என் மலர்

    நீங்கள் தேடியது "inspection"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுபோன்ற அதிரடி சோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்தவகையில், தேவ கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகன் தலைமையில் உத வியாளர் மாணிக்கம் மற்றும் நகராட்சி பணியாளர் கள் நகரில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைக ளில் திடீர் சோதனை நடத்தி னார்கள்.

    இதில் கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சி, பலமுறை பயன்படுத்தப் பட்ட 30 லிட்டர் சமையல் எண்ணெய் அதிகளவு ரசா யன பொடி கலந்த உணவு கள் பறிமுதல் செய்தனர் மேலும் இரண்டு கடைக ளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதித்தனர். சிறிய பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உணவகங்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட சுமார் 50 கிலோவுக்கு மேற் பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுபோன்ற அதிரடி சோதனை தொட ரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதிகளில் கலெக்டர் மெர்சி ரம்யா திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    • கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி, திருமங்கலப்பட்டினம் கிராமத்தில், ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைப் பணிகள், கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில், ரூ.28.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடப் பணி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வருவாய்த்துறையின் சார்பில், கடலோர பேரிடர் தணிப்புத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தின் புனரமைப்புப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    முன்னதாக அவர், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) (பொ) ரம்யாலட்சுமி, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, உதவிப் பொறியாளர் தமிழ்மணி, உதவி கோட்டப் பொறியாளர் ஹெலன்மேரி, மீன்வள ஆய்வாளர் ஆதீஸ்வரன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ. 47 லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர னுக்கு வழக்கப்ப ட்டுள்ள அரசின் வாகனத்தி ன் சாவியை கலெக்டர் மகாபாரதி வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது நகராட்சி ஆணை யர் ஹேமலதா, துணை தலைவர் சுப்புராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், முழுமதி இமயவரம்பன், மேலாளர் லதா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து பழுதடைந்த மணிமண்டபத்தினை தமிழ்நாடு அரசின் உத்தரவு ப்படி, ரூ. 47லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெ றுவதை கலெக்டர் மகாபா ரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிக ளை தரமாகவும், விரைவாக வும் முடிக்க அறிவுறு த்தினார்.

    இதில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமை ச்சர் அரசாணை வெளியி ட்டுள்ளார். அதன்படி, பொது ப்பணி த்துறையி னரால் தளவாட பொருட்க ள் வாங்கும் பணிகள் நடைபெற்று கொண்டி ருக்கின்றது.

    இந்த ஆய்வின்போது பொது ப்பணித்துறை செயற்பொ றியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழைநீர் வடிவதில் சிரமமும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது.
    • தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவீடு செய்து ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மடவளா கம் சாலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் சிறுபாலம் கல்வெட்டு அமைக்க ப்பட்டது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிவதில் சிரமமும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது. இதனை சீரமைத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சரிசெய்து அகலப்படுத்திட மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெடு ஞ்சாலைத்துறை அதிகாரிக ளை நேரில் வரவழைத்து அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து கல்வெர்ட் இருக்கும் பகு தியை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பணிதள மேற்பா ர்வையா ளர் விஜயேந்திரன் மற்றும் நகர சர்வேயர், சாலை ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நெடுஞ்சா லைத்துறை, நகராட்சி, தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளவீடு செய்து ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.
    • வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் பல்நோக்கு மருத்துவ மனைக்கு வட கிழக்கு பருவ மழையின் போது தங்கு தடையின்றி மின் வினி யோகம் வழங்கும் பொருட்டு சிறப்பு ஆய்வு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள வட்ட மேற் பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மேற் பார்வை மின் பொறி யாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் முதன்மை மின் பாதையான பாளை உபமின் நிலை யத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் 11 கிலோ வோல்ட் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்கும் மார்கெட் மின் பாதை, சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் வ.உ.சி.மின்பாதை, தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் மகராஜநகர் மின்பாதை என அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.

    மின் சாதனங்களான வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்டார். இயற்கை இடர்பாடுகளின் போது அனைத்து பொறுப்பு மின் பொறியாளர்களிடம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தர விட்டார்.

    மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இயற்கை இடர்பாடுகளின் போது தவிர்க்க இயலாத நேரத்தில் மின்ஆக்கியை நல்ல இயக்க நிலையில் வைப்பதற்கும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு வைப்பதற்கும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வு பணியின் போது நெல்லை மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் ( பொது ) வெங்கடேஷ்மணி, உதவி செயற் பொறியாளர்கள் சார்லஸ் நல்லத் துரை, சங்கர், சிதம்பரவடிவு, உதவி மின் பொறியாளர் வெங்கடேஷ், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
    • தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நல்ல முறையில் நடைபெறு கிறதா? என்று சூழற்சி முறையில் எல்லா பகுதி களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதை படிவங்களை பாதுகாக்க பெரம்பலூரில் புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்படுமா?
    • பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு அடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவ எச்சங்கள் முன்பு ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை குறிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையும் உறுதி செய்துள்ளனர். 1940 ல் புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் இங்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தின் படிமத்தை கண்டுபிடித்தார்.அந்த இடம் சாத்தனூர் ஆகும்.

    மேலும் தொன்மையான வரலாற்றை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களில் மறைந்து கிடக்கும் செல்வத்தை கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆகவே பெரம்பலூரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வாசன் கூறும்போது,

    இங்கு கிடைத்த புதை படிவங்கள் இரு மாவட்டங்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

    புதை படிவங்கள் நிறைந்த மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை வெளியே கொண்டு வருவதற்கு இங்கு ஒரு பிரத்யேக புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் பல இடங்களில் புகை படிமங்கள் காணப்பட்டாலும் அவை முறையாக பாதுகாக்கப்

    படவில்லை.

    இங்கு அலுவலகம் தொடங்கப்பட்டால் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்குமான இடைவெளி குறையும் என்றார்.விக்ரம் என்பவர் கூறும் போது,

    வரலாற்று சிறப்புமிக்க கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க காரை கிராமத்தில் புவிசார் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே புவியியல் ஆய்வு மையமும் அமைந்தால் நன்றாக இருக்கும். புதை படிவங்கள் ஓடைகளிலும் பிற இடங்களிலும் கிடப்பதை எளிதாக காணலாம் என்றார்.

    மாவட்ட கலெக்டர் தரப்பில் கேட்டபோது, இங்கு புவியியல் ஆய்வு மைய கிளை அலுவலகம் இருந்தால் உதவியாக இருக்கும் இந்த கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • 13 உணவகங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த சுகாதாரத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக 42 கிலோ சிக்கன் , 11 கிலோ பழைய புரோட்டா மாவு , கெட்டுப்போன மசாலாக்கள் 3 கிலோ , 2 கிலோ மைனஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 13 உணவகங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செய லாளருமான செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் முன்னிலையில் அவர் ஆய்வு செய்தார்.

    நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறாத பயனாளி கள் தேர்வு செய்யப்படா தற்கான காரணங்களை அவர்கள் தெரிந்து கொள்வ தற்காக 7 கவுண்டர்களில் தனி தனியாக கணினிகள் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் விடுபட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்பெறும் வகையில் கள ஆய்வு செய்து, தகுதியான நபர்க ளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்குத வற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.13 கோடி மதிப்பில் கடைகள், காத்திருப்போருக்கான அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதி கள் கொண்டு கட்டப்பட்டு வரும் வள்ளியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வை யிட்டு, பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, கண்டி யப்பேரி, பழைய பேட்டைக்கு செல்லும் சாலையில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலப்பணி யினையும், பாறையடி மற்றும் அன்னை வேளாங் கண்ணி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், நடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முத்துகுமரன் , உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஏசுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆய்வின்போது கெட்டுப்போனதாக கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
    • தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    நெல்லை:

    நாமக்கல் மாவட்டத்தில் காலாவதியான சவர்மா சாப்பிட்ட ஒருவர் உயிரி ழந்தார். மேலும் சிலர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

    உணவகங்களில் சோதனை

    இதன் எதிரொலியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி மாநகரப் பகுதி முழுவதும் உள்ள ஓட்டல்களில் தரமான உணவுகள் விற்கப்படு கிறதா? சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சிகள் காலாவதியாகி அதனை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து 4 மண்டலங்களிலும் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டலில் இன்று சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இறைச்சி பறிமுதல்

    டவுன் பகுதிகளில் நெல்லை கண்ணன் சாலையில் உள்ள அசைவ ஓட்டல் மற்றும் சுவாமி சன்னதி சாலையில் உள்ள ஓட்டல்கள், டவுன் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது கெட்டுப்போனதாக கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. சில கடைக்காரர்களுக்கு அப ராதமும் விதிக்கப்பட்டது.

    அப்போது தூய்மை இந்தியா திட்ட பணியாளர் சங்கர், உதவியாளர் இசக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதே போல் கடைகளில் கெட்டு போன சிக்கன் பயன்படுத்தக்கூடாது. தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப் பட்டது.

    களக்காடு

    களக்காடு நகராட்சி பகுதியில், அசைவ உண வகங்களில் நகராட்சி சுகா தார ஆய்வாளர் முத்து ராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர் வேலு மற்றும் அதிகாரிகள் சோ தனை நடத்தினர். அப்போது உணவகங்களில் உணவு தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சவர்மா, சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை, உற்பத்தி செய்கின்ற அன்றே விற்பனை செய்ய வேண்டும் என்று உணவக உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.1000 அபரா தமும் விதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print