என் மலர்
நீங்கள் தேடியது "Covid 19"
- அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.
- அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் கூறும்போது, 'அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.
இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன' என்றார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தவ் தாக்கரேயை சந்திக்க முடியவில்லை என்று கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தவ் தாக்கரேயை சந்திக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.