என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப அட்டை"

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திராவிடப் பெருநாள், உழவர் திருநாள், தமிழர் திருநாளான நம்முடைய வருடப்பிறப்பு, பொங்கல் விழா சீரும் சிறப்புமாக வருடந்தோறும் தமிழ் பெருங்குடி மக்களால் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாவாகவும், உலகிற்கு அறநெறி வகுத்த வள்ளுவர் பெருமகனார் பிறந்தநாள் விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். வரலாற்று பிரிவினைவாதிகள் தமிழர் திருநாள் பெருமையை திருடும் நோக்கத்தோடு சங்கராந்தி என்று தமிழனுக்கு சம்பந்தமில்லாத விழாவாக அன்றைய தினம் சனாதனக் கூட்டம் கொண்டாட எத்தனிக்கிறது.

    தமிழத்தில் வாழுகிற அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும் சாதி மதமற்ற திராவிட திருநாளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுவதோடு, தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் சனாதன கூட்டத்திற்கு வழி வகுத்திடாமல் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை ரம்ஜான் போல் கிறிஸ்துமஸ் போல் நம்முடைய உழவர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாக அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டுகிறேன்.

    திராவிட மாடல் அரசு நடத்தும் முதல்வர் திராவிடத் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட ரூ.2 ஆயிரம் வழங்க அ.தி.ம.மு.க. சார்பில் வேண்டுவதோடு வேட்டி, சேலை, செங்கரும்பும் வழங்க வேண்டுகிறேன். கரும்புகளை விவசாயிடமே நேரில் அரசு கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
    • அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சியின் ஓ.எம்.ஆர் எல்கையான 12வது வார்டு, பவளக்கா சத்திரம் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள பூஞ்சேரிக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. புதிய கடை வேண்டும் என பல ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கு புதிதாக பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர்கள் மோகன்குமார், சரிதா கோவிந்தராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    • புதிய மின்னணு குடும்ப அட்டை நேரில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.
    • மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோக திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதா ரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரில் வழங்கப்படுகிறது.

    மேலும் நகல் குடும்ப அட்டைகள் கேட்டு ரூ.45 செலுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அஞ்சல்துறை வாயிலாக அவர்களது முகவரிக்கு நகல் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் வெள்ளிக்கிழமை அல்லது 3-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் இந்த மாதம் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.

    மேலும் இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இத்தகவலை நாகை மாவட்ட கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.
    • உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த மே 2021 முதல் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

    இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

    இதற்கான பட்டியலை அரசு தயாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதிலும் ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கின்றனர்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்கின்றனர். சமையலறை ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா, அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு சிலிண்டரா? 2 சிலிண்டரா? என்பதை நேரில் சென்று பார்க்கின்றனர்.

    புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால் பழைய கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும்.

    இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஆய்வுப் பணியை முடிப்பதற்கு இப்போது காலதாமதம் ஆவதால் புதிய கார்டு கிடைப்பதில் 3 மாதம் தள்ளிப்போகிறது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லை.

    ஆனால் 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்கத் தொடங்கி விட்டனர்.

    அதனால்தான் சமையலறை எத்தனை உள்ளது? எத்தனை சிலிண்டர் இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் உள்ளது? என்ற விவரங்களை சரிபார்க்க சொல்லி உள்ளோம்.

    இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடித்த பிறகே புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
    • வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

    பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும்.

    வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

    வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ.40,000, இளம் கன்றுக்கு ரூ. 30,000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீரக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள–ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கருணை அடிப்படையில் சமையலராக ஒரு பயனாளிக்கு பணி நியமன ஆணையினையும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்று அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
    • கலெக்டர் தலைமை தாங்கினார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை ஊராட்சியில் திருமலை நகரில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் விலைக் கடையை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதனைதொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலஷ்மி, ஊராட்சிமன்ற தலைவர் தேவகி மகாதேவன், துணை தலைவர் மீனா பெருமாள், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பாஸ்கரன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் வாலாஜா கிழக்கு ஒன்றிய மகளிரணி தலைவர் லாவண்யா நன்றி கூறினார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோகத் திட்டத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமையான நாளை (10-ந் தேதி) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனுச் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
    • காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் உத்தரவின் படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சிமுறையில் பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக இந்த மாதத்தில் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட உ ள்ளது.

    ராமநாதபுரம் தாலுகா-தேர்போகி ரேஷன் கடை, ராமேசுவரம் தாலுகா-சம்பை கிராம சமுதாய கூடம், திருவாடானை தாலுகா-கீழ்பனையூர்ரேஷன்கடை, பரமக்குடி தாலுகா-கோபாலபட்டிணம் ரேஷன்கடை, முதுகுளத்தூ ர் தாலுகா-மேலச்சிறு போது நூலக மையக்கட்டிடம், கடலாடி தாலுகா-கடுகு சந்தை கிராம சமுதாய மடத்து கட்டிடம், கமுதி தாலுகா- து. வாலசுப்பிர மணியபுரம்ரேஷன்கடை, கீழக் கரை தாலுகா-நல்லிருக்கை கிராம சமுதாயகூடம்,

    ஆர்.எஸ். மங்கலம் தாலுகா- ஆய்ங்குடி கிராம சமுதாய கூடம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

    இந்த கிராமங்களை சேர்த்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேலும் ரேஷன் கடை களில் பொருள்பெறவருகை தர இயலாத மூத்தகுடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது செயல் பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந்தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • புகைப்படம் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது.

    பொன்னேரி:

    மாவட்ட ஆட்சியர் ஆல் பி. ஜான்வகீஸ் உத்தரவின் படி பொன்னேரி அடுத்த பண்டிக்காவனூர் ஊராட்சியில் குடும்ப அட்டை பெயர் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மின்னணு அட்டையில் மாற்றம், புகைப்படம் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றில் 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம், தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் சரண்யா சரவணன், கிராம உதவியாளர் மலர்விழி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×