search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual Discourse"

    • நம்மாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு 6 நாட்கள் கோவில் முன் சடகோபன் அரங்கில் இசை, பரதநாட்டியம், உள்ளிட்ட ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
    • பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பது திருவாய்மொழி .

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதி ஆழ்வார்திரு நகரியாகும். நம்மாழ்வார் அவதார திருவிழாவை முன்னிட்டு 6 நாட்கள் கோவில் முன் சடகோபன் அரங்கில் இசை, பரதநாட்டியம், உபந்யாசம் உள்ளிட்ட ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    அதில் ஒரு பகுதியாக திருக்குடந்தை மருத்துவர் உ.வே.க. வெங்கடேஷ் சுவாமி, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெருமை மற்றும் சாரம் பற்றி 2 நாட்கள் உபந்யாசம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

    ஒப்பற்ற ஊரானது ஆழ்வார்திருநகரி. ஒப்பற்ற சுவாமி சடகோபர். ஒப்பற்ற வைகாசி விசாகம். ஒப்பற்ற திருவாய்மொழி என மணவாள மாமுனிகள் சொல்லிபடி திருவாய்மொழி ஏற்றம் மிகுந்தது. திருவாய்மொழி வேதம். அதை தெரிவிப்பது நம்மாழ்வார். திருவாய்மொழி தெளிவும் நிம்மதியையும் தரக்கூடியது. ஆயிரம் வரும் ஆனால் நிம்மதி வருவதில்லை என பாடல் உண்டு. அந்த நிம்மதி தருவது திருவாய்மொழி. பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பது திருவாய்மொழி.

    இறைவனை உள்ளபடி காண்பிப்பது திருவாய்மொழி. இவ்வாறு 5 குறுந்தலைப்புகளில் சுருக்கமாக தெரிவிக்கிறேன். ஸ்ரீமந்நாராயணன் மந்திர மலையை மத்தாக்கி வாசுகி நாகத்தை கயிராக்கி கொண்டு திருப்பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்து கொடுத்தார். அதேபோல நம்மாழ்வார் தனது நாக்கை மத்தாக்கி வேதம் என்னும் கடலை கடைந்து திருவாய்மொழி என்னும் அமுதம் கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் உ.வே. வெங்கடேசுக்கு கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆதிநாதன், டாக்டர் கோகுல் சேதுராமன் ரகுராமன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழச்சிக்கான ஏற்பாடுகளை பூர்வசிகை வைஷ்ணவ சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான பத்திர காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூசாரி சண்முகராஜா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தார். பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். சந்தன அபிஷேகம், அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்வும், அன்னதானமும் நடந்தது. விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் கவுதமராஜா, செயலாளர் ஜெயராஜ், உதவி தலைவர் இளமாறன், துணைச் செயலாளர் அய்யப்பராஜா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் மகளிர், இளைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் கரு.கருப்பையா பேசுகிறார்.

    மதுரை

    முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணி யசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதையொ ட்டி நாள்தோறும் சன்னதி தெருவில் உள்ள கலையரங்கில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திர தினமான நாளை (5-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பட்டிமன்ற நடுவருமான மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு.கருப்பையா "கந்தன் கருணை" என்ற தலைப்பில் பேசுகிறார்.

    முன்னதாக திருப்பரங்குன்றம் வக்கீல் அழகுசுந்தரம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இதையடுத்து இரவு 7 மணிக்கு பசுமலை ஜெயாலயா நாட்டிய பள்ளி கீதாபாலா கலைக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

    • ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
    • “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் நடக்கிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

    இதில் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராமேசு வரத்திற்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. சொற்பொழிவு ஏற்பாடு களை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அக்டோபர் 1 முதல் 5-ந் தேதி வரை ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டது. எனவே மேற்கண்ட நாட்களில் வெளியூர் பக்தர்களுக்கு அறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ×