search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virus"

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
    • காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முதலில் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் இல்லாமலே இருந்தது.

    கொரோனா வைரஸ் முதலில் 2019 சி.ஓ.வி. என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது. பிறகு அதன் பெயரை 2019 சி.ஓ.பி.-2 என்று சொன்னார்கள். ஐ.நா. சபை ஆய்வு செய்து அதற்கு கோவிட்-19 என்று பெயர் சூட்டியது.

    பெயர் என்ன என்று தெரியாத நிலையிலேயே அந்த வைரஸ் நிறைய பேர் உயிரை பறித்தது. அதுபற்றி ஆய்வு செய்தபோதுதான் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொதுவாக ஒரு உயிரினம் தனது மரபணுவை பிரதி எடுக்கும்போது சில தவறுகள் ஏற்பட்டு விடுவது உண்டு. அதன் காரணமாக புதிய தோற்றம் உருவாகும். அந்த வகையில்தான் கொரோனா வைரசும் புதுசு புதுசாக மாற்றம் அடைந்தது.

    இதன் காரணமாகவே உலக அளவில் கொரோனா முதல் அலை, 2-வது அலை என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் மாற்றத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது பீட்டா, காமா என்ற வகைக்கு சென்றிருப்பதாக கண்டறிந்தனர்.

    அதற்கு ஏற்ப தடுப்பு மருந்து உருவாக்கிய நிலையில் அது டெல்டா என்ற புதிய வடிவத்தை பெற்றிருந்தது. சில மாதங்களிலேயே அது டெல்டா பிளஸ் என்ற கொடூர வைரசாக மாறியது. டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானாவர்கள் உயிரை பறிகொடுக்க நேரிட்டது. இந்த நிலையில்தான் டெல்டாவும், டெல்டா பிளசும் ஒருங்கிணைந்து புதிதாக ஒரு கொரோனா வைரசை உருவாக்கின. அதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டது. ஒமைக்ரானில் எடுத்த எடுப்பிலேயே பி.ஏ.1, பி.ஏ.2 என்றெல்லாம் வகை வகையாக கொரோனா வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டன.

    கடந்த ஓராண்டுகளில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் அடிக்கடி புதிய புதிய வகைக்கு மாறியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் மூலம் 1900 தடவை மாற்றங்கள் ஏற்பட்டு புதுசு புதுசாக வைரஸ்கள் தோன்றியதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.

    இந்நிலையில்தான் தற்போது எச்.3, என்.2 என்ற வைரஸ் பேசப்படும் ஒரு வைரசாக மாறி இருக்கிறது. இதுவும் ஒமைக்ரான் பெத்து போட்ட பிள்ளையாக இருக்குமோ என்று முதலில் பெரும் பாலானவர்கள் நினைத்தனர்.

    ஆனால் அது ஒமைக்ரான் வழி தோன்றல் வைரஸ் அல்ல. இன்புளுயன்சா வகை வைரஸ்களில் ஒன்று என்பது உறுதியானது. இந்த வைரசால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதுதான் ஆறுதலான விஷயம். ஆனால் காய்ச்சல், இருமல், சளி தொல்லை என்று சுமார் ஒரு மாதம் படாதபாடு படுத்திவிடும்.

    இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் இந்த எச்.3 என்.2 வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு 99 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் இந்த வைரஸ் வந்து மக்களை புது விதமாக படாதபாடு படுத்திவிட்டது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ்கள் பரவி இருப்பதை கண்டறிந்தனர். எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதில் வட மாநிலங்களில் எச்.3 என்.2 வைரசும், தமிழகத்தில் எச்.1 என்.1 வைரசும் அதிகளவில் பரவி இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே உள்ள ஒமைக்ரான் வைரஸ் பிரிவுகளின் தாக்கத்தோடு இன்புளுயன்சா வைரஸ்களின் தாக்கமும் சேர்ந்தால்தான் பெரும் பாலானவர்களுக்கு காய்ச்சல், இருமல் தொல்லை ஏற்பட்டது.

    இதற்கிடையே நிறைய பேருக்கு என்ன வகை வைரஸ் தாக்கி இருக்கிறது என்று தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக ஒமைக்ரான் மரபணு மாற்றத்துக்குள்ளான வைரஸ்களின் மரபணுக்கள் மீண்டும் ஆய்வு செய்யப் பட்டன.

    அந்த பகுப்பாய்வில் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரஸ் தொற்றுதான் சமீப காலமாக நிறைய பேரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ்.பி.பி. வைரசின் மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அவை எக்ஸ்.பி.பி.1 மற்றும் எக்ஸ்.பி.பி. 1.16 என்றும் உருமாற்றம் பெற்றுவிட்டன.

    கடைசியாக கண்டறியப் பட்ட எக்ஸ்.பி.பி.1.16 ரகத்துக்கு சமீபத்தில்தான் பெயர் சூட்டப்பட்டது. இது சற்று வேகமாக பரவக்கூடியது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக பரவுவதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் இந்த வைரஸ்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால்தான் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை அறிவுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணிவதை முக்கிய தடுப்பாக சொல்கிறார்கள். நிறைய பேர் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால்தான் புதிய வைரசை விரட்ட முடியும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தொற்று பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
    • உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

    வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. மார்பர்க் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும்.

    இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது. மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது. இதுவரை 16 பேருக்கு அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

    மேலும், பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது பிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.

    இதில் எபோலா வைரஸும் அடங்கும். இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த வித சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.
    • முதலில் யானை குட்டியின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனப்பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையான செம்பக்காடு, மறையூர், மூணார் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு குண்டல எஸ்டேட் பகுதியில் அம்மாநில வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 யானைக்குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உயிரிழந்த யானைக்குட்டிகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஹெர்பீஸ் நோய் தொற்றானது 1990 ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தொற்று நோய் என கண்டறியப்பட்டது.

    முதலில் யானையின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 3 ஆண் குட்டியானைகள் உயிரிழந்தது கேரள வனத்துறை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதி யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி சுழற்சி முறையில் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் கேரள வனப்பகுதியான செம்பக்காடு, மறையூர், மூணார் பகுதியை ஒட்டி உள்ளதால் யானைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உடுமலை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ் ராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடுமலை தமிழக-கேரள வனப்பகுதியில் யானைகளின் நட மாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • நகராட்சியில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநக ராட்சியில் 7 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் சங்ககிரி, சேலம், ஓமலூர், வீரபாண்டி, கொளத்தூர், கொங்கணா புரம்பகுதிகளில்8 பேர், ஆத்தூர்சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், கெங்க வல்லி, பெத்தநா யக்கன்பாளையம், அயோத்தியப் பட்டணம், வாழப்பாடி பகுதிகளில் 6 பேர், நகராட்சியில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.
    • மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கும் நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைபடி மட்டுமே சிகிச்சை எடுக்க வேண்டும். ப்ளூ வைரஸ் களால் பரவும் 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல் நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.

    எனவே நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் டாக்டரை உடனடியாக மக்கள் அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே சென்னையில் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். தமிழகம் முழுவதும் ப்ளூ காய்ச்சலால் 282 குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளிலும், 215 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளிலும், 54 குழந்தைகள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு போலத் தான் குளிர்காற்று, ஈரப்பதம் காரணமாக இந்த காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்றால் முககவசம் அணிந்து அதிக இடை வெளியை கடைபிடித்தோம். இதனால் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தது.

    ஆனால் கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் இப்போதைய பாதிப்பை விட ப்ளூ காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே ப்ளூ காய்ச்சலுக்கு பொதுமக்கள் பதட்டப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 129 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ப்ளூ காய்ச்சல் யாருக்கும் இல்லை. 121 பேர் சாதாரண காய்ச்சலாலும், 8 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் பாதித்த குழந்தைகளை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    காய்ச்சல் பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் ப்ளூ வைரஸ் காற்றின் மூலம் மற்றவர்களை பாதிக்கிறது. எனவே குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க சொல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் ஒரு குழந்தைக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் மற்றொரு குழந்தைக்கும் பரவ வாய்ப்பு அதிகம். எனவே வீடுகளில் 2 மீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர்.
    • இந்த நிலையில் நேற்று 65 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 65 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 26 பேர், ஓமலூரில் 4 பேர், கெங்கவல்லியில் 3 பேர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மகுடஞ் சாவடி, ஆத்தூர், மேட்டூர், பெத்தநாயக்கன் பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நங்கவள்ளி, வீர பாண்டி, காடையாம்பட்டி, எடப்பாடி, பன மரத்துப்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டனர். மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 3 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 2 பேர், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரி களில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 77 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 479 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
    • இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    77 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்த நிலையில், நேற்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனும–திக்–கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், கொரோனா–வுக்கு சிகிச்சை பெற்று வந்த 53 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்–பட்டனர். மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு 520 பேர் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 26 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 67,789 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 194 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனும–திக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
    • மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

    கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.

    சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.

    மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கேரளாவில் நிபா வைரஸ் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. #Shigella #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

    லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்திற்கு மத்தியில் இப்போது கேரளாவை பெரும் அச்சுறுத்தும் வகையில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு நேரிட்டுள்ளது. 

    குழந்தைகளை வேகமாகத் தாக்கும் ஷிகெல்லா என்ற புதிய பாக்டீரியா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று உயிரிழந்து உள்ளது. 

    கடந்த ஜூன் மாதத்தில் தொற்று பாதிப்பு தொடர்பான எச்சரிக்கையான விடுக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த தொற்று பாதிப்பு காரணமாக மூவர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்பட்ட நிலையில், ஜியான் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    சுத்தமில்லாத உணவு, தண்ணீர் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

    பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படும். கைகளை சுத்தமாக கழுவாவிட்டால், இந்த நோய் எளிதாக பிறருக்கும் தொற்றிக் கொள்ளும் என்பதால், எப்போதும் சுத்தமாக இருப்பதுடன், குழந்தைகளிடம் கைகளை கழுவச்சொல்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    பாக்டீரியா பாதிப்பு நேரிட்டு ஒருவார காலம் வழக்கமாக இருக்கும், பின்னர் வயிற்று வலி போன்ற பாதிப்பு நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. கோழிக்கோடு மாவட்ட அதிகாரி டாக்டர் ஜெயஸ்ரீ பேசுகையில், ‘ஷிகெல்லா’ வயிற்றுப்போக்கு நோய் மற்றும் மிகவும் தொற்றுக்கூடியது, குறிப்பாக 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தாக்கும் என கூறியுள்ளார். உணவுப்பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

    இதற்கிடையே தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் உணவுகள் மூலமாகவே இந்த பாக்டீரியாவின் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

    ஏற்கனவே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 17 பேர் உயிரிழந்தனர், இந்த வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற கேரளாவிற்கு மீண்டும் ஒரு சோதனை காலமாக மாறியுள்ளது. இப்போது ‘ஷிகெல்லா’ பாக்டீரியா அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
    ×