search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர்கள் தற்கொலை
    X

    முதியவர்கள் தற்கொலை

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சோலை(வயது 82). இவர் உடல் நலக்கு றைவால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் சோலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதியவரின் மகள் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம் அருகே உள்ள கட்டதேவன் பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா(வயது72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    முத்தையா, அவரது மனைவி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்தையா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதியவர் முத்தையாவின் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×