என் மலர்
நீங்கள் தேடியது "people"
- ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர்.
- சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தாராபுரம்:
விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி அன்று வருகிறது. அதையொட்டி தாராபுரம், உடுமலை பகுதியில் மண்பாண்ட கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தாராபுரம் உடுமலை ரோடு பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடுவர். அன்றைய தினம் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அதில் காவல் விநாயகர், மோட்டார் வாகன விநாயகர் என பல உருவங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். அன்று விநாயகருக்கு பிடித்தமான கொளுக்கட்டை, அவல்,பொறி மற்றும் இனிப்புகள் படையல் வைத்து பூஜைகள் நடைபெறும். சில இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
பின்னர் அடுத்த நாள் அல்லது 3 நாட்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான விநாயகர் சிலைகள் தற்போது தயாரித்து வருகிறோம். அந்த சிலைகள் அரை அடிமுதல் 3 அடி உயரம் வரை உள்ளதாக தயார் செய்து உள்ளோம். அவற்றிற்கு கண்ணை கவரும் வண்ணங்கள் கொடுத்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம்:
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஐசக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஐசக் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண் கள் நிர்வாணப்ப டுத்தி கொடுமைப்ப டுத்தப்படு கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எடுக்கப்பட்டுள் ளன. பாதிரியார்கள் தாக்கப்பட் டுள்ளனர்.இதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும்.
இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவ டிக்கை இல்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அரசில் மாற்றம் தேவை. தமிழக அரசு சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பாக உள்ளது. தமிழ கத்தில் தி.மு.க.வுக்கும், தேசிய அளவில் காங்கிரசுக்கும் எப்போ தும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல பேராயர் ஹெரால்டு டி.டேவிட், கிழக்கு மாவட்ட பேராயர் ஜோசப் மோகன்,மேற்கு மண்டல பேராயர் டேனியல், வடக்கு மண்டல பேராயர் டேவிட் குட்டி,கிழக்கு மண்டல பேராயர் பர்ண பாஸ், நாமக்கல் மாவட்ட பேராயர் சாமுவேல், முதன்மை பொது செயலா ளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் ஜான் ஐசக் ,சேலம் மாவட்ட தலை வர் ராமு செல்வராஜ்,சேலம் மாவட்ட பொருளாளர் பீட்டர், மேற்கு தொகுதி செயலாளர் மார்டின் செந்தில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
- கண்மணி என்பவர் படித்த பெண்கள் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
- பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அரவேணு,
கோத்தகிரி கிருஷ்ணாபுதூரை சேர்ந்த பொதுமக்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து இருந்தனர். அந்த மனுவில் கிருஷ்ணாபுதூரை சேர்ந்த கண்மணி என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக கூறினார்.
அதே பகுதியில் வசிக்கும் 5-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் கடன் பெற்று தருவதாகவும், படித்த பெண்கள் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்றார். இந்த வகையில் மட்டும் அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 80-க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு திருப்பி தராமல் மோசடி செய்து உள்ளார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த மனு கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கண்மணி நேற்று மதியம் வக்கீலுடன் வந்திருந்தார். தகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பண மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் முற்றுகையிட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
- மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .
உடுமலை:
உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.
எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.
- ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது
உடுமலை:
ஊஞ்சல் என்பது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்கு நாட்டார் இதனை கூலி என்றும் சூரிய என்றும் அழைக்கின்றனர். சிறுவர்கள் விழுதுகளை பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவர் .மரக்கலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுமியரும் ஊஞ்சலாடு வார்கள். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி ஜல்லிப்பட்டி, தளி உள்ளிட்ட இடங்களில் சிறுவர் சிறுமிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.
ஊஞ்சல் கொண்டாட்டம் குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது:- ஆடி 18ஐ நோன்பு என்று தான் அழைப்போம். ஒரு நாள் முன்பே ஜல்லிப்பட்டி கிராமத்திற்குசென்று விடுவோம். எப்பொழுது விடியும் என காத்திருப்போம். எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்பு குழந்தைகள் உடன் கதைகள் பேசி தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணி ஆகிவிடும். காலையில் பொம்மையன் கோவில் முன்பு பெரிய மரங்கள் நட்டு பெரிய அகலமான மரப்பலகையை உட்காருவதற்கான வசதியாக அமைப்பார்கள். அதற்கு சந்தனம் குங்குமம் மாவிலை கட்டி மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து அந்த ஊஞ்சலுக்கு கோவில் பூஜை செய்வர்.
குழந்தைகளுடன் முதல்முறையாக ஊஞ்சல் ஆடும் போது ரோல் கோஸ்டர் ஜெயின்ட் வீல் எல்லாம் தோற்றுவிடும். பெரியவர்கள் தோட்டத்து வேலைக்கு சென்று வந்த பின்பு இரவில் ஊஞ்சலாடி பாட்டுப்பாடி தங்களின் களைப்பை போக்கிக் கொள்வார்கள். முப்பது வருடங்களுக்கு முன்பாக கூட ஆடி 18 தினத்திற்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரிஆடிய துண்டு. ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் .வீட்டில் இருக்கும் உபகரணங்களிலேயே அதிக மகிழ்ச்சி தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாக அது குறைந்து காணாமல் போய்விட்டது .இந்த ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களின் வாழ்க்கைச் சக்கரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறைக்கு குழந்தைக ளுக்கு இதை மறக்காமல் கொண்டு போக வேண்டியது நமது கடமை.
னஇதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
- தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 21 -ந் தேதி நடைபெற உள்ளது.
- கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பொதுமக்கள் ஆவண ங்கள் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் செய்வதற்கு ஏதுவாக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டுக்கோட்டை, கும்பகோணம் பதிவு மாவட்டங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவ லகங்களின் எல்லைகள் சீரமைக்கப்படவுள்ளன.
இதுதொடா்பாக பொதுமக்கள் கருத்துகே ட்புக் கூட்டம் கும்பகோணம் பதிவு மாவட்டத்துக்கு கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (வியாழக்கிழமை ) நண்பகல் 12 மணியளவிலும், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்துக்கு பட்டுக்கோ ட்டை வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் 21 -ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) நண்பகல் 12 மணியளவிலும், தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் 21 -ம் தேதி பிற்பகல் 3 மணியளவிலும் நடைபெற வுள்ளன.
இக்கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு சாா் -பதிவாளா் அலுவலக எல்லைகளை சீரமைப்பு தொடா்பாக தங்களது கரு த்துகளைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது.
- பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரம் -மதுக்கரை சாலையில், பிள்ளையார்புரம் செல்லும் வழியில் நாகராஜபுரம் உள்ளது. இது கோவை மாநகராட்சி 97-வது வார்டுக்கு உட்பட்டது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நாகராஜபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மின்சாரம் இல்லை. எனவே அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது.
இதனால் அங்கு குடிமகன்களின் தொல்லை மட்டுமின்றி கூடவே வழிப்பறி, மிரட்டல் ஆகிய சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது.
எனவே பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவ, மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இங்கு 30 நாட்களுக்கு ஒரு முறை தான் போர்வெல் தண்ணீர் வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நாகராஜபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- களிமேடு பகுதியில் அதிகளவில் வணிக நிறுவனங்களும் உள்ளன.
- சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
காங்கேயம் :
காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேடு பகுதியில் அதிகளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.வணிக நிறுவனங்களும் உள்ளன. காங்கேயம் நகராட்சியின் 8 வது வார்டு ஆகும்.
சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இங்கு சி. எஸ் தேவாலயம் எதிரே செல்லும் கே. எஸ். ஆர் சந்து பகுதி கடந்த 4 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பணிகள் தொடங்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் சரிவர பணிகள் நடக்கவில்லை. ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அவதி அடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர்.
அதன் பிறகும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை. விரைந்து பணிகளை முடிக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
- மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
உடுமலை :
உடுமலை அடுத்த ஆனைமலை காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகு தியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது.
இங்கு மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலுக்கு உடுமலை பகுதியில் மட்டுமின்றி வெளி மாவட்ட ங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோடந்தூர் சுற்றுச்சூழல்குழு மற்றும் வனத்துறை இணைந்து செயல்படுத்தி வரும் வாகனங்களில் ஏறிச்சென்று கோவிலை அடைந்தனர்.அதைத் தொடர்ந்து ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.மேலும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், சாம்பிராணி, வடுமாங்காய், எலுமிச்சை மற்றும் தேன், தைலம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இயற்கையில் விளைந்த பொருட்கள் என்பதால் அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.
கோடை காலத்தில் வருமானத்தை இழந்து தவித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த பொருட்கள் கைகொடுத்து உதவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் சாகுபடி பணிகளுக்கு மழைவாழ் மக்கள் விளை நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.
- ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர்.
- ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.
பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.