என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Covid 19"

    • நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
    • அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளா, டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.

    இன்று தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர்.

    • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர். 

    • அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
    • நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

    கொரோனா பரவல் எதிரொலியாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அந்தந்த மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கொரோனா பாதித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐதராபாத்தில் வேலை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    • குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
    • தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 4026 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அது மேலும் உயர்ந்து இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4302 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த 7 பேரில் மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 1373 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். குஜராத்தில் நேற்று 461 பேரும், டெல்லியில் 457 பேரும் சிகிச்சையில் இருந்தனர். தமிழ்நாட்டில் 216 பேரும், புதுச்சேரியில் 22 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    • தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    * தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூதாட்டி சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    சென்னையில் கொரோனா பாதிப்பால் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

    சென்னையில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டிக்கு சுவாசப்பிரச்சனை இருந்ததால் அவரை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது.
    • தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று 215 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    கொரோனாவின் புதுவகை தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 961 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் வாரியாக பரவலை கணக்கிடும்போது, கேரளாவே இன்னும் அதிக பாதிப்பில் இருக்கிறது. 1,416 பேர் அங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 19 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 494 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அங்கு நேற்று முன்தினத்தைவிட 12 குறைந்து இருக்கிறது.

    நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது. அங்கு நேற்றுமுன்தினம் 483 பேர் சிகிச்சையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 90 குறைந்து 393 ஆகி விட்டது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று 215 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினத்தைவிட 26 பேர் கூடுதலாக சிகிச்சை பெறுகிறார்கள்.

    பலி எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 37 பேர் இறந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் 32 ஆக இருந்த மொத்த உயிர்ப்பலி நேற்று மேலும் 5 சேர்ந்து 37 ஆகி விட்டது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    கேரளாவில் 80 வயது முதியவர், மகாராஷ்டிர மாநிலத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 மூதாட்டிகள், தமிழ்நாட்டில் 69 வயது மூதாட்டி, மேற்கு வங்காளத்தில் 43 வயது பெண் என 5 பேர் இறந்திருக்கிறார்கள்.

    • காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
    • மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் நேற்று மாலை வரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் மற்ற இணை நோய்கள் இருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். உடல்நிலை சரியான பின்னர்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

    குழந்தைகள் பள்ளிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறியுடன் வந்தால், அவர்களுக்கு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த 26ஆம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையாக ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளிகளுக்கு அறிவுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.

    • கொரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது.
    • மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அரசு டாக்டர் நோயாளியை கொன்றுவிடுங்கள் எனக்கூறும் வகையில் வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. முதற்கட்ட அலை தாக்குதலை தாக்குப்பிடித்த நிலையில், 2021-ல் மீண்டும் 2ஆவது அலை உருவானது. அப்போது மக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். இதனால் உயிர் பிழைப்பதற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிகிச்சைக்காக படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

    கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு டாக்டர் ஒருவர் சக டாக்டரிடம், யாரையும் மருத்துவமனைக்குள் அனுமதிக்காதீர்கள். சிகிச்சை வந்துள்ள பெண்மணியை கொன்றுவிடுங்கள்" எனக் கூறுகிறார். ஆனால் சக டாக்டர், சமாளித்துக் கொண்டு, நோயாளிக்கு அளிக்கும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது" என பதில் அளிக்கிறார்.

    இது தொடர்பான ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெற்ற பெண்ணின் கணவன், அரசு டாக்டர் மீது புகார் அளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துக் கொண்டார்.

    போலீசார் ஆடியோ கிளப்பின் உண்மைத்தன்மையை கண்டறிந்து வருகின்றனர். அரசு டாக்டரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சக டாக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் செய்தனர்.
    • அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.

    நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  

    இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    சுகாதாரத் துறை வட்டாரங்களின்படி, குழந்தை தொடர்ந்து இரண்டு நாட்களாக லேசான சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.

    மாறிவரும் வானிலை காரணமாக பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் குழந்தையின் குடும்பத்தினர், இறுதியில் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடினர்.

    அங்கு, குழந்தை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    மருத்துவக் குழுக்கள் உடனடியாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தன. அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் அதாவது தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. வீட்டிற்குள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு குடும்பமும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

    யாரும் பாதிக்காதபோதும் வைரஸ் எவ்வாறு குழந்தையை அடைந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக என்று காசியாபாத்தின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார். 

    • டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
    • கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகள் பதிவாகி உள்ளன.

    2020 முதல் உலகளவில் லட்சக்கணக்கான கணக்கான உயிர்களைக் கொன்ற கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

    தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

    மத்திய கோவிட்-19 தகவல் அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது 1,009 ஐ எட்டியுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பாதிப்புகள் உள்ளன, அவற்றில் 99 வழக்குகள் கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளன.

    மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கேரளாவில் 430 பேரும், மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியில் 104 பேரும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குஜராத்தில் 83, கர்நாடகாவில் 47, உத்தரப்பிரதேசத்தில் 15 மற்றும் மேற்கு வங்காளத்தில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

    கோவிட் காரணமாக மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகளும், கேரளாவில் இரண்டு இறப்புகளும், கர்நாடகாவில் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    • 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. 


    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

    கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×