search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIR"

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • இந்த ஆன்மீக கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர். சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் 121 உயிர்கள் உயிரிழந்ததை அடுத்து ஆக்ரா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 சத்சங்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜூலை 4 முதல் 11 வரை சயான் நகரிலும் ஜூலை 13 முதல் 23 வரை சாஸ்த்திரிபுரத்திலும் போலே பாபாவின் சத்சங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, "ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    போலி சாமியார்களால் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் குருட்டு நம்பிக்கையில் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மத நிகழ்ச்சிகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும். இத்தகைய கூட்டங்கள் எங்கு நடத்த வேண்டும். எவ்வளவு பரப்பளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.

    இப்போது பல போலி சாமியார்கள் சிறையில் இருக்கின்றனர். மத கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த சட்டமும் இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஹதராஸ் சம்பவம் தெடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

    • போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.
    • 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஹத்ராஸ் பகுதிக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்தார்.

    பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-

    முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "மீட்பு மற்றும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை.

    மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உ.பி., ஹரியானா, ம.பி., ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கிட்டத்தட்ட அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    நான் நேரில் பார்த்த பலருடன் உரையாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும், சத்சங்கப் சாமியார் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று பல பெண்கள் அவரைத் தொட, 'சேவதர்கள்' அவரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். அவர்களை தடுத்து நிறுத்தியதால், இந்த விபத்து நடந்தது.

    கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
    • சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்றபோது போலே பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் பலர் போலே பாபாவின் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து வருபவர்கள் ஆவர்.

    80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர். சிறிய இடத்தில் இவ்வளவு அதிகமாக மக்களை நெருக்கி அடைத்துள்ளனர். மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

     

    மேலும் விபத்து ஏற்பட்டதற்கு பிறகு உயிருக்கு போராடி வரும் மக்க்ளுக்கு உதவாமல் தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று தடயங்களை மறைக்கும் முயற்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. போலே பாபா காரில் ஏறி செல்ல முயன்ற நிலையில் அவரின் காருக்கு பின்னால் ஓடியவர்களை தடிகளால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்றபோது போலே பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக போலே பாபாவின் நெருங்கிய கூட்டாளிகளான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது உ.பி போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது பதியப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நஷ்டஈடாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • 153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு.

    தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • போலீஸ் நிலையத்தில் எவ்வாறு ‘வயர்லெஸ்’ சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது.
    • தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை “ஸ்கைப் காலில்” பேசசொன்னார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை பா.ஜனதா மாவட்ட தலைவர் தண்டபாணி. இவர் லாஸ்பேட்டை அவ்வை நகரில் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் உள்ளிட்ட தொழில்களையும் நடத்தி வருகிறார்.

    நேற்று காலை 8.13 மணிக்கு கர்நாடக மாநில பதிவு பெயர் கொண்ட தொலைபேசி எண்ணில் இருந்து தண்டபாணிக்கு போன் வந்தது.

    எதிர் முனையில் பேசியவர் நீங்கள் பெட்எக்ஸ் கொரியர் மூலம் அனுப்பிய போதை பொருளை மும்பையில் கைப்பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடத்தல் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு பட்டியல் வந்துள்ளது.

    எனவே நாங்கள் சொல்வது நீங்கள் கேட்டால் உங்களை வழக்கில் இருந்து விடுவிப்போம் என பேசினார். இதைக் கேட்ட பா.ஜனதா பிரமுகர் தண்டபாணி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    எதிர்முனையில் பேசிய நபர் உடனே தண்டபாணியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது போல் ஒரு கடிதத்தை அனுப்பினார்.

    அந்த எப். ஐ. ஆரில் சி.பி.ஐ. எப்படி வழக்கு பதிவு செய்திருக்குமோ அதே போல் இருந்தது.

    தொடர்ந்து மற்றொருவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக பேசினார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் எவ்வாறு 'வயர்லெஸ்' சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது. தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை "ஸ்கைப் காலில்" பேசசொன்னார்.

    எதிரே பேசியவரின் உருவம் ஸ்கைப் காலில் தெரியாததால் சந்தேகம் அடைந்த தண்டபாணி சுதாரித்து பதில் தர ஆரம்பித்தார். அடுத்தடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேசிய அந்த நபர் தண்டபாணியின் வங்கி கணக்கு எண் அவருடைய பண பரிமாற்றம் உள்ளிட்டவையை கூறி மோசடியில் ஈடுபட முயற்சித்தார்.

    பின்னர் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி போனை துண்டித்து இதுகுறித்து கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரி என பேசிய போலி நபரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். புதுவையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என கூறி போலி ஆசாமிகள் தொடர்ந்து மிரட்டி வருவதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரி என கூறி கல்யாணசுந்தரம், சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த காப்பகத்தில் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்
    • இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி காப்பகம் செயல்பட்டு வந்துள்ளது

    மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கன்னுங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேட்டில் 68 மாணவிகளின் பெயர்கள் இருந்த நிலையில், 42 மாணவிகள் மட்டுமே அங்கு இருந்தனர். மீதமுள்ள 26 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சட்ட விரோதமாக காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த பிரியங்க் கன்னுங்கோ, "இந்தக் காப்பகத்தை மதபோதகர்கள் நடத்தி வந்துள்ளனர். தெருவில் திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான உரிமம் பெறாமல் இதனை நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற கட்டாய படுத்தப்பட்டுள்ளனர். காப்பகத்தில் 6 முதல் 18 வயது நிரம்பிய சிறுமிகள் இருந்தனர். இவர்களில் பலர் இந்துக்கள் என்றும் தெரிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரண்டு பெண் காவலர்களைத் தவிர்த்து இரவில் இரண்டு ஆண் காப்பாளர்களும் விடுதியில் இருந்துள்ளனர். இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இச்சம்வத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பாளை மண்டலத்துக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மூட்டைகளில் கொண்டு வந்தனர்
    • உடனே டிராக்டரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மூட்டைகளில் கொண்டு வந்தனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று டிராக்டரை சிறை பிடித்தனர். உடனே டிராக்டரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் பாளை சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ கழிவுகளை கொட்டி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதனை கொண்டு வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். அதில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்தது நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வாநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தளவாய் (வயது 35)மற்றும் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கைலாசம் (37)என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் ரத்தத்தின் பின்னால் ஒளிந்துகொள்வதாகவும், அவர்களது தியாகத்தை காசாக்குவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016-ம் ஆண்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடுமாறு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜோகிந்தர் துலி என்ற வக்கீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 15-ந் தேதி போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமர் விஷால் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி வரை இந்த வழக்கில் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்து நேற்று உத்தரவிட்டார்.
    மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MaduraiCentralPrison #MaduraiPrisoners
    மதுரை:

    மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடுக்க சென்ற காவலர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர்.



    இதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MaduraiCentralPrison #MaduraiPrisoners

    ஆண்டிப்பட்டியில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளை தடுத்ததாக அமமுகவைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AndipattiITRaids
    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை வருமான வரித்துறையினரும் கவனித்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில், வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



    வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த கட்சியைச் சேர்ந்த சுமார் 150 பேர் அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். வருமான வரித்துறையினரை தடுத்த புகாரில் அமமுகவின் பேரூராட்சி செயலாளர் பொன்முருகன் கைது செய்யப்பட்டார். #LokSabhaElections2019 #AndipattiITRaids
    ×