாலும் பிள்ளைகள் இல்லங்களில் சேர்ந்து வாழ்வதற்கான சூழல் இல்லை என்கிற நிலை.

    தனிமையில் தள்ளாடும்...

    இதனால் சிலர் தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்பதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனர். ஆனால் வயதான பெற்றோர் பலர் முதியோர் இல்லத்துக்குள் செல்லாமல் தங்களது இல்லத்திலேயே தனிமையில் தள்ளாடும் வயது வரை காலத்தை தள்ளி விடுகின்றனர். எப்போதாவது வந்து செல்லும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நினைவுகளை தாங்கியபடி அவர்களின் பயணம் தொடர்கிறது.

    உதாரணமாக மாநகராட்சி அந்தஸ்தை பெற்ற கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் சுற்றித்திரிவதே சான்று. மேலும் வீடுகளில் தனிமையில் வாழ முடியாமல் தவிக்கும் பெரும்பாலான முதியோர் நகரில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் தங்கியுள்ளனர்.

    ஆரம்பத்தில் பிள்ளைகளுடன் இருக்கும் இவர்கள், வேலை விஷயமாக பிள்ளைகள் வீட்டை விட்டு செல்லும் போது முதுமை தம்பதிகள் தனிமையிலே வாழ்கின்றனர்.

    பாதுகாப்பு இல்லை

    உள்ளூர் என்றால் உறவினர்களின் உறவு இருக்கும். வெளியூர் என்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களின் பரிவை எப்போதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா. அவர்களுக்கும் பரபரப்பான வேலை இருப்பதால் முதுமையில் தனிமையை தவிர இனிமையை காண முடிவதில்லை. முதியவர்கள் தனிமையில் வசிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களுடைய மகன் அல்லது மகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழும் போது முதியவர்கள் தனியாக வசிக்கும் நிலை ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், விபத்து அல்லது வேறு காரணங்களால் வாரிசுகளை இழந்த முதியோர்களும் தனிமையில் வசிக்கும் நிலை உருவாகிறது.

    இவ்வாறு வசிக்கும் முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை. கொரோனா காலங்களில் தனியாக வசித்த முதியோர் உணவு கூட சரியாக கிடைக்காமல் சிரமப்பட்டனர். என்னதான் மனதை இளமையாக வைத்திருந்தாலும், உடலை முதுமையில் இருந்து விலக்க முடிவதில்லையே. இதனால் முதுமை காலத்தில் பாதுகாப்புகள், தேவைகள், உதவிகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் என்று இருக்கத்தானே செய்யும்.

    இத்தகைய முதியோர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    பிறரை சார்ந்து வாழும் நிலை

    அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன்: அனைத்து துறைகளிலும் நாம் என்னதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒன்றுக்கு தீர்வுகண்டால் மற்றொரு பிரச்சினை முளைக்கின்றது. கடைசி காலத்தில் முதியவர்களை கவனிக்க யாருமில்லை என்ற நிலையே உள்ளது. பொதுவாக முதுமை காலத்தில் உடல் ரீதியான பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், காது கேளாமை, கண்புரை நோய், முதுகுவலி, கழுத்துவலி, மனசோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிதி பாதுகாப்பு இருப்பதில்லை. முதுமையில் வாட்டும் தனிமை பலரை உணர்ச்சி வசப்படுத்துகிறது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் முதுமையில் கஷ்டத்தையே சந்திக்கின்றனர். 20 சதவீத மக்களே சுகமாக கடைசிகாலத்தில் வாழ்வதாக அறியவருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் பலவீனமடைவதால், அவர்களது வேலையை அவர்களால் கவனித்து கொள்ள இயலாத நிலைமையில் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மூத்தோர் உடல் உறுதியுடன் இருக்கவும், மனரீதியான பிரச்சினையின்றி வாழவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நிதிஆதாரம் வேண்டும். மேலும் முதியவர்களை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டும். மூத்தகுடிமக்கள் நாட்டின் வழிகாட்டிகள், அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள், இளைஞர்கள் அவர்களது அறிவுறைபடி செயல்பட வேண்டும். முதியவர்களை மதித்து மனிதாபிமானத்துடன் நடத்தி அவர்கள் மகிழ்ச்சியுற வாழவும், அவர்களது தனிமையை போக்கி முடிந்தபோதெல்லாம் அவர்களுக்காக சிறிதுநேரம் ஒதுக்கி அவர்களோடு செலவிடுவது நல்லது.

    குழந்தை போல் மாறும் முதியவர்கள்

    சிதம்பரம் முதியோர் இல்ல காப்பாளர் சுகுமார்: இன்றைய காலத்தில் பெரிய கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தவர்கள் எல்லாம் தனித்தனி குடும்பமாக பிரிந்து வாழ்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள், தங்கள் பெற்றோருடன் வசிக்காமல் வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் பல முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் தங்கள் வாழ்நாட்களை தங்களது குழந்தைகளுக்காக உழைத்து விட்டு, கடைசி காலத்தில் தனக்கென்று பணம் சேர்த்து வைக்காமல் இருந்து விடுகின்றனர். 60 வயதுக்கு மேல் தங்களால் பணம் ஈட்ட முடியாத நிலையில் சிறு சிறு தேவைகளுக்கு மகனையோ, மகளையோ எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளில் முதியவர்கள் சிலர் குழந்தையின் குணத்தை போன்று மாறி விடுகின்றனர். இவர்களது சில செயல்களை மகன் அல்லது மகள்கள் பெரிய இடையூறாக நினைக்கிறார்கள். 60 வயதாகி விட்டாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் முதியவர்களை வாட்ட தொடங்கி விடுகிறது. மாத்திரை, மருந்துகள் மற்றும் சில்லறை தேவைகளுக்கு மகன் அல்லது மகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் ஏற்படும் சிறு சிறு மன உளைச்சல்களால் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வந்து விடுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் முதியவர்களிடம் அன்புடனும், அனுசரணையுடன் இருந்தாலே பெரும் பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

    பராமரிப்பில் வைப்பது சிறந்தது

    பெண்ணாடம் எறையூர் கலியன்: 82 வயதான நான் வீட்டில் தனிமையிலே வசிக்கிறேன். இளமையில் ஓடியாடி வேலை பார்த்து குடும்பத்தை கரை சேர்த்த, எங்களை கரை சேர்க்க யாரும் இருப்பதில்லை. இதனால் என்னை போன்ற பலர் முதுமையில் ஓய்வெடுக்க கூட முடியாமல், மனஅழுத்தத்திலேயே இருக்கின்றனர். வாழ்க்கையின் கடைசி கால கட்டம் தான் முதுமை. ஆனால் இந்த வாழ்க்கையில் பலரின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும் என்ற ஏக்கத்திலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. தனிமையில் இருப்பவர்கள் நம்மை பற்றி யாராவது விசாரிக்க வேண்டும், தமது அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். வெளியூர்களில் குடும்பத்துடன் இருக்கும் பிள்ளைகள் தங்களுடன் பேச மாட்டார்களா?, வீட்டுக்கு வந்து செல்லமாட்டார்களா? பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே? என முதுமையில் ஏங்கி தவிக்கின்றனர். எனவே முடிந்தவரை பெற்றோர்களையும், முதியவர்களையும் பராமரிப்பில் வைப்பது சிறந்தது.

    • தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
    • முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன.

    பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவையாலும் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

    முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகின்றன. 4,5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும்.

    முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதியோருக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது போன்ற பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன, ஒருவேளை இந்த பாதிப்புகள் வந்தால் சிகிக்சை அளித்து விரைவாக முதியவர்களை உடல்நலம் பெற வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முறைகள் பற்றித்தான் இந்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒவ்ெவாரு ஆய்வு முடிவும் சாதகமான நிலையை எட்டும்போது, புதிய சிகிச்சைகள் மருத்துவ உலகில் அறிமுகம் ஆகிக்கொண்டிருகின்றன.

    • விருதுநகரில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை திருவிருந்தாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வி.எம்.நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் குருநாத் (41), ஓவியர். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இந்த நிலையில் மதுரை சென்று வருவதாக கூறிச் சென்ற அவர் மாயமாகி விட்டார். இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது மனைவி சங்கரேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×