search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smart card"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.
    • உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த மே 2021 முதல் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

    இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

    இதற்கான பட்டியலை அரசு தயாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதிலும் ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கின்றனர்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்கின்றனர். சமையலறை ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா, அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு சிலிண்டரா? 2 சிலிண்டரா? என்பதை நேரில் சென்று பார்க்கின்றனர்.

    புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால் பழைய கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும்.

    இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஆய்வுப் பணியை முடிப்பதற்கு இப்போது காலதாமதம் ஆவதால் புதிய கார்டு கிடைப்பதில் 3 மாதம் தள்ளிப்போகிறது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லை.

    ஆனால் 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்கத் தொடங்கி விட்டனர்.

    அதனால்தான் சமையலறை எத்தனை உள்ளது? எத்தனை சிலிண்டர் இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் உள்ளது? என்ற விவரங்களை சரிபார்க்க சொல்லி உள்ளோம்.

    இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடித்த பிறகே புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்செல்வி, யூனியன் கவுன்சிலர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்காணிப்பு காமிரா இயக்கத்தை மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொன்பாய், மெர்சி, ஊர் பிரமுகர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    மெட்ரோ ரெயில்களில் பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஷேர் கார், ஷேர் ஆட்டோ, சைக்கிள், எலக்ட்ரானிக் ஸ்கூட்டி போன்ற வசதிகள் அளிக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணிகள் அங்கிருந்து அலுவலகம், சென்று வரவும், தொடர் பயணங்களை மேற்கொள்ள வசதியாக இணைப்பு போக்குவரத்து வசதியினை வழங்கி உள்ளது.

    மெட்ரோ நிலையங்களுடன் ஸ்மால் பஸ், மாநகர பஸ்களை இணைத்துள்ளது. மேலும் பயணிகள் தங்கள் கார், இருசக்கர வாகனங்களை நிலையத்தில் விட்டு சென்று பயணம் செய்ய ‘பார்க்கிங்’ வசதியும் அளிக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியுள்ள காலி இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருசில ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கடுமையாக போட்டி ஏற்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் உள்ள நிலையங்களில் பார்க்கிங் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    ஒருசில இடங்களில் பயணம் செய்யாத அப்பகுதி வியாபாரிகள் ரெயில்வே இடத்தில் ‘பார்க்கிங்’ செய்து வருகின்றனர். கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர்.

    இவற்றை எல்லாம் முறைப்படுத்த பார்க்கிங் கட்டணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் இதனை செயல்படுத்தியதில் ஒருசில குறைகள் இருப்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கண்டு பிடித்துள்ளது. அவற்றை சரிசெய்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது மாதம் அல்லது தினசரி அடிப்படையில் டோக்கன் முறையில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் பயணிகளின் நேரம் மிச்சமாகும்.

    மெட்ரோ ரெயிலை பயன்படுத்தக்கூடிய பயணிகளுக்கு மட்டும் தான் பார்க்கிங் வசதி அளிக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடத்துக்கு அதிக போட்டி உள்ளது. பலர் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

    மெட்ரோ ரெயில் நெட்ஒர்க் அமைந்துள்ள 45 கி.மீ. தூர அளவில் 8000 வாகனங்கள் தினமும் பார்க்கிங் செய்யப்படுகின்றன. ஒருசில நிலையங்களில் வழக்கமாக வரும் பயணிகளுக்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படுகிறது.

    மாதாந்திர பாஸ் வசதி பெற்றவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் ஊழியர்களிடம் மோதல் போக்கில் ஈடுபடும் நிலை உருவாகி வருகிறது.

    ஸ்மார்ட் கார்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த கார்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனத்தை உள்ளே கொண்டு வர முடியும். பார்க்கிங் பகுதியில் நிறுத்த முடியும். மற்றவர்கள் உள்ளே நிறுத்த முடியாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கம்பம் அருகே ரேசன் கடையில் அனுமதியின்றி வைத்திருந்த 44 ஸ்மார்ட் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் அருகே கூடலூர் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகத்தின் கீழ் சுருளிப்பட்டியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அனுமதியின்றி ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பதாகவும் அதன் மூலம் ரேசன் அரிசியை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகவும் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மோகன் முனியாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த ரேசன் கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி 44 பயனாளிகளின் ஸ்மார்ட் கார்டுகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து ரேசன் கடை ஊழியரிடம் கேட்ட போது சுருளிப்பட்டி பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கடைக்கு மின்சாரம் வரும் போது பொருட்களை வழங்குவதற்காக ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்ததாவது:- ரேசன் கடையில் பறிமுதல் செய்யப்பட்ட 44 ஸ்மார்ட் கார்டுகளும், கூட்டுறவு பண்டகசாலை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உண்மையான பயனாளிகள் வசம் அவை ஒப்படைக்கப்படும். ஸ்மார்ட் கார்டுகளை மொத்தமாக வைத்திருப்பது குற்றம் என்பதால் விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆத்தூர் தாலுகாவில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறாததால் சுமார் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர் நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால், இப்பிரச்னையை கம்ப்யூட்டர் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை என அதிகாரிகள் சமாளித்தனர். ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நுற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு, இதுவரை ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வினியோகிக்கப்படவில்லை.

    புதிதாய் விண்ணப்பித்த பலரும், பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற புகார் கூறுகின்றனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கான பணிகளிலும் சுணக்கம் நீடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 14 மாதங்களுக்கு மேலாக, இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே சுமார் 1500 ரேசன் கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. #DrivingLicence #Tamilnadu
    சென்னை:

    போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களையும், வாகன உரிமையாளர்களையும் முறைப்படுத்தும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துதுறை மேற்கொண்டு வருகிறது.

    சாலை விபத்துகளை குறைக்கவும், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது.

    டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

    இதுவரையில் காகிதமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த 2 முக்கிய ஆவணங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் கிரெடிட் கார்டு போன்று கையில் தழுவ உள்ளது.

    கையடக்க இந்த ஸ்மார்ட் கார்டில் வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்கள் மட்டுமின்றி, அதன் உரிமையாளர் குறித்த முழு விவரங்களும் இடம் பெறும்.

    “லைசென்சு” சஸ்பெண்டு செய்யப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டது குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். வாகனங்களை புதுப்பிக்கும்போது இக்கார்டினை கொண்டு வந்தால் போதுமானது. அதில் உள்ள ‘ஜிப்’ மூலம் அந்த வாகனத்தின் ஆயுட் காலம் புதுப்பிக்க வேண்டிய காலம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.



    விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட் கார்டு குறித்து போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:-

    டிரைவிங் லைசென்சுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டும். பதிவு ஆவண சான்றிதழுக்கு (ஆர்.சி.) ஒரு ஸ்மார்ட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்த கார்டில் எல்லா தகவல்களும் இடம் பெறும். ‘பார்கோடு’, புகைப்படம் போன்றவை கார்டில் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் போலீசாரும் ஆய்வு செய்யலாம்.

    ‘பார்கோடினை’ பார்த்தாலே வாகனங்கள் குறித்தும் உரிமையாளர் பற்றிய தகவல்களும் தெரியவரும்.

    இனி புதிதாக டிரைவிங் லைசென்சு மற்றும் வாகனங்கள் பதிவு செய்யக் கூடியவர்கள் நவீன ஸ்மார்ட் கார்டினை பெற முடியும். ஏற்கனவே பழைய முறையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களும் இதற்கான கட்டணம் செலுத்தி புதிய கார்டினை பெறலாம்.

    நாடு முழுவதும் இந்த ஸ்மார்ட் கார்டினை பயன்படுத்தலாம். முறைகேடு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DrivingLicence #Tamilnadu
    மெட்ரோ ரெயில் ‘ஸ்மார்ட்’ கார்டில் மாநகர பஸ்சில் செல்லும் வசதி விரைவில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர, போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-நேருபூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.

    பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

    நேருபூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரையிலான பணிகள் நிறைவுபெற்றுள்ளதையொட்டி அடுத்தவாரம் ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு நடத்துகிறார். வருகிற 14,15,16 ஆகிய 3 தினங்கள் இந்த ஆய்வு பணிகள் நடக்கிறது.

    ஆய்வுபணிகள் முடிந்து பாதுகாப்பு கமி‌ஷனர் ஒப்புதல் அளித்ததும் சென்ட்ரல்-விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைபெறும். பயணிகள் எளிதில் விமான நிலையத்துக்கு செல்ல முடியும்.


    சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வழங்கப்படும் ‘ஸ்மார்ட்’ கார்டு மூலம் சென்னை மாநகர பஸ்களிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. வாகன பார்க்கிங் கட்டணத்துக்கும், இந்த ‘ஸ்மார்ட்’ கார்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆய்வு பணிகளில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர், மாநகர போக்குவரத்து கழகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். மெட்ரோ-பஸ் பயணிகள் ‘ஸ்மார்ட் கார்டு’ வசதிகள் மூலம் பெரிதும் பயன் பெறுவார்கள். #MetroTrain
    ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. #RationCard #SmartCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    தற்போது 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் பெருமளவு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஸ்மார்ட் கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து ரே‌ஷன் பொருட்களை சிலர் வாங்கி வருகின்றனர்.

    வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் கார்டை கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். இதனால் அரசின் மானியம் வீணாகிறது.

    இதை தடுப்பதற்காக ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை கமி‌ஷனர் மதுமதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பொது வினியோக திட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உரிய நபருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


    தற்போது ‘ஸ்மார்ட் கார்டு’ நடைமுறைக்கு வந்த பிறகு பெருமளவு முறைகேடுகள் குறைந்து விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக குடும்ப உறுப்பினர்கள் ரே‌ஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலையை கொண்டு வர உள்ளோம்.

    ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டை பதிவு செய்யும் மிஷினுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான மிஷினும் கூடுதலாக வைக்கப்பட உள்ளது.

    அதில் குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும் போதும் கைரேகை வைக்க வேண்டும்.

    இந்த நடைமுறை இன்னும் 3 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக கைவிரல் ரேகையை பதிவு செய்யும் மிஷின் ரே‌ஷன் கடைகளில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RationCard #SmartCard
    ×