என் மலர்
நீங்கள் தேடியது "கோவிட் 19"
- இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
- இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.
செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
"கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.
கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.
"பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.
இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் செய்தனர்.
- அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத் துறை வட்டாரங்களின்படி, குழந்தை தொடர்ந்து இரண்டு நாட்களாக லேசான சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.
மாறிவரும் வானிலை காரணமாக பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் குழந்தையின் குடும்பத்தினர், இறுதியில் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடினர்.
அங்கு, குழந்தை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மருத்துவக் குழுக்கள் உடனடியாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தன. அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் அதாவது தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. வீட்டிற்குள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு குடும்பமும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
யாரும் பாதிக்காதபோதும் வைரஸ் எவ்வாறு குழந்தையை அடைந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக என்று காசியாபாத்தின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார்.
- டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
- கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகள் பதிவாகி உள்ளன.
2020 முதல் உலகளவில் லட்சக்கணக்கான கணக்கான உயிர்களைக் கொன்ற கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய கோவிட்-19 தகவல் அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது 1,009 ஐ எட்டியுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் உள்ளன, அவற்றில் 99 வழக்குகள் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கேரளாவில் 430 பேரும், மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியில் 104 பேரும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 83, கர்நாடகாவில் 47, உத்தரப்பிரதேசத்தில் 15 மற்றும் மேற்கு வங்காளத்தில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகளும், கேரளாவில் இரண்டு இறப்புகளும், கர்நாடகாவில் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
- கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,341 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் பதிவான மூன்று இறப்புகளுடன், கடந்த கால கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,059 ஐ எட்டியுள்ளது.
நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது.
கொரோனா தொற்று குறித்து, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தொற்றை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
- இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழப்பு.
- கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்வு.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 37 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் அதிகபட்ச சோதனைகள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட 2,616 சோதனைகளில், 82 பேருக்கு தொற்று உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் என தெரியவந்துள்ளது.
- HMPV முதன்மையாக இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேற்றப்படும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது.
- மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, ஆஸ்துமா ஏற்படும்
தொற்று பரவல்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் இந்தியாவிலும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 8 மாத குழந்தை மற்றும் 3 மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாத குழந்தைக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

HMPV
HMPV வைரஸ் 2001 இல் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் பொதுவாக மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
இந்த தொற்று அறிகுறிகள் சளி அல்லது காய்ச்சலின் அறிகுறிகளை ஒத்திருக்கும். எச்எம்பிவி யாரையும் பாதிக்கலாம் என்றாலும், இது சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தது 60 ஆண்டுகளாக பரவி வரும் இந்த வைரஸ் உலகளவில் சுவாச தொற்றுநோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

HMPV க்கும் COVID-19 க்கும் இடையில் சில ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் உள்ளன.
HMPV முதன்மையாக இருமல் மற்றும் தும்மலின் போது வெளியேற்றப்படும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுடனான நெருங்கிய தொடர்பு அல்லது அசுத்தமான சூழலை வெளிப்படுத்துவதன் மூலமும் பரவுதல் ஏற்படலாம்.
COVID-19 தொற்றுக்கும் இது பொருந்தும். HMPV இன் தொற்று காலம் மூன்று முதல் ஐந்து நாட்கள் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இணையதளம் கூறுகிறது. HMPV ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்டாலும், குளிர்காலம் மற்றும் வசந்த மாதங்களில் இது மிகவும் பொதுவானது.
COVID-19 ஐப் போலவே, HMPV நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுவான அறிகுறிகளாக இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், மூச்சுத் திணறல் வகை (டிஸ்ப்னியா) ஆகியவை அடங்கும். HMPV சில சந்தர்ப்பங்களில் மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, ஆஸ்துமா மற்றும் காது தொற்று போன்ற சிரமங்களை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், ICMR இன் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேத்கர், HMPV வைரசால் பரவக்கூடிய தொற்றுநோயைத் தூண்ட முடியாது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கிறார்.

சுவாசத் துளி :
ஒரு சுவாச துளி என்பது சுவாசத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு சிறிய நீர்த்துளி ஆகும், இதில் உமிழ்நீர் அல்லது சளி மற்றும் சுவாசக்குழாய் மேற்பரப்பில் இருந்து பெறப்பட்ட பிற பொருட்கள் உள்ளன. சுவாச துளிகள் சுவாசம், பேசுதல், தும்மல், இருமல் அல்லது வாந்தியின் விளைவாக இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன, எனவே அவை எப்போதும் நம் சுவாசத்தில் இருக்கும்.






