search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purified water"

    • பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு மேயர் அறிவுரை வழங்கினார்.
    • பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மேயர் சரவணன் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

    மேலும், அருகில் இருந்த கட்டண சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டார். பின்னர் பயணிகள் வேண்டுகோளை ஏற்று பயணிகள் அமரும் இருக்கைகள் அருகிலேயே சுத்திகரிப்பு குடிநீரை வைக்க உத்தரவிட்டார்.

    மேலும் இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். அப்போது துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்செல்வி, யூனியன் கவுன்சிலர் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர் பிரமுகர் செல்லத்துரை நாடார் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கண்காணிப்பு காமிரா இயக்கத்தை மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொன்பாய், மெர்சி, ஊர் பிரமுகர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×