search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மும்மூர்த்தி நகர் பகுதியில் மேயர் திடீர் ஆய்வு சுகாதாரப்பணியை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
    X

    மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்த காட்சி. 

    மும்மூர்த்தி நகர் பகுதியில் மேயர் திடீர் ஆய்வு சுகாதாரப்பணியை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு

    • தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் தினேஷ்குமார் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர், பகுதியில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகளாக நீர்த்தேங்கி இருக்கும் பகுதிகள்,குப்பை கொட்டும் இடங்கள், கழிவுநீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பகுதிகளில் உடனடியாக சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு அங்கு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×