என் மலர்
நீங்கள் தேடியது "ஆய்வு"
- அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தொடரும் மழை
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.
இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீர் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம் அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நாளை மறுதினம் (11-ந்தேதி) துணை கண்காணிப்பு குழு ஆய்வு நடத்த வருகை தருகின்றனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.
கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர் வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது. வரத்து 478 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1020 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5597 மி.கன அடியாக உள்ளது.
துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில் இதுவரை மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வுகளால் பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் ஆண்டு தோறும் தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய எந்தவித பராமரிப்பு பணியையும் செய்வதற்கு கேரள அரசு சம்மதிக்காமல் இடையூறு செய்து வருகிறது.
எனவே இந்த குழுவின் ஆய்வுகள் என்பது வெறும் சம்பிரதாயம் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் அளித்த பல்வேறு வழிகாட்டுதலையும், உத்தரவுகளையும் கேரள அரசு பின்பற்றுவது இல்லை. தமிழகத்தின் சார்பில் படகு விடுவதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எனவே எவ்வித அதிகாரமும் இல்லாத இந்த குழுக்களாலும், ஆய்வறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முனைப்பும் காட்டாத மத்திய நீர்வளத்துறையின் செயல்பாடுகளும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே கடந்த ஆண்டு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்து வெளியேறினர். எனவே முல்லைப்பெரியாறு அணையில் பறிக்கப்பட்ட தமிழகத்தின் உரிமையை இந்த குழுக்கள் தங்களின் ஆய்வுகள் மூலமும், அதன் அறிக்கைகள் மூலமும் பெற்றுத் தருமேயானால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம் என்று தெரிவித்தார்.
- இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
- இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.
செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
"கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.
கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.
"பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.
இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.
- பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காகவும், பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிரசவத்திற்காக வரும் பெண்கள், குழந்தை பெற்றதும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போல் பச்சிளம் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அவ்வாறு பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
இந்த வார்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து படுக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் படுக்கைகள் கிழிந்து சேதமாகி இருப்பதும், பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் தரையில் படுத்து படுக்க வைத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்ததும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இதுபோன்று சேதமாகி காணப்படும் படுக்கை மற்றும் மெத்தைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- 2021 இல் பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகபட்சமாக 22% ஆகவும் குறைந்த எடை பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
- எடை பார்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 1993 இல் 16% (7,992) இலிருந்து 2021 இல் 90% (209,266) ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.
இருப்பினும் தற்போது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் பாதி வழக்குகள் உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் பதிவாகின்றன என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வு காட்டுகிறது.
தற்போது, குளோபல் ஹெல்த், பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 1993 இல் 26% ஆக இருந்த குறைந்த எடை குழந்தை பிறப்பு விகிதம், 2021 இல் 18% ஆகக் குறைந்துள்ளது.
மாநில வாரியாக, 1993-99ல் 25% ஆக இருந்த சராசரி, 2006ல் 20% ஆகவும், 2021ல் 16% ஆகவும் குறைந்துள்ளது.
2019-21 ஆம் ஆண்டில் குறைந்த எடையுடன் பிறந்த 42 லட்சம் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி (47%) மேற்கண்ட நான்கு மாநிலங்களில் பிறந்துள்ளன.
1993 இல் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 48% ஆகவும், 2021 இல் பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகபட்சமாக 22% ஆகவும் குறைந்த எடை பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
மேலும் பிறக்கும் போது எடை பார்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 1993 இல் 16% (7,992) இலிருந்து 2021 இல் 90% (209,266) ஆக அதிகரித்துள்ளது.
முறையான கல்வி இல்லாத, ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த எடையுடனும், சராசரி அளவை விட சிறியதாகவும் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தனர்.
- அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது.
அப்போது மௌனி அமாவாசை தினமான ஜனவரி 29 அன்று அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 37 பேர் இறந்ததாக உ.பி. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிபிசி நடத்திய ஆய்வில் அன்றைய தினம் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தகவல்களை பெற்றனர்.
அதன்படி அவர்கள், ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 82 பேரின் உறவினர்கள் தெளிவான ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்காததால், இன்னும் பல இறப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த புள்ளிவிவரங்களின்படி, குளிக்கும் இடத்தில் 30 பேரும், மற்ற இடங்களில் ஏழு பேரும் இறந்தனர். இறந்த 37 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆதித்யநாத் அறிவித்தார்.

பிபிசி நடத்திய விசாரணையில், முதலமைச்சர் அறிவித்த நிதியுதவியை 37 குடும்பங்கள் நேரடியாகப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. பணம் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது அல்லது காசோலைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், இது தவிர, 26 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பணத்தை காவல்துறை அதிகாரிகள் வழங்கினர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள். கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் இறந்த மேலும் 19 பேரின் குடும்பங்களையும் பிபிசி அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் யாருக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் நடந்த இடத்தின் புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன. கூடுதலாக, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பேரழிவின் அளவை விளக்குகின்றன.
இந்த அறிக்கை வெளியானதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல்களை வெளியிடாததன் மூலம் அரசின் வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் கும்பமேளாவில் நடந்த மிகப்பெரிய சோகம், அரசு அமைப்பின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
- 'ஜர்னல் ஆஃப் பிசிகல் கெமிஸ்ட்ரி லெட்டர்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒரு ஃபோட்டான் என்பது ஒளி மற்றும் பிற மின்காந்த அலைகளின் அடிப்படை துகள் ஆகும்.
அனைத்து உயிரினங்களும் இறந்தவுடன் மறைந்து போகும் ஒரு சிறப்பு பிரகாசத்தைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கனடாவின் கால்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'ஜர்னல் ஆஃப் பிசிகல் கெமிஸ்ட்ரி லெட்டர்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆய்வானது, இந்த தன்மையை, அல்ட்ராவீக் ஃபோட்டான் உமிழ்வு ( UPE ) என்று விவரிக்கிறது.
ஒரு ஃபோட்டான் என்பது ஒளி மற்றும் பிற மின்காந்த அலைகளின் அடிப்படை துகள் ஆகும்.
அதாவது, அவற்றை ஒளியின் மிகச்சிறிய வெளிப்பாடு எனலாம். உயிரினங்கள் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்யும்போது, அந்த வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக மிகக் குறைந்த அளவிலான ஃபோட்டான்களை வெளியிடுகின்றன.
இதன் விளைவாக, உயிருள்ள உடலைச் சுற்றி மிகச் சிறிய ஒளி உருவாகிறது. உயிர் பிரிந்ததும் ஆற்றல் உற்பத்தி நின்றுவிடுவதால் அந்த ஒளி மறைகிறது. இந்த ஒளி மிகவும் மெல்லியதாக இருக்கிறது. இது 200 முதல் 1000 நானோமீட்டர்கள் வரையிலான வரம்பில் உள்ளது.
இது அனைத்து உயிரினங்களிலும் காணக்கூடிய ஒரு இயற்கை நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
- ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
- அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.
ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
- முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.
முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, முன்னாள் துணையை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.
சராசரியாக, முன்னாள் காதலருடனான உணர்ச்சி ரீதியான பற்றுதல் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான காதலர்களுக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிணைப்பு முற்றிலும் மறைந்துவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
- சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் உள்ளன.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது . அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது.
பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை விட நல்ல நிலையில் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. தனிப்பட்ட பேச்சு, ஊடகம் மற்றும் இணையம் தொடர்பான தணிக்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
- சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நமஸ்கரித்தான்பட்டி, மங்களம், புதுக்கோட்டை, செவலூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆனையூர் ஊராட்சியில் உள்ள சமத்து வபுரம் பகுதிகளில் புதுப்பிக்க ப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள சமு தாயக்கூடம், அங்கன்வாடி மையத்தையும், செங்கம லநாச்சி யார்புரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.22 லட்சம் மதிப்பில் ஊருணி சீரமை க்கப்பட்டு வரும் பணிகளையும், அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் அமை க்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிக ளையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.49 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் கட்டுப்பட்டு வரும் பணிகளையும், புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செவலூர் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரூ.311 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
- வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
- நியாய விலை கடையில் பொருட்களின் தரத்தினையும் சுன் சோங்கம் ஐடக் சிரு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்பகுதியில் உள்ள சுமார் 342 வீடுகளில் 1898 பேர் வசித்து வருகின்றனர். அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1489 பேர், 1402 நபர்களுக்கு பரி சோதனை செய்யப்பட்டதில் 38 நபர்களுக்கு ரத்த அழுத்த நோயும், 28 நபர்களுக்கு நீரழிவு நோயும், 30 நபர்களுக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் கண்டறியப்பட்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு பிசியோதெரபியும், 4 பயனாளிகளுக்கு முட நீக்கியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வடகரை கீழ்படாக பேரூராட்சி பகுதியில் வா வா நகரம் ஊரணியை தூர்வாரி ஆளப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகள், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலா மார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், துரைச்சாமிபுரம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொரு ட்களின் தரத்தினையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆகாஷ், கீழ் பிடாகை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, துணை இயக்குனர் முரளி சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா,பாலமர்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.






